Tuesday, June 29, 2010

33 : சுவாசமும், மின் மற்றும் காந்த புலன்களும்.

காலை தியானத்தின்போது ஓம் சாண்டிங் பயிற்சி முடித்து 'நாடிசுத்தி' எனும் சுவாசப்பயிற்சியின்போது வலது நாசியை மூடி , இடது நாசி வழியாக உள்ளிருக்கும் காற்றை சீராக , மிக சீராக, காற்றை மெதுவாக நடத்தி , மெதுவாக, மிக மெதுவாக நடத்தி வெளி விடல் வேண்டும். முழுக்காற்றையும் வெளி விட்டபின் , அப்படியே அதே நாசியில் சுவாசக்காற்றை உள்ளிழுக்க வேண்டும்.முடிந்த மட்டும் நிறைவாக காற்றை இழுத்து, சுவாசப்பையை நிறைத்து , பின் இடது நாசியை மூடி, வலது நாசி வழியாக உள்ளிருக்கும் காற்றை சீராக , மிக சீராக, காற்றை மெதுவாக நடத்தி , மெதுவாக, மிக மெதுவாக நடத்தி வெளி விடல் வேண்டும். இப்படி மெதுவாக, மிக மெதுவாக என்பது ஒரு நடையாக அல்லாமல் ஒரு ஆமையின் நகர்வாக நகர்தல் நலம்.எவ்வளவு உங்களால் முடியுமோ அவ்வளவு தாமதமாக , ( இது நீண்ட காலமாக தியானம் செய்து வருபவர்களால் மட்டுமே முடியும்) இந்த நகர்தல் சற்று நின்றாலும் , அந்த 'அசைவற்றகணம்' உன் நுகர்வு தளம் முழுமைக்கும் ஒளிபிரவேசிக்கும். அக்கணம் நீ ஒளித்தன்மையையடைவாய்.இப்படி ஆழ்ந்து நீடித்த சுவாசப்பயிற்சி செய்வோர் இந்நிலையை அறிந்துணர முடியும். இந்த மூச்சுக்காற்றின் அடிப்படை ( இயற்பியல் சூத்திரம் ) என்னவென்றால், நாம் வலது நாசி வழியாக உள் இழுக்கும் காற்று நமது உணர்வு மண்டலத்திற்கு காந்தப்புலத்தை வலிமையடைய செய்வதாகவும், நமது இடது நாசி வழியாக உள் இழுக்கும் காற்று நமது உணர்வு மண்டலத்திற்கு மின் புலத்தை வலிமையடைய செய்வதாகவும் இருக்கிறது.இந்த இரண்டு ( காந்த மற்றும் மின் ) புலன்களும் வலிமையானவுடன் வினைபுரிய துவங்கி அது எண்ணங்களாக விகசிக்கிறது கண்கூடு. நமது தியான நிலையில் நாம், நமது எண்ணங்களை களைந்து ( கடந்து ) பிரவேசிக்க வேண்டியிருப்பதால், இந்த சுவாச ரகசியத்தை அறிந்துகொள்ள வேண்டியதாக இருக்கிறது. நமது 'தியானித்தல்' சரியான நிலைமைக்கு வரும்போது , நமது மூச்சுக்காற்று வலது நாசியிலும் அல்லாமல், இடது நாசியிலும் அல்லாமல் நம் புருவ மத்தியிலுள்ள சுழுமுனை எனும் இடத்தில் , இட வல சிற்றசைவாக துடித்து ( அந்த குறு இட நிலையில், மின் புலமும், காந்த புலமும் வினை புரிய அந்த வினை ஒளியாக துலங்க) அந்த ஒளியே உன் நுகர்வுக்கு கிடைக்கிறது. நமது நுகர்வுக்கு அப்போது ஒளிமட்டுமே நுகர்வாகும். இந்த ஒளி நிலையே 'மின் காந்த அலை தளம்' .

Saturday, June 26, 2010

32 ; உணர்வு தகவமைப்பு.

நமது காலை நேர ஆழ்ந்ததியான நிலையில் நமது புருவ மத்தியில் ஒளிப்பிரவாகம் தோன்றும். அந்த ஒளிப்பிரவாகம் நம் உடல் முழுவதும் சுடர்வதாகவும், நம் ஒவ்வொரு அங்கமும் சுடர்வதாக, நம்முடைய ஒவ்வொரு திசுவும் சுடர்வதாக, நம்முடைய ஒவ்வொரு அணுவுமே சுடர்வதாக, ஏன் அந்த அணுக்களிலுள்ள நேர்மின் துகள்கள், எதிர்மின் துகள்கள், நிலைமின் துகள்களும் சுடர்வதாக பாவித்து வர அந்த ஒளிச்சுடர் உணர்வு தண்டுவடத்தில் சுடர்ந்து , அந்த ஒளித்தண்டுவடம் பிளந்து (ஒளி துலங்கி 'நான்' எனும் 'நிழலான கவனம்' மறைந்து தொலைய ) இப்போது ஏக ஒளிப்பிரவாகம் தோன்றும். எப்போதும், எங்கும், எதிலும் ஒளியே . இந்த ஒளித்தன்மையே மின்காந்த அலைத்தளம். இந்த ஒளிநிலையில் நீங்கள் எவ்வளவு நேரம் நீடிக்க முடியுமோ அந்த அளவுக்கு உங்கள் அறிவு தெள்ளத் தெளிவாகும். ( இது நூற்றுக்கு நூறு சத்தியம்) இது அறிவில் இப்படி மாற்றத்தை செய்வதோடல்லாமல், உங்கள் உள்ளே நிகழும் உணர்வு தகவமைப்பையும் சீர் படுத்துகிறது. ( இந்த உணர்வு தகவமைப்பே சர்வமும்) ஆகையினாலேயே புத்தர்பிரான் இந்த உடலுக்கு வெளியே நிகழும் பிரபஞ்சத்தைப்பற்றியோ, மக்களால் நம்பப்பட்டுக்கொண்டிருந்த, இந்த அண்ட புவனங்களை ஆக்கி, காத்துக்கொண்டிருப்பதான 'கடவுள்' பற்றியோ அவர் எதுவும் மக்களுக்கு தெரிவிக்கவில்லை. என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இது இப்படியிருக்க, இந்த தியான நிகழ்வை நீங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திலேயே செய்துவரல் வேண்டும். இது மிக முக்கியம். இதை நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்திலேயே செய்து வருவது , உங்கள் உணர்வுதன்மையில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு தலைசிறந்த உத்தி.

Thursday, June 24, 2010

31:அறி உணர் நுட்ப மட்டங்கள்.

