Friday, October 8, 2010

தொகுப்புணர்வு.

நமது தியானத்தின் போது ஐம்புல உணர்வு,அறிவு ஓட்டத்தையும் , மனதின் அலைச்சலையும் படிப்படியாக குறைத்து அவைகளை முழுமையாக ஒடுங்க வைக்க ஒரு யோசனை.

அறிவு 'ஒளியால்' உண்டானது. மனம் ஒரு பூரண ஒளியை தரிசித்தால் தன் கிலேசம் மறந்து அது பூரண தெளிவை அடையும். அந்த பூரண ஒளி நமது புருவ மத்தியில் தோன்றுவதாகும். இந்த ஒளியை தோற்றுவிக்க நாம் நமது சுவாசத்தை சரியாக்க வேண்டும்.

நல்ல மூச்சு வாங்குகிற அளவுக்கு ஒரு உடல் பயிற்சிக்குப்பின் உடல் ஓய்வுக்காக ஒரு சீரான சுவாச ஓட்டம் அங்கு நிகழும். அப்போது செய்யப்படும் தியானத்தில் நமது கண்ணின் கரு விழிகளை அசையாமல் மேல் நோக்கி செருகி வைத்துக்கொள்ளல் வேண்டும்.

நம்மைப்பொருத்தவரை இப்போது அந்த கண்களில் எந்த வித ஸ்மரனையும் கிடையாது. ஒரு இறந்து போன மனிதனின் சவத்தில் உள்ள கண்ணைப்போல அது செயலற்று கிடக்க வேண்டும். இந்த கண்கள் இரண்டையும் இப்படி வைக்க காரணம், நமது ஐம்புலன்களின் செயல்களையும் செயல்படாது நிறுத்தி வைக்கும் சக்தி அதனிடம் உண்டு.

கருவிழிகளின் ஒரு சிறு அசைவுக்கூட மனத்தை எழுப்பி ஓட விட்டுவிடும்.

இப்போது மூச்சு சீராகி, சீராகி உங்கள் சுவாசத்தை உங்கள் வலது நாசியும், உங்களது இடது நாசியும் சந்திக்கும் இடத்தில் ( புருவ மத்தியில் ) இடது நாசிக்காற்றும், வலது நாசிக்கற்றும் சந்திக்கும் அதே இடத்தில் சலனமற்று மிகச்சிறு அசைவாக மட்டும் நிறுத்தினால் அங்கு நிலவும் பிராணன் ஒளியாக பிரகாசிக்கும். இதுவே பூரண ஒளி.

அந்த ஒளியை உங்கள் அறிவால் அல்ல, உங்கள் உணர்வால் மட்டும் அதை உணர முற்படுங்கள்.

உங்கள் உணர்வு என்பதே உங்கள் உடலிலுள்ள அனைத்து ஜீன்கள் உணரும் உணர்ச்சியாகும்.
உணர்வை அவைகளே உணருகின்றன. உங்கள் உடலிலுள்ள ஜீன்களின் மொத்த எண்ணிக்கை தெரியுமா? எத்தனை வித செல்கள் இருக்கின்றன தெரியுமா?



(1, How many cells are in the human body?

Sources give figures that vary from 50 to 75 trillion cells.

2, How many different types of cells are there in human body?

There are about 210 types of human cells.)

( மேற்கத்திய எண்முறையில் டிரில்லியன் என்பது ஓராயிரம் பில்லியனைக் (1000 X 1000 X 1000 X 1000)குறிக்கும். ஒரு டிரில்லியன், 1,000,000,000,000 என எழுதப்படுகிறது. ஒன்றின் பின் 12 சுழிகள். அறிவியல் முறையில் எழுதும்போது, ஒரு டிரில்லியன், 1012 என எழுதப்படும்.)


( உங்களை ஒரு தனியனாக அறிவது உங்கள் மனம், ஆனால் நீங்கள் தொகுப்பாக இருப்பதே உண்மை )

உங்கள் உணர்வையே நீங்கள் ஒரு தனியனாக உணர்ந்தால் அங்கு மனமே அதை அறிகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் .

உங்கள் உணர்வை நீங்கள் தொகுப்பாக உணர்வதே உண்மையுணர்வு.

அனைத்து ஜீன்களையும் தட்டி எழுப்பி புருவ மத்தியை நோக்கி ( மேல்நோக்கி ) அந்த புருவ மத்தியில் சுடரும் ஜோதியை உணருங்கள்.

உங்கள் உணர்வு தொகுப்பால் ( ஒரு உணர்வு அல்ல ) 'ஏக உணர்வாக' அந்த பூரண ஒளியை உணர உங்கள் ஜீன்கள் அனைத்தும் சூரியனைக்கண்ட சூரிய காந்தி மலர்களைப்போல மலர்ந்து அந்த சூரியனோடு இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும்.

