Wednesday, June 9, 2010

17 : மூன்று நிலைகள்

ஓம் சாந்தி, சாந்தி,சாந்திஹி
இதன் பொருள்: 'மூன்று உலகும் சாந்தி பெறுவதாக!' என்பதாகும்.
அந்த மூன்று உலகு :
1, நமக்கு வெளியே உள்ள பௌதிகமான புற உலகு - இப்பிரபஞ்சம் முழுமையும். அதன் அனைத்து செயல்களும்.
2, நமது அக உலகு. எண்ணங்கள் உலாவுகிற, எண்ணங்களால் அறியப்படுகிற நமது மனம்.
3,அக உலகான மனதை தாண்டி (மனதின் செயல் கடந்து) துலங்கும் பூரணம். ( நமக்கு மனதை கடப்பதால் பூரணம் துலக்கமாகி அறியப்படுகிறது ) இப்பூரணம் எங்கும் இருக்கிறது.
நமது அக உலகு(அதாவது மனம்) வெளியிலுள்ள புற உலக சக்திகளாலும், ( ஒளி, தட்ப வெட்பம், காந்த புலன்கள், புவி ஈர்ப்பு. அண்ட வெளி ஈர்ப்பு இன்ன பிற சக்திகளாலும்) நமக்குள் இயங்குகிற பூரண தன்மையாலும் இயக்கப்படுகிறது. அதாவது புற - நடு - உள்.

No comments:

Post a Comment