இந்த பிரபஞ்சம் எப்படி இருக்கிறதோ - ஒரே முழுப்பிரபஞ்சமாக, பால்வீதி மண்டலமாக, நட்சத்திரங்களாக, பூமியாக, கல்லாக, மண்ணாக, நீராக, செடி,கொடிகளாக, பொருளாக, உயிராக,மூலக்கூறாக,உயிர்செல்லாக, அணுவாக, அணுவினுள் அமைந்த மின் துகள்களாக, துகள்களை உருவாக்கும் மின் காந்த அலைகளாக, மிக நுட்பமான குவாண்ட ஆற்றலாக - இப்படி பல்வேறு மட்டங்களில் இப்பிரபஞ்சத்தை நாம் அறியமுடியும்.
நாம் எங்கிருந்து அளவிடுகிறோமோ அந்த தளத்தை 'ஆதாரத்தளம்' (frame of reference) என்று அழைக்கலாம். குவாண்ட ஆற்றலில் துவங்கி , மின் காந்த அலை,அணுத்துகள், அணு, மூலகம், கல், மண், பூமி,நட்சத்திரம் ,பால்வீதி, பிரபஞ்சம் இப்படி விகசிக்கிறது.
அதுவே அடிப்படை நுட்பமாக நோக்கினால், பிரபஞ்சம்,பால்வீதி, நட்சத்திரம், பூமி, உயிர் , மூலகம், அணு, மின் காந்த அலைகள், குவாண்ட ஆற்றல் என நுணுகிக்கொண்டு போகிறது.
இதில் மனிதன் இருக்கும்(frame of reference) 'ஆதாரத்தளம்'எதுவென அறிவீர்களாக!

நம்மை விட அகண்ட,விரிவான பூமி, நடசத்திரம் , பால்வீதி, பிரபஞ்சம் - இந்த 'ஆதாரத்தளங்களை' அறிந்துணர நாம் நமக்கு வெளியே பயணம் மேற்கொள்ள வேண்டும்.அல்லது தொலை நோக்கியால் பிரவேசிக்கவேண்டும் வெளி நோக்கி.


மனிதனின் கிடை மட்டத்தில் உள்ள செடிகொடி,பொருள்,காடு, மலை, நதி மற்றும் நீங்கள் எப்படி எதுவெல்லாம் உண்மை என நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களோ அவைகள் அனைத்தும். இப்போது துலங்கும் நம்முடைய ஐந்து புலன்களாலேயே அறிந்துணர முடியும்.இதுவே நமது 'ஐம்புலன்ஆதாரத்தளம்'.
மனிதனை விட சுருக்கமான மூலகம்,அணு,மின்காந்த அலை, குவாண்டம் ஆற்றல். போன்ற மிக நுட்பமான அறியுணர்வை,('ஆதாரத்தளங்களை') - பொருட்களால் கட்டப்பட்ட இந்த உடலை முழு ஓய்வில் இருத்தி நாம் 'நம்முள்ளே'( inner travel) பிரவேசிப்பதன் மூலமே - உடலை அசைவின்றி ஓய்வில் இருத்தினால் மனம் தானே ஓய்வில் ஒடுங்கும்- மனம் கடந்து, நமது அடிப்படை இருப்புணர்வில் ( தியானத்தில்) நம் அறியுணர்வை நிறுத்தினால் அணுத்தளம்,மின்காந்த அலைத்தளம், குவாண்ட ஆற்றல்தளம் ஆகிய இந்த 'ஆதாரத்தளங்களில்' சஞ்சரிக்க முடியும்.
நாம் கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் இருக்கும்போது நாம் இருக்கும் ( மனித மட்டத்தாலான 'ஆதாரத்தள' )உணர்வேயில்லாது இருக்கிற நிலையே அணுத்தளம்.( 'அணு ஆதாரத்தளம்' ).
நம் புருவ மத்தியில் தோன்றி பிரகாசிக்கும் ஒளியே மின்காந்த அலைத்தளம்.( 'மின்காந்தஆதாரத்தளம்' ).
எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் பூரண தன்மையே குவாண்ட ஆற்றல் தளம்.( 'குவாண்ட நிலை ஆதாரத்தளம்' ).

1, பிரபஞ்ச நிலை ஆதாரத்தளம்
2, உடுமண்டல நிலை ஆதாரத்தளம்
3, நட்சத்திர நிலை ஆதாரத்தளம்
4, கிரகநிலை ஆதாரத்தளம்
5, உயிர்நிலை ஆதாரத்தளம் ( மூளை, மனம்)
6, மூலகம் ஆதாரத்தளம்
7, அணு நிலை ஆதாரத்தளம்
8, மின்காந்த அலை ஆதாரத்தளம்
9, குவாண்ட நிலை ஆதாரத்தளம்

30: குவாண்ட உலகம்

ஒரு குவாண்ட ஆற்றலானது ( எதிர் மின் துகளான ) எலெக்ட்ரானை பொறுத்தவரையில் மிக மிக முக்கியமானதாக இருக்கிறது. இரண்டும் ஒன்றோடு ஒன்று உறவாடும் போது எலக்ட்ரானுக்கு பெருத்த விளைவு ஏற்படுகிறது. ஒரு பொருளின் அளவை 10^ -27 cm என்று எண்ணிக்கொள்ளுங்கள். அப்பொருளை பக்கம் பக்கமாக அடுக்கி 1cm நீளம் வரை வைக்க முயலுங்கள். எத்தனை பொருள் வைத்தால் 1cm நீளம் கிடைக்கும் என பார்த்தால் அது 10^27 என்பதை வெறும் கணக்கின் உதவியால் சொல்லிவிடலாம். இனி 10^27 என்றால் எத்தனை என்று பார்ப்போம். சர்க்கரை பருக்கை ஒன்று 1mm இருக்கலாம் 10^27 சர்க்கரை பருக்கைகளை பக்கம் பக்கமாக அடுக்கினால் அது ஒரு பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவு தூரம் செல்லும். இந்த பிரபஞ்சத்தை காட்டிலும் சர்க்கரை துகள் எந்த அளவுக்கு சிறியதோ அந்த அளவுக்கு குவாண்ட உலகம் சர்க்கரை துகளைவிட சிறியது. நமக்கு பிரபஞ்சத்தின் விசுவரூபம் ஒரு பக்கமும் , அணுவின் நுட்பத்திற்கும் நுட்பமான அளவு இன்னொரு பக்கமும் இருக்கிறது. நாம் நடுவில் இருக்கிறோம்.

நன்றி :: அணு, உயிர், அண்டம். ...கலைக்கதிர் அச்சகம். கோவை.

29,மின் காந்த அலைகள் .