நீங்கள் ஒரு தனி மலரல்ல! மலர் தோட்டம். அங்கு உங்கள் மலர்களுக்கும் அந்த சூரியனுக்கும் இடையில் வேறு எதுவுமேயில்லை.

ஒரு தனியனை பொதுவாக பிரிப்பதே ஆன்மீக சாதனை என்பதையும் அறியுங்கள்.

தனியனாக அறிவது மனம். ஏகமாக,முற்றுணர்வாக உணர்வது தொகுப்புணர்வு.

Wednesday, October 6, 2010

உணர்வுலகம்.

ஆளரவமற்ற ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அமர்ந்து கொள்ளுங்கள். எந்தவித இரைச்சலும் இல்லாத இடமாக இருக்கட்டும். ஒரு மணி நேரம் கண்களை மூடி உங்களுக்குள் நடக்கும் உணர்வோட்டத்தை மட்டும் கவனியுங்கள். நடுக்கடலில் அலைகள் எழுந்து, எழுந்து விழுவது போல உங்கள் உணர்வில் சிறு ஏற்ற, இறக்கம் மட்டுமே காண முடியும். பின்பு அதில் ஒரு லயம் ஏற்படும். உணர்வின் அடிப்படைத்தன்மையே இதுதான். தொடர்ந்து கவனித்து வாருங்கள். முக்கியமான ஒரு விஷயம், இதை அறிவால் அறியக்கூடாது. உங்கள் உணர்வாலேயே உணருங்கள். உங்களுணர்வு நகர்தலை உங்கள் உணர்வாலேயே உணருங்கள். இப்போது காண்பீர்கள் உங்கள் மனம் அமைதியடைதிருப்பதை. ஆச்சரியமாகத்தான் இருக்கும் இது.
இந்த உணர்வுலகு ஒரு இசைக்கருவி மாதிரி. இயல்பாக இதில் கேட்பது அதன் சுருதி லயம் மட்டுமே! உங்கள் மனம் அதை மீட்டுவதாலேயே அதில் பல் வேறு ராகங்களை ஏற்படுத்துகிறது. எந்த வித குற்றம் குறையும் இல்லாதது உங்கள்உணர்வுலகு. எவர் ஒருவரால் இதில் தொடர்ந்து சுருதி லயத்தை மட்டுமே கேட்க முடிகிறதோ ( மீட்ட முடிகிறதோ ) அவர் எளிதில் மனதை கடக்கும் உபாயத்தை அறிகிறார்.

அறிவு, உணர்வு, சாட்சித்தன்மை.

மனிதன் எத்தகையவன் என நாம் ஆராய்ந்து பார்த்ததால், மனிதன் மூன்று வகை தன்மையுடையவனாக இருப்பது தெரிய வருகிறது. ஓன்று : மனம், இரண்டு : உணர்வு , மூன்று : சாட்சித்தன்மை. இப்போது மனம் செயல்படும் விதம் பற்றி பார்ப்போம். மனிதன் மனதைக்கொண்டு அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்கிறான். அறிவாலே தனக்கு வெளியில், தன்னை சுற்றியும் நடக்கும் விஷயங்களையும் அறிந்து கொள்கிறான். தனக்குள் நடக்கும் விஷயங்களையும் அறிந்து கொள்கிறான். அறிவாலே புதிதாக யோசிக்கவும் செய்கிறான். அறிவாலே கற்பனை செய்யவும் செய்கிறான். மனதாலே நல்லது எது, கேட்டது எது எனவும் கண்டு கொள்கிறான்.முடிவும் எடுக்கிறான். கூர்ந்த மனதைக்கொண்டு மற்றவர்கள் அறியாத ஒன்றைக்கூட இவன் அறிந்த சொல்கிறான். தனது நுட்பமான மனதாலேஎல்லாவித கலைகளிலும் பரிணமிக்கிறான். நுண்ணறிவால் தொடர்ந்து ஒன்றையே ஆராய்ந்து விஞ்ஞானியாகிறான். மனம் தான் இவனுக்கு வாழ்க்கையை அமைத்து தருகிறது. இவன் எந்த வழியில் செல்லவேண்டுமென சொல்கிறது.இதனுடைய சிறப்புத்தன்மை என்னவெனில் இதன் நினைவகத்தன்மை. தன்னை பாதித்த விஷயங்களை தனது நினைவில் வைத்துக்கொள்கிறது. தனக்கு எது நல்லது அல்லது எது கேட்டது என அது ஆராயும்பொழுது அது தனது நினைவாக தொகுப்பிலிருந்தே விஷயங்களை எடுத்து அலசி ஆராய்கிறது. இது எப்போதும் எதையும் எதிர்கொள்ளும் தயார் நிலையிலேயே இருக்கிறது. இந்த உயிரைப்பாதுகாப்பதில் எப்போதுமே ஜாக்கிரதையாக இருக்கிறது. எதையுமே தன்னை சார்ந்தே நல்லதுகெட்டது என முடிவு எடுக்கிறது. ( தன்னலத்தையே குறிக்கோளாக கொண்டு செயல் புரிகிறது.) இது அனைத்தையும் அறிந்து கொள்ளும் அறிவாகவே இருக்கிறது.

