Friday, June 11, 2010

19 : நிறைவான பூரண நிலை

நான் யார்? நான் என்பது இந்த உடலை, உயிரை பாதுகாப்புடன் வளர்த்திக்கொள்ளும் ஒரு தன்முனைப்பு மன இயக்கம்.( இந்த நான், மனிதர்க்கு மட்டுமல்ல விலங்குகளுக்கு, பறவைகளுக்கு, புழு, பூச்சிகளுக்கு,மரம், செடி, கொடிகளுக்கும் , நுண்ணுயிரிகளுக்கும் உள்ளது) சரி இந்த உடல், உயிர் இன்னும் சுமார் பத்து வருடத்திற்கு தாங்கும் என வைத்துக்கொள்வோம் அதுவரைக்கு உண்டான பாதுகாப்புக்கு தேவையான பொருளாதார நிலை, குடும்ப நிலை, சமூக நிலை எல்லாம் சரி செய்தாகிவிட்டது.பாதுகாப்பு சூழல் நிறைவாகிவிட்டது. இனி 'இவன்' இங்கு வந்த நோக்கத்தை கவனிக்க வேண்டும். இவன் இங்கு வந்தது இவன் விரும்பி அல்ல! (இங்கு இவனாக செயல்படுவது பிரபஞ்ச சக்தியே).இந்த இயற்கையோ நிறைவை நோக்கியே செயல்படுகிறது. சரி, நான் அடுத்து செய்ய வேண்டியது என்ன? மூன்று நிலைகளான 1, பிரபஞ்ச நிலை 2,நமது மன நிலை 3,மன நிலையை கடந்த 'நிறைவான' பூரண நிலை. இவற்றில் நாம் நம் தியானத்தின் மூலம் நிறைவான பூரண நிலையில் நின்று நிறைவான பூரணத்தில் (complete)லயிப்போம்.

No comments:

Post a Comment