மின் புலத்தை அசைக்கும்போது அங்கே காந்த அலையும், ஒரு காந்த புலத்தை அசைக்கும் போது அங்கே மின் அலையும் தோன்றுகின்றன. - மின் புலமும், காந்த புலமும் அடுத்தடுத்து மாறி மாறிப் பரவுவதாக ஜேம்ஸ் மேக்ஸ்வெல் என்பவர் ஒரு சமன்பாட்டை உருவாக்கினார். அதை நாம் மின்காந்த அலை என்கிறோம். ஒளி என்பதுவும் அதுவே. சூரிய ஒளி, விளக்கொளி, ரேடியோ அலை, நெருப்பிலிருந்து வரும் அனல், புற ஊதாக்கதிர், x-கதிர், காம்மா கதிர், ஆகிய அனைத்தும் பல்வேறுவகை ஒளிகளே. அனைத்தும் மின் காந்த அலைகள் குடும்பத்தின் அங்கத்தினர்களே.
நன்றி :: அணு, உயிர், அண்டம். ...கலைக்கதிர் அச்சகம். கோவை.

Wednesday, June 23, 2010

28 : இணைப்பு

நீங்கள், நான், இந்த பூச்சி, அந்த குதிரை, அந்த நாய், இதோ இந்த மரம், பூத்து குலுங்கும் இந்த கொடி,ஒரு எறும்பு, எதுவுமே தனி, தனி செயல்பாடு உடையதாகவே இருக்கிறது. இந்த பூமி, அந்த நிலா, புதன், சுக்கிரன், வியாழன், சனி என கிரகங்களும் தனி, தனி செயல்பாடுகள் உள்ளதுதான். நம்மோட சூரியன், மற்றும் நட்சத்திரங்களும் தனி,தனி செயல்பாடுகள் உள்ளவைதான். உங்களோட பால்வீதி மண்டலம் ,அதேப்போன்ற கோடிக்கணக்கான மண்டலங்கள் அனைத்துமே தனி,தனி செயல்பாடுகள் கொண்டவைதாம். ஏன்? ஒவ்வொரு அணுக்களுமே தனி, தனி செயல்பாடுகள் கொண்டவைதான். நம் தியானத்தில் , தியானத்தின் அமைதியில் , அமைதியின் ஆழத்தில், வெளியுலக தொடர்பை தாண்டி, எண்ணம்,அக காட்சிகளையும், மனதின் செயல்பாடுகளையும் தாண்டி, மனமற்ற வெளியில் , உடல் இருப்புணர்வையும் கடந்து, ஆழ்ந்த மோனத்தில்,- நான், நீ, அது என்ற விகல்பம் இன்றி, அனைத்து பொருட்களின் அடிப்படை இணைப்பாக , விகல்பமற்ற ஓர் ஒர்மையுணர்வு துலங்குகிறது. இது ஒவ்வொரு பொருளின் அடிப்படை தன்மையே . ஒவ்வொரு அணுவின் அடிப்படைத்தன்மையும் இதுவே. இதன் உணர்வுதன்மை மின் தன்மையதாக இருக்கிறது. அனைத்து பொருட்களுமே அடிப்படையில் மின் தன்மையதாகவேயுள்ளது.இந்த பிரபஞ்சம் தொடங்குமுன் இருந்ததும் வெறும் மின் மட்டுமே! இந்தநிலைமின், நேர் மின், எதிர்மின், என விகல்பமானதாலேயே இப்பிரபஞ்சம் தோன்றியிருக்கிறது. ( இந்த பிரபஞ்சத்தின் அடிப்படை 'அலகே' அணுதான். ( நமது அடிப்படை 'அலகு'ம் அணுதான். ) அந்த அணுவும் மூன்றுவித மின் துகள்களாலானது . 1,நேர்மின் துகள், 2, எதிர்மின் துகள், 3, நிலை மின் துகள். ஒரு அணுவின் உருவத்தில் நூறு ட்ரில்லியனில் ( 100,000,000 ) ஒரு பகுதிதான் கெட்டியான உட்பகுதி ( கருமையம்) இந்த பகுதியில் நேர்மின் துகளும், நிலைமின் துகளும் அடர்ந்து பிணைந்துள்ளது. அணுவின் வெளிவட்டத்தில் எதிர்மின் துகள்கள் சுற்றிவருகிறது. இடையில் இருக்கும் மீதியெல்லாம் வெற்றிடம்தான். பெரிதாக இருக்கும் இவ்வுலகம் நீங்கள், உங்கள் நாற்காலி, இந்த கம்ப்யூட்டர், ஆகிய யாவும் பெரும்பாலும் வெற்றிடத்தால் ஆனதுதான். இருப்பினும் நமது உடலும், பொருட்களும் கெட்டியாக இருப்பதற்கு காரணம் அணுவின் கருவைச்சுற்றி மேகம்போல் சூழ்ந்திருக்கும் மிக விரைவாக சுற்றிவரும் எதிர்மின் துகள்களால்தான்.) இந்த அகிலமே வெறும் மின்னோட்டமட்டும் உடையதுதான்.அந்த மின் தன்மையே நமது தியானத்தில் உணரப்படுகிறது.
இந்த ஒர்மையுணர்வே அனைத்தையும் இணைக்கிறது.நமது ஆழ்ந்த அடிப்படை உணர்வான இந்த மின்தன்மை நம்மையும் தன்னோடு இணைக்கிறது.

Tuesday, June 22, 2010

27 : மிக அடிப்படையான ஒரு விஷயம்.