அடுத்து உணர்வைப்பற்றி கவனிப்போம் . உணர்வு எப்போதும் நம் உடலை சார்ந்தே இருப்பது அறியவருகிறது. தனது உடலுக்கு வெளியில் நடக்கும் விஷயங்களை அது உணர்வதாக தெரியவில்லை. தவிர அறிவைப்போல நினைவகத்தன்மையோ, வெவ்வேறான உணர்வுகளை சேமித்து வைத்தாலோ இதனிடம் இல்லை. இது இப்போது இக்கணத்தில் மட்டுமே உணரப்படுவது.

உணர்வுக்கு இறந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் என முக்காலம் கிடையாது .

உணர்வுக்கு இக்கணம், இக்கணம், இக்கணம் மட்டுமே. எந்த உணர்வாக இருந்தாலும் இதனால் ஒரு கண நேரம் மட்டுமே உணர முடியும். தவிர உணர்வுக்கு பேதம் தெரியாது. உணர்வில் பேதத்தை அறிவதெல்லாம் அறிவுதான். உனது உடலில் இப்போது நடக்கும் உணர்வை உனது மனதால் நீ அறியாமல் இருந்தால் - உன் உணர்வுக்கு அது 'எப்போதும் உணர்கிற மாதிரி இப்போதும் இது ஒரு உணர்வு' என்கிறதாகவே இருக்கும்.

உணர்வான 'தனக்கு' உணர்வு பேதமில்லை, என்பதையும் உணர்வு உணர்வதில்லை. இந்த உணர்வு தளத்தை தனது மேடையாக்கி எல்லாவித பிரசங்கமும் செய்து கொள்வது உங்கள் மனமேதான். உங்கள் உணர்வு ஒரு அப்பிராணி. எல்லா கில்லாடிதனமும் உங்கள் மனதிடமே இருக்கிறது. சகோதர சகோதரிகளே இந்த நிலைமை உங்களுக்கு மட்டும்தான் என்றில்லை. அனைத்து உயிர்களின் நிலைமையும் இதுதான்.

மூன்றாவதான பேதமற்ற அந்த சாட்சித்தன்மையை பார்ப்போம். இந்த சாட்சித்தன்மைதான் இந்து மதம் சொன்ன பிரம்மம் , புத்தபிரான் சொன்ன சூன்யம், முகமது சொன்ன அல்லா,ஆதிசங்கரர் சொன்ன அத்வைதம்.

இனி,இவர்களைப்போல உங்கள் கண்டுபிடிப்பை நீங்கள் உலகுக்கு சொல்லுங்கள். இந்த சாட்சித்தன்மையே உங்களிலும் இருக்கிறது, அனைத்துயிரிலும் இருக்கிறது, எல்லாமுமாக இருப்பதுவும் இந்த சாட்சித்தன்மையே!

உங்களுடைய அறிவுக்கு அது சாட்சித்தன்மை. மற்றபடி அது 'பூரணம்'.

சரி இந்த மூவித தன்மை நமக்கு வாய்த்த காரணமென்ன? நுண்ணுணர்வால் ஆராய்ந்தோமானால் தெரியவரும். அணுவின் முக்குணம் நிலைமின் ஆற்றல், நேர்மின் ஆற்றல், எதிர் மின் ஆற்றல் என. நமது உயிரிலும், உடலிலும் இவைகள் செயல்படும் விதமே இந்த மூவித ஆற்றல்கல்தான்.

நிலை மின் ஆற்றல் நமது சாட்சித்தன்மை.

நேர்மின் ஆற்றல் நமது உணர்வு நிலை.

எதிர்மின் ஆற்றல் நமது அறிவு நிலை.


அணுக்கள் துகள்களால் ஆனது.

எலெக்ட்ரான் துகள் : எதிர் மின்னூட்டம் கொண்டவை.
புரோட்டான் துகள் : நேர் மின்னூட்டம் கொண்டவை.
நியூட்ரான் துகள் : மின் சுமை அற்றவை. ( நிலை மின் )

மின் புலத்தாலும், காந்தப்புலத்தாலும் பாதிப்படையும் துகள்கள்,
எலெக்ட்ரான் துகள்கள்.(பீட்டா துகள்கள்-கதிர் )
புரோட்டான் துகள்கள்.( ஆல்பா துகள்-கதிர் )

மின் புலத்தாலும், காந்தப்புலத்தாலும் பாதிப்படையாத துகள்கள்( காமா துகள்கள்-கதிர்) நியூட்ரான் துகள்.


