Wednesday, June 16, 2010

20 : மனம் உருவான வரலாறு

இப்பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களையும் போல நீங்களும் ஒரு பொருள்தான். ( இப்பிரபஞ்ச பொருள் ) எல்லா பொருட்களுக்கும் தொடர்ந்து வாழ விருப்பம் இருப்பது போல உங்களுக்கும் நீடித்து வாழ விருப்பம் உள்ளது. இது பிரபஞ்ச பொதுஇயல்பு .உங்களின் 'வாழவேண்டும்' எனும் விருப்பமே மனமாக விருத்தியாகி செயல்படுகிறது என்பதை நாம் உணர வேண்டும். இந்த மனம் உருவான வரலாறு - தன் உயிருக்கு ஆபத்தை உண்டாக்குவது எது? தனக்கு பாதுகாப்பாக இருப்பது எது? என்பதைப்பற்றிய தகவல் தொகுப்பே 'மனம்' .( memory) மனம் இதன் அடிப்படையிலேயே செயல்படுகிறது. உங்கள் மனதில் எழும் எல்லா சிந்தனைகளும் , நினைவுகளும் உங்களின் 'பாதுகாப்பின்' அடிப்படையிலேயே நிகழ்கிறது. - என்பதை நாம் அறிய வேண்டும். நீங்கள் வந்த வேலை முடிந்து விட்டது என அறிந்தால், ( வாழ வேண்டும் எனும் ஆசை மறைந்து விடும்போது ) உங்கள் மனம் ஓய்வெடுக்க விரும்புகிறதை அறிவீர்கள். வாழும் ஆசை இருக்கும்வரை மனதின் ஓட்டத்தை நிறுத்துவது மிகவும் கஷ்டம். நம் வாழும் ஆசையே மனமாக செயல்படுகிறது.

No comments:

Post a Comment