ஆன்மீக உலகில் உள்ள அனைவருக்கும் வணக்கம். 'மிக அடிப்படையான' ஒரு விஷயத்தைப்பற்றி இப்போது பார்ப்போம். இதுவரை ஞானம் அடைந்த பெரியோர்களில் அநேகமானவர்கள், ஞானமடைந்த பின் அந்த ஞான நிலையுணர்வை மக்களுக்கு தெரிவிக்கும் வழியாக - தங்களின் பழைய மனதையே உபயோகிக்கின்றனர். என்பது கண்கூடு. இதனாலேயே உலகில் இத்தனை வேறுபாடுகளாலான மதங்கள் தோன்றியுள்ளன. அதாவது ஞான நிலை என்பது, இந்த மனித உயிருக்கு எல்லா கால கட்டத்திலும், எல்லா கலாசாரத்திலும், எல்லா மொழிகளிலும், எல்லாவித பழக்க, வழக்கம் உள்ளவர்களிடையேயும் ஒரே விதமாகவே நிகழ்ந்திருக்கிறது. புத்தரிடம் நிகழ்ந்த ஞான நிகழ்வுக்கும், யேசுவிடம் நிகழ்ந்த ஞான நிகழ்வுக்கும், முகமது நபியிடம் நிகழ்ந்த ஞான நிகழ்வுக்கும், இந்து மத முனிவர்களிடம் நிகழ்ந்த ஞான நிகழ்வுக்கும், மகா வீரரிடம் நிகழ்ந்த ஞான நிகழ்வுக்கும் ஒரு இம்மியளவு கூட வித்தியாசம் இருக்க வாய்ப்பில்லை. இது சரியாக ஆன்மீகத்தில் உள்ள அனைவரும் எந்த மறுப்புமின்றி ஒப்புக்கொள்ளும் உண்மை. ஒரு வேதியியலுக்கு 'நிரூபணம்' உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும், அனைத்து மொழிகளிலும் ஒன்றே தான். ஒரு இயற்பியலுக்கு 'நிரூபணம்' உலகிலுள்ளஅனைத்துநாடுகளிலும்,அனைத்து மொழிகளிலும் ஒன்றே தான்.ஒரு கணிதவியலுக்கு 'நிரூபணம்' உலகிலுள்ள அனைத்து
நாடுகளிலும், அனைத்து மொழிகளிலும் ஒன்றே தான். ஒரு தாவரயியலுக்கு 'நிரூபணம்' உலகிலுள்ள அனைத்து
நாடுகளிலும், அனைத்து மொழிகளிலும் ஒன்றே தான்.ஏன்?
உயிரியலுக்கே கூட 'நிரூபணம்' உலகிலுள்ள அனைத்து
நாடுகளிலும், அனைத்து மொழிகளிலும் ஒன்றே தான்.ஆனால்? இந்த ஆன்மீக இயலுக்கு மட்டும் ஏன் இத்தனை வித மதங்கள்? இத்தனை வித கடவுள்கள்?, இத்தனை வித நிறுவனங்கள், இத்தனைவித குருமார்கள், இத்தனை விதமான போதனைகள்,இத்தனை விதமான வழிகாட்டல்கள்?. இந்த ஆன்மீகஇயலுக்கும் ஒரு அறிவியல் விளக்கம் அவசியம் தேவை. சொல்லவேண்டிய விஷயங்களை நேரிடையாக சொல்லக்கூடிய அறிவியல் விளக்கம். அது எல்லா நாட்டினருக்கும், எல்லா இனத்தவருக்கும், எல்லா மொழியினருக்கும் பொருந்துவதாக இருக்க வேண்டும் .அந்த முயற்சியில் தான் இந்த கட்டுரைகள் எழுதப்படுகின்றன. ஆம், அறிவியலான ஆன்மீக நிரூபணதுக்காக!.

26 : இயற்கை விதி

நாம் தியானம் முடிந்து கண்விழித்து பார்க்க துவங்கியவுடன் மனம் விழித்துக்கொள்கிறது. மீண்டும் அது தன்னியல்பிலேயே ஒடதொடங்கிவிடுகிறது.சரி, நம் மனதின் இயல்பு எப்படிப்பட்டது என பார்ப்போம்.உதாரணமாக, நம் முன்னாள் ஒரு மோட்டார் சைக்கிளில் ஒரு இளம் ஜோடி சந்தோசமாக, சிட்டென பறந்து போகிறதைப்பார்த்ததும்; ஆகா! இந்தமாதிரி வாய்ப்பு நமக்கு உண்டா? என கேள்வி கேட்டு, பொருத்திப்பார்க்கிறது மனம்.( அப்படி வாய்ப்பு இருந்தால் , மனம் நிறைவடைகிறது. இல்லையென்றால் ' தனக்கு ஒரு புது மோட்டார்சைக்கிள் இல்லை', அல்லது 'என் மனைவி இந்த பெண்ணைப்போல' அவ்வளவு அழகாக இல்லை.அல்லது, இந்த ஜோடி மாதிரி உணர்வை நாமும் உணர்ந்து பார்க்கவேண்டும் என எண்ணுகிறது.) 1, அதாவது உங்கள் மனதுக்கும் உங்களுக்குமிடையில் ஒரு நல்ல தொடர்பு இல்லாத பட்சத்தில் , உங்கள் மனம் இப்படி தன்போக்கில் போக வேண்டியிருக்கிறது. உங்களுக்கு தொடர்பு இருந்தால் , உங்களால் உங்கள் மனதுக்கு பதில் சொல்லி அதை சமாதானப்படுத்த முடியும். 2,உங்கள் மனம் தனக்கென சில விதிகளை கற்றுக்கொண்டிருக்கிறது. உங்கள் மத விதி, உங்கள் ஜாதி விதி, உங்கள் குடும்ப விதி , 'உங்களி'ன் பொருளாதார விதி. இப்படி இன்னபிற விதிகள். உங்களின் மனதை இனி, இயற்கை விதி என்ன? என ஆராய சொல்லுங்கள். தியானம் முடித்து எழும்போது உங்கள் மனதிடம் இதை சொல்லுங்கள். நீங்கள் நீண்ட நாட்களாக தியானம் செய்பவராக இருந்தால் இந்த ஆராய்ச்சிக்கு உடனடி பலன் ஏற்படும். இயற்கை விதி என்பது , இந்த பிரபஞ்ச விதி, நம் உடல் இயங்கும் விதி, இப்படிப்பட்ட அடிப்படை விதிகள்.

Monday, June 21, 2010

25 : நம் வள்ளலுக்கு ஒய்வு கொடுப்போம்.

உங்கள் மனம் உங்களுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, உங்களுக்காக இடையாறாது, இரவு பகலாக உழைத்து வந்திருக்கிறது. அல்லது அதன் மீது நீங்கள், சற்றும் ஈவு இரக்கமின்றி, கொஞ்சமும் தாட்சண்யமின்றி அதனிடம் - உங்கள் சுயநலத்திற்காக - இடையாறாது ( கொஞ்ச நேரமும் ஒய்வு இன்றி ) வேலை வாங்கியிருக்கிறீர்கள். உங்கள் மனமோ தன் சக்தியையும் மீறி உங்களுக்காக உழைத்துக்கொண்டு இருக்கிறது 'இன்னும்' ஒரு அடிமைப்போல . அதனிடம் தன்னையே தியாகம் பண்ணும் வள்ளல் தன்மையும் உள்ளது. நீங்களோ ஒரு சொகுசான பேர்வழி. அனால் உங்கள் மனம் அப்படியல்ல! உங்களை முழுதுமாக உங்கள் மனதிடமே ஒப்படைத்துவிட்ட சோம்பேறி நீங்கள். நீங்கள் ஒரு மாபெரும் சோம்பேறி.உங்களுக்காக உங்கள் மனம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம், ஏராளம். அது பட்ட கஷ்டமும் கொஞ்சமல்ல! உங்களுடைய அனைத்து தேவைகளையும் அது நிறைவேற்றியிருக்கிறது. உங்களுடைய துர் இச்சைகளையும் கூட அது நிறைவேற்றி கொடுத்துள்ளது. உங்களுக்கு அரணாக, பாதுகாவலாக, உங்களை ரட்சிக்கும் ரட்சகனே உங்கள் மனம தான். அப்படிப்பட்ட உங்கள் மனதுக்கு கைமாறாக நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் ? குறைந்தபட்சம் உங்கள் மனதுக்கு கொஞ்சம் ஓய்வாவது கொடுக்கலாம். இன்றிலிருந்து அதற்க்கு கொஞ்ச, கொஞ்ச நேரம் ஒய்வு கொடுக்க ஏற்பாடு செயுங்கள் உண்மையாகவே நீங்கள் நன்றியுள்ளவராக இருந்தால்! நீங்கள் உங்கள் மனதுக்கு சற்று ஒய்வு கொடுக்க விரும்புபவராக இருந்தால் இந்த உதவிக்குறிப்பை கவனித்து படியுங்கள்.