ஒரு அணுவின் 'தன்னுணர்வும்' இத்தகையதாகவே இருக்கும். நிலை மின்னை சார்ந்தே நேர்மின் இருக்கிறது. நேர் மின்னை தொடர்பு கொண்டே எதிர்மின் இயங்குகிறது. ஒரு அணுவின் அடிப்படை தன்மை எதுவோ அதுவே மனித உயிரின் தன்மையுமாகும்.

நமது அறிவு வெளியுலகையும் காண்கிறது தொடர்பு கொள்கிறது. ஆனால் அதேசமயம் நமது உணர்வை விட்டு விலகுவது கிடையாது. அறிவும் உணர்வும் இணைந்தே செயல் புரிகிறது. உணர்வு சமநிலைக்காக அறிவு கனவு காண்கிறது. உணர்வு சாட்சித்தன்மையை சார்ந்தும் அதே சமயம் அறிவோடு தொடர்பு கொண்டும் இருக்கிறது. அறிவு காட்சித்தன்மையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது. ஒளி, நிழல், இருள் எனும் தெளிவு, குழப்பம், மடமை இந்த மூன்றுக்குள் எல்லாவித காட்சிகளும் அடங்கிவிடுகிறது. உணர்வு சப்த தன்மையுடம் நெருங்கிய தொடர்புடன் இருக்கிறது. சாந்தம், பதற்றம், தவிப்பு என இது இருக்கிறது.

Thursday, September 30, 2010

நமது சாராம்சம்.

நமது வாழ்வின் ஒட்டுமொத்த சாராம்சமும் நாம் எவ்வளவு அறிந்திருக்கிறோம், நாம் எவ்வளவு உணர்ந்திருக்கிறோம் என்பது மட்டுமே! ( அது எதற்காக உதவுகிறது ? )

அறிவது , உணர்வது இந்த இரண்டுக்கு மேல் எந்தவித சாந்நித்தியமும் கிடையாது இந்த வாழ்க்கையில். உங்களுக்கு இயற்பியல் தெரியலாம், வேதியல் தெரியலாம், கணக்கியல் தெரியலாம், சமூகவியல் தெரியலாம், மரபியல் தெரியலாம், மானிடவியல் தெரியலாம் இவையாவும் நமது அறிவால் அறிவது.

அதேபோல உணர்வு விஷயத்திலும் நீங்கள் எந்தெந்த விதமான, பலவித உணர்வுகளை எல்லாம் உணர்ந்திருக்கலாம். எல்லா இயல் அறிவுகளுமே உங்களுடைய வாழ்க்கைக்காக நீங்கள் தேடி அறிந்தது.

தியானத்தில் சுத்தமான தன்னறிவில் முழு மனத்தையும் அசைவின்றி நிலை நிற்க வைத்தால், உங்களின் பலவித அறிவு ஏகமாகி முற்றறிவாக திகழும். இனி உங்களுக்கு தெரியாதது எதுவுமில்லைஇந்த உலகில். இனி, நீங்கள் புதிதாக அறிய எதுவுமில்லை.

அதேபோலத்தான் உணர்வு விஷயமும். தியானத்தில் அமர்ந்து உங்களின் உணர்வனைத்தையும் திரட்டி மேல்நோக்கி புருவ மத்தியை நோக்கி செலுத்தி அங்கேயே அசைவற்று நின்றால் , உங்களின் பல்வேறுவித முரணான உணர்வுகள் ஒன்றுகூடி ஒரே ஏகவுணர்வாக திகழும். அவ்வுணர்வு முற்றுணர்வாகும். அதுவே பரிபூரண நிலை. அங்கிங்கெனாதபடி எங்கும் ஒருணர்வான கைவல்யம் அதுவே!

இப்போது உங்களுக்கு எந்த பேதமுமில்லை. நீங்கள் வேறு பிரபஞ்சம் வேறில்லை.ஆதிசங்கரர் சொன்ன 'அத்வைத நிலை' இதுவே!

இதுவரை நம்மில் இந்த மின் சக்தி அறிவாகவும், காந்த சக்தி உணர்வாகவும் பிரிந்து செயல்பட்டு வந்ததை அறிவீர்கள். தியானத்தில் உங்களுக்கு கைவல்ய நிலை சித்திக்கும்போது எலக்ட்ரிக் வெல்டிங் செய்யும்போது கவனித்து பாருங்கள் எலக்ட்ரிக் 'லாடை' பற்றவைக்கும் இரும்பின் மீது வைக்கும்பொழுது 'பட்டென' ஒரு சப்தம் வந்து அந்த லாடும், பற்றவைக்கும் இரும்பும் ஒட்டிக்கொள்ளும்.