* குறிப்பு : உங்கள் மனம் என்பது உங்களை காப்பாற்றிவரும் , உங்கள் தன்முனைப்பு அமைப்பு. அது தன்னிகரற்ற சக்தி. அது செயல்படும் விதமானது உங்களை மையப்படுத்தியே செயல்படும். உங்களைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் , உங்களுக்கு இடையூறு உண்டாக்கும் செயல் ஏதாவது ( அல்லது அதற்க்கான காரணங்கள் ஏதாவது ) நடக்கிறதா? என்பதிலேயே கவனமாக இருக்கும். உங்களை சுற்றி நடக்கும் செயல்களில் மட்டுமல்ல , உங்களுக்குள் எழும் எண்ணங்களை கூட அவ்வண்ணமே கவனிக்கும் தன்மையுடையது. அவ்வளவு துல்லியமான கவனம் கொள்ளும் உங்கள் மனதுக்கு ஒய்வு கொடுப்பது என்பது , அதனுடைய துல்லிய தன்மைக்கு குறையாத கவனத்துடன் விழிப்புணர்வோடு இந்த மனதிற்கு சற்று ஒய்வு அளிக்கவேண்டும். நீங்கள் ஒரு தூய விழிப்புணர்வோடு ஏகாந்த தன்மையில் கவனம் பிசகாமல் நடந்து வந்தால் -( இப்போது மனம் சற்று சும்மா இருக்காது. அவ்வப்போது இயங்க தொடங்கும். பாவம் அதன் பழக்க தோஷம் அது) - இப்போது மனதோடு வாஞ்சையாக பேசி அதை ஓய்வெடுக்க செய்ய வேண்டும். உங்கள் மனதுக்கு அவ்வப்போது ஒய்வு கொடுப்பதுதான் நீங்கள் அதற்க்கு செய்யும் கைம்மாறு. இவ்வளவு நாள் அது உங்களை காப்பாற்றி வந்ததுபோல, நீங்களும் அதை காப்பாற்ற வேண்டும். இதுவரை ஒரு தீவிர விழிப்புணர்வு உங்கள் மனதிடம் செயல்பட்டது போல , இனி அதேயளவு தீவிர விழிப்புணர்வை உங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள் அவ்வளவே.

Saturday, June 19, 2010

24 : உலகு - உடல் - உள்ளம் - உயிர் - உண்மை .

ஐந்து வித தன்மைகள் இருக்கிறது. 1,உலகு , 2,உடல் , 3,உள்ளம் , 4,உயிர் , 5,உண்மை . இதில் உண்மையை சூழ்ந்து உயிர் உறையாக பாது காக்கிறது. உயிரை சூழ்ந்து உள்ளம் உறையாக பாதுகாக்கிறது.உள்ளத்தை சூழ்ந்து உடல் உறையாக பாதுகாக்கிறது.உடலை சூழ்ந்து உலகு உறையாக பாதுகாக்கிறது.
அதாவது உலகு எனும் உறைக்குள் உடல் இருக்கிறது . உடல் எனும் உறைக்குள் உள்ளம் இருக்கிறது . உள்ளம் எனும் உறைக்குள் உயிர் இருக்கிறது . உயிர் எனும் உறைக்குள் உண்மை இருக்கிறது . இது மனித வாழ்வுக்குமட்டுமல்ல, இந்த பிரபஞ்சத்துக்கே பொதுவான நிலைமையாக இருக்கிறது . உலகு =இப்பிரபஞ்சம் . உடல்= ஸ்தூலப் பொருட்கள் , உள்ளம் = வேதியல் வினைகள் , உயிர்= ஈர்ப்புவிசை,காந்தப்புலன், மின்னோட்டம், உண்மை= உண்மை. அதாவது எப்போதுமே இருப்பது உண்மை . உண்மையிலிருந்து விகசிப்பது உயிர். உயிரிலிருந்து விகசிப்பது உள்ளம். உள்ளத்திலிருந்து விகசிப்பது உடல். உடலிலிருந்து விகசிப்பது உலகு. உள்ளிருப்பது உண்மை, அடுத்த அடுக்கில் உயிர், அடுத்த அடுக்கில் உள்ளம், அடுத்த அடுக்கில் உடல் , அடுத்த அடுக்கில் உலகு ஆனால் இவை அனைத்தும் 'ஒன்று' தான், நீங்கள் உண்மையில் இருந்தால்!