அதேபோல நம் தியானத்தின் போதும் புருவ மத்தியில் நமது மின் சக்தியும்,காந்த சக்தியும்(அறிவும், உணர்வும்)இதுவரை தனி, தனியாக இருந்துவந்தது இப்போது ஒன்றாக கலந்து 'பட்டென' தெறித்து விழும். இனி உங்கள் உணர்வும் அறிவும் பிரிந்து செயல்படாது, ஒன்றாகி செயல் படும்.

ஒரு மகானின் திருஷ்டிக்கும், நம்மைப்போன்ற சாதாரண மனிதரின் திருஷ்டிக்கும் உள்ள வேறுபாடு இதுதான். நமக்கு உலகமாக விரிந்து காணப்படும் இந்த 'பொருளான' உலகு , மகான்களுக்கு இந்த உலகின் அடிப்படை வஸ்துவான மின்காந்த தளமாகவே அறியப்படும்.

Thursday, September 16, 2010

மரணம்

மரணத்தை குறித்து பயப்படுபவர்கள் அடிப்படையில் வாழ்வைக்குறித்து பயப்படுபவர்களே. அவர்கள் வாழவில்லை. எனவேதான், அவர்கள் மரணத்துக்கு பயப்படுகிறார்கள். இந்த பயம் இயற்கையானதே. நீ சிறிதும் வாழவில்லை என்றால், நீ கண்டிப்பாக மரணத்திற்கு பயந்தேயாக வேண்டும். ஏனெனில் மரணம் நீ வாழ்வதற்குரிய வாய்ப்பை பறித்து சென்றுவிடும். ஆனால் நீ இன்னும் வாழ்வே இல்லை. எனவே மரணம் வந்து விட்டால் , பிறகு நீ எப்போது வாழ்வது?
ஆழமாக வாழ்ந்த ஒருவன் மரணத்திற்கு பயப்படுவதில்லை. அவன் நிறைவாயிருக்கிறான். மரணம் வந்தால் அவன் அதை வரவேற்க முடியும். ஏற்றுக்கொள்ள முடியும். இங்கு வாழ்க்கை கொடுக்கக்கூடியது. எல்லாவற்றையும் வாழ்க்கை கொடுத்துவிட்டது. வாழ்விலிருந்து அறியக்கூடிய எல்லாவற்றையும் அவன் அறிந்து விட்டான். இப்போது அவனால் மரணத்திற்குள் சுலபமாக செல்லமுடியும். அவன் மரணத்திற்குள் செல்லவிரும்புவான்.
நன்றி : தந்த்ரா ரகசியங்கள் : ஓஷோ

Wednesday, September 15, 2010

உணர்வு பற்றிய அடிப்படையான விஷயம்.

நமது உணர்வை நாம் ஒரு அசைவற்ற நிலையிலிருந்து அகண்டு விரித்து உணர முடியும். அசைவற்ற நிலைதான் நமது அடிப்படை நிலை. ( இருக்கிறது என்கிற அளவேயான உணர்வு நிலை ) அடுத்து இருக்கிறோம் எனும் விகல்ப நிலை. ( உணர்வும், உணர்வோனும் எனும் விகல்ப நிலை ) இது எப்படி சாத்தியப்படுகிறது எனில் - நமக்கு நேரிடை உணர்வு மட்டுமன்றி , நினைவு சக்தியும் இருக்கிறது. அந்த ஞாபக சக்தி மூலம் ஏற்கனவே நமக்கு கிடைத்த உணர்வை ஞாபகப்படுத்தி மீண்டும் உணர்ந்து பார்க்க முடிகிறது.

இது ஒரு பொய் தோற்றம்.

இதை நமது மனமே செய்வதால், -இந்த உணர்வு உண்மையா? பொய்யா? என்பதையும் தீர்மானிக்கும் சக்தியாக அந்த மனமே இருப்பதால் ,- இந்த ( பொய் ) உணர்வும் நமக்கு மெய்யெனவே தோன்றுகிறது.

அடுத்து நான் இருக்கிறேன் எனும் மன உணர்வு ( இப்போது நேரிடை உணர்விலிருந்து சற்றே விலகி -மனமே முழு ஆளுமையையும் எடுத்துக்கொள்கிற நிலை ) அடுத்து நான் இருக்கிறேன், இந்த உலகு இருக்கிறது எனும் , தன்னிலை, முன்னிலை, படர்க்கை என விரிகிறது இந்த உணர்வு நிலை.