Friday, June 18, 2010

23 : இடைத்தரகர்கள்

நீங்கள் இருக்கிறீர்கள் இதை நீங்கள் அறிவீர்கள் . உங்களின் இருப்பு உணர்வு உங்களில் எங்கு மையம் கொண்டுள்ளது? இதை நீங்கள் ஒரு ஆழ்ந்த தியானிப்பின் மூலமே அறிந்துணர முடியும். உங்களின் இருப்பு உணர்வை நீங்கள் அறியும்போது அந்த உணர்வு ஒரு காட்சியாகவோ அல்லது ஒரு சப்த உணர்வாகவோ , ஒரு ருசியாகவோ , ஏன் உங்களின் ஐம்புல உணர்வுகளில் ஒன்றாகவோ அது இருக்காது.நீங்கள் இதுவரை அறியாத ஒரு உணர்வாகவே அது இருக்கும். அது ஆறாவது ஒரு உணர்வாகவே இருக்கும். உங்களின் ஐம்புல உணர்வுகள் ஒரு முழுமையை நோக்கிய ( குறையின் தவிப்பு- incomplete-குறைகுடம். ) உணர்வுகளே . இந்த ஆறாவது உணர்வோ முழுமையானது ( absolute-நிறைகுடம் ) அனைத்தையும் உள்ளடக்கிய,முழுநிறைவான , பூர்த்தியான,பூரண தன்மையானது. இந்த உங்கள் இருப்புணர்வின் மையத்திலிருந்து - இப்பிரபஞ்சத்தின் மகா இருப்புணர்வை நோக்கி இந்த இரு உணர்வையும் இணைப்பதே ஞான நிலையையடைதல் என்பது. அந்த பிரபஞ்ச மகா இருப்புணர்விலிருந்து விகசித்து, உணர்வு, எண்ணமாக, எண்ணம் பொருளாக விகசித்து விரிவடைவதே இப்பிரபஞ்சம்.அங்கிருந்தே நீங்களும் வந்தீர்கள் . உங்களுடைய இருப்புணர்வு அந்த மகா இருப்புணர்வின் தொடராகும். விஷயம் என்னவென்றால்,உங்களுள் நிகழும்-உங்களுள் துவங்கி உங்களுள் நிறைவாகும் - இந்த இருப்புணர்வின் இணைப்புக்கு இடையில் ( தரகர்கள் - கடவுள் , மதம் , குரு - எவரும் கிடையாது ஏன், இங்கு எந்த வியாபாரமும் கிடையாது ) உங்களுக்குள்ளே வந்து கடை விரிக்கும் கூட்டம் தான் இவர்கள் . அதாவது உங்களுக்கும் உங்கள் மூலத்துக்கும் நடுவில். உங்களுக்கும் உங்கள் மூலத்திற்கும் இடையில் இருப்பது உங்கள் ( குறைவுள்ள )மனம் மட்டுமே! ( குறைவுள்ள )உணர்வுகள் மட்டுமே! அதையும் கைவிடும்போழுதே இருப்பு இணைப்பு நடக்கிறது. உங்களை காப்பாற்றிக்கொண்டிருக்கிற, காப்பாற்றிக்கொண்டிருந்த மனதையே நீங்கள் கைவிடும் பொழுது, உங்கள் உணர்வையே நீங்கள் கைவிடும் பொழுது இடையில் இவர்களுக்கு என்ன வேலை? ஒரு தனி மனிதனின் உள் உலகுக்குள் துளி நாகரீகமுமின்றி நுழையும் இந்த இடைத்தரகர்கள் தான் உலகுக்கு ஒழுக்கத்தை, நாகரீகத்தை கற்று தருபவர்கள்.
இவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

22 : 'நான்' எனும் ஆளுமை - ஓஷோ

உங்கள் தனி மனித தன்மையை கண்டுபிடிப்பதில் உங்கள் சக்தியை ஈடுபடுத்துங்கள். இதுவே , உங்கள் பிறப்பிலிருந்தே உங்களுடன் நீங்கள் கொண்டு வந்திருப்பது . தனிமனித தன்மையே உங்களின் சாரமான இருப்பு. நான் எனும் உங்கள் தன்முனைப்பான ஆளுமையோ சமுதாயத்தால் உங்களுள் உருவாக்கப்பட்டது. அவர்கள் உங்களை என்னவாக ஆக்க விரும்பினார்களோ அப்படி ஆனதே ஆளுமை.
ஆனால் நீங்கள் மட்டுமல்ல இப்படி இருப்பது . உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தம் ஆளுமையை மட்டுமே அறிந்திருக்கிறார்கள். ஆளுமையை தவிர வேறெதுவும் இருப்பதே அவர்களுக்கு தெரியாது. தம்மையே அவர்கள் முழுமையாக மறந்துவிட்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே நடிகர்களாக, வெளிவேசக்காரர்களாக ஆகி இருக்கிறார்கள். மதவாதிகள், அரசியல்வாதிகள், பெற்றோர்கள் ஆகியோரின் கைகளில் ஆடும் பாவைகளாக அவர்கள் ஆகி இருக்கிறார்கள். தாம் ஒருபோதும் செய்ய விரும்பியிராத காரியங்களை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். தாம் பெரு விருப்பம் கொண்டிருக்கிற விதமான செய்கைகளை அவர்கள் செய்யாதிருக்கிறார்கள்.
ஒன்றுக்கொன்று எதிரும்புதிருமான முறையில் அவர்களின் வாழ்க்கை பிளவு பட்டுள்ளது. இதனால் அவர்கள் ஒரு போதும் அமைதியாக இருக்க முடிவதில்லை. அவர்களின் இயற்கை ( தனி மனித தன்மை ) தன்னை மீண்டும், மீண்டும் முன் நிறுத்தும் . அது அவர்களை அமைதியாக இருக்கவிடாது. அனால், அவர்களின் ஆளுமை எனப்படுவதோ அவ்வியற்கையை தொடர்ந்து ஒடுக்கிக்கொண்டே போகும். உணர்வற்ற தளத்துக்குள் மென்மேலும் ஆழமாக அதை பதித்துக்கொண்டே இருக்கும். இந்த மோதல் உங்களையும் உங்கள் ஆற்றலையும் பிரிக்கிறது. ஆனால் தனக்கெதிராக தானே பிரிந்த வீடு அதிக நாள் நிலைக்க முடியாது.
இதுவே மனித பிறவிகளின் முழு அவலமுமாய் இருக்கிறது.

Thursday, June 17, 2010

21 : மனதிடம் மாட்டிக்கொண்ட மனிதர்கள்.