இந்த படர்க்கை நிலையில் உணர்வை அனுசரிப்பவர்களால் தனக்கு வெளியே ஏதாவது தனக்கு ஒவ்வாத நிகழ்வு நடக்கும்போது, அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் உடனே எரிச்சலடைகின்றனர். இதையே கனவு, கற்பனை என இன்னும் விரிவாக அனுபவிக்கும் மகானுபவர்களும் உண்டு.

ஆனால் நமது அடிப்படை உணர்வான ( அனைத்தின் அடிப்படையான உணர்வுமான ) 'இருக்கிறது' என்கிற உணர்வே எப்போதும் இருந்தது, இப்போதும் இருக்கிறது, எப்போதும் இருக்கும். அது அசைவற்ற நிலை. அது முழு நிறைவானது. அனைத்தையும் உள்ளடக்கியது. பரிபூரணமானது. அதற்கு உள்ளும், அப்பாலும் எதுவுமில்லை. இருக்கிறது என்பதைத்தவிர வேறெதுவுமில்லை. இந்த உணர்வு எல்லா மனிதருக்கும் உள்ளதே! இதை அறிந்துணர்வதே ஆன்மிகம் என்பது.

இதில் எந்த மதமோ, எந்த கடவுளோ, எந்த புனிதமோ, எந்த அவதாரமோ, எந்த ரட்சகமோ இல்லை, இல்லை, இல்லை. ( இவையெல்லாம் ஒரு வித்தியாசமான பொய். அவ்வளவே ) எனவே மனித குலத்தோரே அறிவால் அறிந்து எல்லா பொய்களையும் கடந்து உண்மையை அறிந்து வாழ்வீராக!.

Monday, September 6, 2010

மனிதனின் (வெல்லமுடியாத) பாலுணர்வு

நம்மிடம் இரண்டுவிதமான செயல்தன்மைகள் உள்ளது. ஒன்று: அறிவுசெயல்தன்மை. மற்றது : தானியங்கு செயல்தன்மை. இதுவரை செய்தறியாத புதிய வேலைகளை அறிவுசெயல்தன்மை செய்கிறது. உதாரணமாக நீங்கள் சைக்கிள் ஒட்டிப் பழகுவது , கார் ஒட்டிப் பழகுவது போன்றவைகள். அதாவது ஒரு செயல் பழக்கப்படும் வரை அறிவுசெயல்தன்மை அவ்விஷயத்தில் செயல்படுகிறது.

அது பல முறை செய்து பார்த்த பின் அது பழக்கமாகி தானியங்கு செயல்தன்மைக்கு வந்து விடுகிறது.

உங்களுடைய தானியங்கு செயல்தன்மை செய்யும் சில செயல்களை தெரிந்து கொள்வோம். வழக்கம்போல - காலையில் எழுந்து முகம் கழுவி , பல் துலக்கி என ஆரம்பித்து இரவு படுத்து உறங்கும் வரை - ஏன் உறக்கத்திலும் கூட உங்கள் தானியங்கு செயல்தன்மை தான் செயல்படுகிறது. நீங்கள் எந்தெந்த செயலில் முழு கவனம் வைத்து உங்களை ஈடு படுத்துகிறீர்களோ அந்த செயல்கள் மட்டுமே அறிவுசெயல்தன்மையின் செயல்களாகும்.

இது( இவ்விரு செயல்தன்மையும் ) உங்கள் பல்லாயிர பிறவிகளுக்கு முன் நீங்கள் 'புறப்பட்ட' அந்த ஒரு செல் உயிரியிலிருந்தே துவங்கி விட்டது. அந்த ஒரு செல் உயிரியிலிருந்தே தொடர்ந்து வரும் பழக்கமே இந்த சுந்தரனும், இதைப்படிக்கும் நீங்களும். நமக்குள் இருக்கும் வித்தியாசமும்.

அந்த பழக்கங்கள் உங்களை வழி நடத்துகின்றன. எதுவெல்லாம் உங்களுக்கு ( முப்பிறவிகளிலும் ) ஏற்கனவே பழக்கமானதோ அதுவெல்லாம் மீண்டும் உங்கள் வாழ்வில் நடக்கும்பொழுது நீங்கள் சகஜ நிலையை உணர்கிறீர்கள். பழக்கமில்லாத ஒன்று நடந்தால் உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. நீங்கள் பல்லாயிர பிறவிகள் எடுத்துவிட்டதால் ( பிறவி தவறாமல் வந்த ) இனப்பெருக்கம் உங்களுடைய நீண்ட பழக்கம்.

( இது உங்கள் மைய்ய பழக்கம் ) இதனாலேயே, இதை அடிப்படையாக கொண்டே உங்கள் மன அமைப்பு செயல்படுகின்றது. இந்த பழக்கத்திற்கு வசப்படாத உயிர்களே நீங்கள் காண முடியாது.

இதனாலேயே இந்த பாலுணர்வு நம்மால் வெல்ல முடியாததாக இருக்கிறது.

த்யானத்தின் ஒரு அடிப்படையான விஷயம்.

தினசரி காலையில் தியானிப்பது யார்? த்யானிக்க அமரப்போவது வரை என்னவோ இந்த 'சுந்தரம்' தான். த்யானம் கூடிவருகையில் கவனித்தால் தான் தெரிகிறது த்யானிப்பது சுந்தரமல்ல! இந்த சுந்தரத்திற்க்குள் இருக்கும் எழுபது லட்சம் கோடி ஜீன்கள் என்பது. இந்த சுந்தரம் என்பது அந்த எழுபது லட்சம் கோடி ஜீன்களின் தொகுப்பான மன அமைப்பு. அந்த முதல்உயிரி அமீபாவிலிருந்து பயணித்து இன்றுவரை தொடர்ந்து சுய தேடலில் இருப்பது இந்த ஜீன்கள் தான்.

பல்லாயிரமான பிறவிகளும் இந்த ஜீன்களுக்குதான் இந்த சுந்தரத்துக்கல்ல!

இந்த பிறவியில் இந்த ஜீன்களின் தொகுப்பான இந்த மனதின் பெயரே சுந்தரம். நீங்கள் பல பிறவிகள் எடுத்து விட்டீர்கள் என்றால் அது உங்களுள் இருக்கும் ஜீன்களுக்கே பொருந்தும்.

த்யானத்திலும் த்யானிப்பது ஜீன்களாக இருந்தால்தான் அது த்யானம். அது சுந்தரமாக இருந்தால் த்யானமே கூடி வராது. ஏனெனில் சுந்தரம் ஒரு மன அமைப்பு. மனதை கடந்தால்தான் த்யானம் கூடும். மன அமைப்பை கடந்து பார்த்ததால் அங்கிருப்பது இந்த ஜீன்களே!.

இந்த ஜீன்களின் சுய தேடலே ' அசைவற்ற, சாட்சித்தன்மையான அந்த ஒளிப்பொருந்திய சுத்த அறிவேயாகும்'. அது எங்கும் நீக்கமற நிறைந்து பூரணமாக இருப்பது.

அதுவே பூர்ணம்.

Wednesday, August 25, 2010

த்யானம் என்பது

ஏற்கனவே கூறியபடி 'ஜடத்துக்குள் அறிவு நுழைந்ததாலேயே உயிர் உருவானது' என பார்த்தோம். நம்மிடம் மூன்று வித தன்மையுய்ள்ளது.1,ஜடம், 2,( ஜடமும் அறிவும் இணைந்ததாலேயான ) உயிர் இயக்கம், 3,தூய அறிவு நிலையான ' சாட்சித்தன்மை'. ஜடமும் அறிவும் இணைவதாலேயே உயிர் நடக்கிறது. உயிர் இயக்கத்திலிருந்தே 'மனம்' எழுகிறது. இந்த மூன்று தன்மையையும் பிரித்து பார்த்து , ( பொருட்களான ) ஜடத்தை, ஜட ( அசைவற்ற ) நிலையிலும், உயிரை ( மனதை ) ஒய்வு நிலையிலும், அறிவை வெறும் சாட்சித்தன்மையிலும், விடுவதே த்யானம் என்பது.

ஒரு கல்லைப்போல ஜடமான உடலை அசைவற்று நிறுத்தினால், உயிர் இயக்கம் ஒரு மேலான நிலையான அறிவு நிலைக்கு உயரும்.காரணம் நமது சாட்சித்தன்மைக்கு ( கவனத்திற்கு ) சிறிது உயிரோட்டம் தேவைப்படுகிறது. அந்த சிறு உயிரோட்டத்தில் மட்டும் நாம் நிற்கும்போது , இந்த பிரபஞ்சத்தின் மூல இருப்பு நிலையும், நமது இருப்பு நிலையும் ஒன்றாக இணைகிறது. இணைந்து லயமடைவதே த்யானம் என்பது.

Sunday, August 22, 2010

50:குறைவான வாழ்வும் நிறைவான வாழ்வும்.