நேற்று நள்ளிரவில் இது நடந்தது. எப்போதோஆங்கில சினிமாவில் பார்த்த ஒரு இடம் மாதிரி இருக்கிறது. பெரிய மலைத்தொடர். பச்சையே இல்லை, பெரும், பெரும் செந்நிறபாறைகளால் ஆன உயர்ந்தமலை.முகடுகள் வானத்தை தொட்டு, மேலே கவிழ்ந்து நிற்கிறது. மலையின் அடிவாரத்தில் ( மலையின் மடியில் )அமர்ந்து இருக்கிறேன். சுற்றும் சூழ மலைகள்.இன்னும் சிலகாட்சிகளில் குளறுபடிகள் 'லாஜிக்'கே இல்லை.( அனால் காட்சிகளின் அடிப்படையில் 'லாஜிக்' இருக்கிறமாதிரி தான் தோன்றுகிறது ) ( ஏன்? 'லாஜிக்' இல்லாத மாதிரியும் இருக்கிறது?'லாஜிக்' இருக்கிற மாதிரியும் இருக்கிறது?) எனது இடது பாதியில் மட்டும் உணர்கிறேன். வலது பாதி புலனாகவில்லை. ஒரு கருப்பு நிற 'ரிச்'சான( rich ) கம்யூட்டர். அதன் கீ போர்ட் பட்டன்கள் உருண்டை, உருண்டையாக வெண்ணிற முத்துபோல மின்னுகிறது. எதோ ஒரு டவுன் லோடு கொடுக்கிறேன். கம்ப்யூட்டர் ஸ்பீடாக இயங்குகிறது. ஆனால் டவுன் லோடு நிறைவு ஆகவில்லை. அதற்கான காரண காரியம் புரியவில்லை. ஏன்?, ஏன்?, மீண்டும் மனம் தேடுகிறது.
தேடி, தேடி ஓடினால் கொஞ்ச தூரம் போனால் பாதை அடைப்பட்டிருக்கிறது. எல்லா பாதைகளுமே சற்று, சற்று தூரத்தில் அடைப்பட்டு கிடைக்கிறதாக தகவல் வருகிறது. தேடல், தேடல், தேடல். ஒரே அவஸ்த்தையாக இருக்கிறது.மூச்சு திணறுகிறது, இந்த மாதிரியான அவஸ்தையை இதுவரை பட்டதில்லை. மனசு வலிக்கிறது. இனி உயிர் வாழவே முடியாது.
என் மனசை எதோ உருவம் இல்லாத பலமான மாயக்கரம் பிசைகிறது. மனிதன் இந்த தொந்தரவோடு வாழ்வதைவிட இறந்து போவது நிம்மதி.( இப்படி எவ்வளவு நேரம் நடந்தது என்பது பற்றி ஞாபகம் இல்லை. ) - இறந்து விட்டால் நிம்மதி எந்த பிரச்னையும் இருக்காது.
'திடுக்'கென தூக்கத்திலிருந்து எழுந்தேன்.கண் விழித்துப்பார்த்தேன்.கடிகாரத்தில் மணி இரண்டு. நல்லவேளை இது வெறும் கனவுதான், இது பச்சைப்பொய். அப்பாடா பிழைத்தேன் . இருந்தாலும் சந்தேகப்பட்டு வீட்டிலிருந்த கம்ப்யூட்டரையும் பார்த்தேன்.அது மூடி வைத்திருந்த படிதான் இருந்தது. நூற்றுக்கு நூறு இது கனவுதான்.
சிறுநீர் கழித்துவிட்டு வந்து,மீண்டும் படுத்து 'சரி நிம்மதியாக இனி தூங்குவோம்' என, கண்களை மூடி தூங்கப்போனால் , மீண்டும் அதே கம்ப்யூட்டர் காட்சிக்கு வருகிறது. மனசில் லேசாக வலி துவங்குகிறது. சற்றும் சூழ பாறையால் ஆன மலைகள். சே! வெறும் மனசால் வந்த கோளாறு.
எதோ டிரைவர் இல்லாத ரயில் போல மனம் தன்னிச்சையில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதுவும் என்னையும் சேர்த்து இழுத்துக்கொண்டு. எழுந்து அமர்ந்து கொண்டேன். இனி கண்ணை மூடி தூங்கப்போவதில்லை. ஏன் இந்த மனசு என்னை இப்படி வதைக்கிறது? ஏன்? இந்த மனம் என் கட்டுப்பாட்டிற்கு வர மறுக்கிறது? எனக்கும் மனசுக்கும் இடையே இவ்வளவு பெரிய இடைவெளி எப்படி ஏற்ப்பட்டது? இந்த மனசுக்கு சர்வ சுதந்திரத்தையும் கொடுத்து என்னையும் அதனிடமே முழுசாக ஒப்புக்கொடுத்து வைத்திருப்பது அப்போது அறிய வருகிறது. என் வசம் எந்த அதிகாரமும் இல்லை. சர்வ அதிகாரமும் தன் கையில் வைத்திருக்கிற சர்வாதிகாரியே இந்த மனம்தான். என் முழு உரிமையையும் அதனிடமே அடிமை சாசனம் போட்டு கொடுத்திருக்கிறேன்.தப்பிக்க முடியுமா? ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க?

Wednesday, June 16, 2010

20 : மனம் உருவான வரலாறு

இப்பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களையும் போல நீங்களும் ஒரு பொருள்தான். ( இப்பிரபஞ்ச பொருள் ) எல்லா பொருட்களுக்கும் தொடர்ந்து வாழ விருப்பம் இருப்பது போல உங்களுக்கும் நீடித்து வாழ விருப்பம் உள்ளது. இது பிரபஞ்ச பொதுஇயல்பு .உங்களின் 'வாழவேண்டும்' எனும் விருப்பமே மனமாக விருத்தியாகி செயல்படுகிறது என்பதை நாம் உணர வேண்டும். இந்த மனம் உருவான வரலாறு - தன் உயிருக்கு ஆபத்தை உண்டாக்குவது எது? தனக்கு பாதுகாப்பாக இருப்பது எது? என்பதைப்பற்றிய தகவல் தொகுப்பே 'மனம்' .( memory) மனம் இதன் அடிப்படையிலேயே செயல்படுகிறது. உங்கள் மனதில் எழும் எல்லா சிந்தனைகளும் , நினைவுகளும் உங்களின் 'பாதுகாப்பின்' அடிப்படையிலேயே நிகழ்கிறது. - என்பதை நாம் அறிய வேண்டும். நீங்கள் வந்த வேலை முடிந்து விட்டது என அறிந்தால், ( வாழ வேண்டும் எனும் ஆசை மறைந்து விடும்போது ) உங்கள் மனம் ஓய்வெடுக்க விரும்புகிறதை அறிவீர்கள். வாழும் ஆசை இருக்கும்வரை மனதின் ஓட்டத்தை நிறுத்துவது மிகவும் கஷ்டம். நம் வாழும் ஆசையே மனமாக செயல்படுகிறது.

Friday, June 11, 2010

19 : நிறைவான பூரண நிலை

நான் யார்? நான் என்பது இந்த உடலை, உயிரை பாதுகாப்புடன் வளர்த்திக்கொள்ளும் ஒரு தன்முனைப்பு மன இயக்கம்.( இந்த நான், மனிதர்க்கு மட்டுமல்ல விலங்குகளுக்கு, பறவைகளுக்கு, புழு, பூச்சிகளுக்கு,மரம், செடி, கொடிகளுக்கும் , நுண்ணுயிரிகளுக்கும் உள்ளது) சரி இந்த உடல், உயிர் இன்னும் சுமார் பத்து வருடத்திற்கு தாங்கும் என வைத்துக்கொள்வோம் அதுவரைக்கு உண்டான பாதுகாப்புக்கு தேவையான பொருளாதார நிலை, குடும்ப நிலை, சமூக நிலை எல்லாம் சரி செய்தாகிவிட்டது.பாதுகாப்பு சூழல் நிறைவாகிவிட்டது. இனி 'இவன்' இங்கு வந்த நோக்கத்தை கவனிக்க வேண்டும். இவன் இங்கு வந்தது இவன் விரும்பி அல்ல! (இங்கு இவனாக செயல்படுவது பிரபஞ்ச சக்தியே).இந்த இயற்கையோ நிறைவை நோக்கியே செயல்படுகிறது. சரி, நான் அடுத்து செய்ய வேண்டியது என்ன? மூன்று நிலைகளான 1, பிரபஞ்ச நிலை 2,நமது மன நிலை 3,மன நிலையை கடந்த 'நிறைவான' பூரண நிலை. இவற்றில் நாம் நம் தியானத்தின் மூலம் நிறைவான பூரண நிலையில் நின்று நிறைவான பூரணத்தில் (complete)லயிப்போம்.

Wednesday, June 9, 2010

18 : ஒரு நகைச்சுவை

எனக்கு இந்த ஜில்லா, இந்த தாலுக்கா, இந்த கிராமத்தில் 160/3சர்வே எண்ணின் படி 5 ஏக்கர் 42 சென்ட் நிலம் எனக்கு சொந்தமானது. அது என்னுடையது. இந்த உலகில் உள்ள எவரும் இந்த நிலத்துக்கு சொந்தம் கொண்டாட முடியாது. அது என்னுடையது. என்னிடம் ஒரு பஜாஜ் கம்பெனி மோட்டார் சைக்கிள் உள்ளது. அதுவும் என் பெயரில் ரிஜிஸ்ட்ரேஷன் செய்யப்பட்டு அதுவும் எனக்கு சொந்தமானது. நான் நான்கு பசு மாடு வளர்க்கிறேன் அவைகளும் எனக்கு மட்டுமே சொந்தம். நான் விரும்பினால் அதற்கு தீனி போடலாம், அதன் தாகத்துக்கு தண்ணீர் வைக்கலாம் , விருப்பமில்லாவிட்டால் அவைகளை அப்படியே கவனிக்காமல், பட்டினி போட்டு 'கொல்ல' முடியும். அது என் உரிமை. போன வாரம் இரண்டாயிரம் கொடுத்து சந்தையில் இரண்டு வெண்ணிற ஆட்டுக்குட்டி வாங்கினேன். அதுவும் எனக்கு சொந்தம். நான் விரும்பினால் அதனுடைய ஒரு காதை மட்டும் அறுத்து , நெருப்பில் சுட்டு தின்னலாம். எவனும் கேட்க முடியாது.ஏன் அதை கொன்று கறி சமைத்து உண்ணலாம். (உலகில் உள்ள எல்லா ஆடுகளுமே இதற்குதான் கொல்லப்படுகிறது) அல்லது அந்த இரண்டு ஆட்டுக்குட்டிகளையும் கட்டப்பட்டிருக்கிற கயிற்றை தரித்து விட்டு , எங்கோ போய் பிழைத்துக்கொள்ளுங்கள் என சுதந்திரமாக திரியவிடலாம். எனக்கு சொந்தமாக மனைவி ஒருத்தி, இரண்டு பிள்ளைகள் இருக்கின்றன.
எனக்கு ரொம்ப நாளாக ஒரு கேள்வி. என்னுடைய கண் அணுக்களால் ஆனது, என்னுடைய காது அணுக்களால் ஆனது, என்னுடைய வாய் அணுக்களால் ஆனது,என்னோட மூளை அணுக்களால் ஆனது, என்னோட ஒவ்வொரு உறுப்பும் , எலும்புகளும், ரத்தமும் அணுக்களால் ஆனது. என் உடல் பல கோடி அணுக்களால் ஆனது. சரி, இது இப்படி இருக்க-
என்னோட உடலில் உள்ள எல்லா அணுக்களும் இந்த பிரபஞ்சத்துக்கு சொந்தம். இந்த பிரபஞ்சம் முழுக்க உள்ள அனைத்து அணுக்களும் என் அணுக்களும் ஒரே மாதிரியானது தான். இந்த உடலிலுள்ள அனைத்து அணுக்களும் இப்பிரபஞ்சத்துக்கு சொந்தமானது என்றால்! அப்போ நான் என்பது என்ன?

17 : மூன்று நிலைகள்

ஓம் சாந்தி, சாந்தி,சாந்திஹி
இதன் பொருள்: 'மூன்று உலகும் சாந்தி பெறுவதாக!' என்பதாகும்.
அந்த மூன்று உலகு :
1, நமக்கு வெளியே உள்ள பௌதிகமான புற உலகு - இப்பிரபஞ்சம் முழுமையும். அதன் அனைத்து செயல்களும்.
2, நமது அக உலகு. எண்ணங்கள் உலாவுகிற, எண்ணங்களால் அறியப்படுகிற நமது மனம்.
3,அக உலகான மனதை தாண்டி (மனதின் செயல் கடந்து) துலங்கும் பூரணம். ( நமக்கு மனதை கடப்பதால் பூரணம் துலக்கமாகி அறியப்படுகிறது ) இப்பூரணம் எங்கும் இருக்கிறது.
நமது அக உலகு(அதாவது மனம்) வெளியிலுள்ள புற உலக சக்திகளாலும், ( ஒளி, தட்ப வெட்பம், காந்த புலன்கள், புவி ஈர்ப்பு. அண்ட வெளி ஈர்ப்பு இன்ன பிற சக்திகளாலும்) நமக்குள் இயங்குகிற பூரண தன்மையாலும் இயக்கப்படுகிறது. அதாவது புற - நடு - உள்.

Tuesday, June 1, 2010

16 : அறிவு மடை மாற்றம்

காலை நேரம் யோகா முடிந்து ஆழ்ந்த தியானத்தில் புருவ மத்தியில் ஓர் ஒளிப்பந்து பிரகாசிப்பதை கவனித்து இருப்பீர்கள். அந்த ஒளிப்பந்தை சாட்சி தன்மையாக கவனித்தல் (அறிவு அசைவற்று) (சுவாசமும் அசைவற்று) -still- எவ்வளவு நேரம் நிகழ்வில் இருக்க முடிகிறதோ அதுவே அறிவு மடை மாற்றம். -'பூரண ஒளிப்பிரவாகம்'- அதாவது, முதல் செல் உயிரிலிருந்து, இந்த கணம் வரை உங்கள் அறிவு 'நான்' எனும் (சுய சார்பு) உயிர் வாழ்தலிலேயே நிலை கொண்டிருந்தது- மாறி, அனைத்தும் ஒன்று எனும் பூரணத்துவம் துலங்க துவங்கும் நிகழ்வு.