பல பிறவிகள் தொடர்ந்தும் இன்னும் குறை தீரவில்லை நமக்கு. இப்போதும் நடைமுறை வாழ்விலும் தேடல் தொடர்கிறது. ஒரு உதாரணம். ஏன் நம்மை போன்ற சாமான்யரை கூட விடுங்கள். திருமதி சோனியா காந்தி போன்ற சர்வ அதிகாரம் கொண்ட நபர்களுக்கு கூட இன்னும் குறையை தீர்த்துக்கொள்ள முடியவில்லை. ( விஷயம் என்னவென்றால், நம்முடைய குறையை நாம் தவறாக அவதானிக்கிறோம் என்பதே )
எவ்வளவு பொருளாதாரம், எவ்வளவு அதிகாரம் இருந்தாலும் குறை தீர்வதில்லை.
இந்த வாழ்வு குறைவான வாழ்வுதான். நீங்கள் எவ்வளவு போராடினாலும் , எவ்வளவு உழைத்தாலும், ஏன் எவ்வளவுதான் பிறரை ஏமாற்றினாலும் இந்த குறை தீரப்போவதில்லை. இந்த வாழ்வு , நீங்கள் வாழ்வாங்கு வாழ்ந்தாலும் இன்னும் எதையோ தேடிக்கொண்டுதான் இருக்க வைக்கிறது. உங்களுக்கு தேவைகள் இருக்கும்வரை அது குறைவான வாழ்வுதான்.

பல பிறவிகளாக தொடர்ந்து வரும் ( இன்னும் தீராத ) குறை எது?

இதை நாம் அறிய முயற்சிப்பதில்லை. இதை அறிய முயற்சித்து அறிந்தவர்கள் அவர்களின் குறையை தீர்த்து நிறைவான வாழ்வை வாழ்கிறார்கள். இந்த வாழ்வை குறைவாகவே வாழ்வதா? நிறைவாக வாழ்வதா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

Thursday, August 19, 2010

49 : கையகல வாழ்க்கை.

நான் என்பது ஒரு கருத்துரு மட்டுமே. அது ஒரு அபிப்ராயம். அது ஒரு அறியாமை. அது மனதினில் நடக்கும் ‘பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு செயல்பாடு’ மட்டுமே!

மற்றும் நான் என்பது 'ஒரு' உயிர் மட்டுமே அல்ல! நமக்குள் எழுபது லட்சம் கோடி 'தனி' உயிர்கள் இருக்கிறது. அவைகளை ஜீன் என்று அழைக்கிறோம். நான் என்பது ஓர் உயிர் தொகுப்பு. மனம் என்பது எழுபது லட்சம் கோடி ஜீன்களின் ஒரு பொது அமைப்பு. அந்த எழுபது லட்சம் கோடி ஜீன்களும் அதுவது ஜீவிக்கும் இடத்தைப்பொறுத்து அதனதன் பிரச்னைகள் பலவாறு வேறு வேறாக இருக்கிறது. அதன் சிந்தனையும் தேவையும் வேறு வேறாக இருக்கிறது. இதனாலேயே உங்கள் மனம் சதா ஏதாவது ஒன்றில் சஞ்சரித்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு ஜீனின் தவிப்பையும், உணர்வையும் உங்கள் மூளை வாசித்துக்கொண்டே இருக்கிறது.

நமது மனம் எவ்விதம் செயல்படுகிறது என்பதை கவனிப்போம். மனம் மூளையை கருவியாகக்கொண்டு செயல் புரிகிறது. அந்த மூளையோ உடலிலுள்ள ஜீன்களோடு மட்டும் ( ஜீன்களின் உணர்வுகளோடு ) நேரிடையான தொடர்பு கொண்டிருக்கிறது. இந்த ஜீன்களின் உணர்வுகள்தான் உங்கள் ஒட்டுமொத்த வாழ்வின் சாரமும் ஆகும். உங்கள் புகழ், உங்கள் கௌரவம் , உங்கள் அந்தஸ்து இன்னபிறவும் இந்த வெறும் உணர்வுமட்டுமேயாகும்.உங்கள் வாழ்வுக்கு அர்த்தம் இவ்வளவு மட்டுமே!
இதற்கு வெளியில் நடப்பதெல்லாம்( நீங்கள் எண்ணுவது ) வெறும் பொய் மட்டுமே! உங்கள் வாழ்க்கையோ கேவலம் இப்படி கையளவேயாகி சுருங்கி கிடக்கிறது. உங்கள் தேடலோ பல பிறவிகளாக அகண்டு விரிந்து எல்லைகளற்று கிடக்கிறது. எதை தேடி உங்கள் வாழ்வு பல பிறவிகளை தாண்டி வந்திருக்கிறது? இன்னும் திருப்தியுறாத ஒன்று என்ன? எது திருப்தியுராததால் பல பிறவிகள் கடந்து வந்தீர்கள்? இந்த கையகல உணர்வுதான்.
ஆமாம் இந்த கையகல உணர்வு திருப்தியுறாமல் தான் பல பிறவிகள் கடந்தீர்கள். இந்த பிறவி,மனித பிறவி 'இந்த அறிவை'அறியும் பிறவி.

Thursday, July 29, 2010

48 : நியதி

இப்பிரபஞ்சம் காரண, காரியங்களால் இயங்குவது. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் உண்டு. இதுவே இதன் நியதி. நமது மனமும் இப்படியே. இதுவும் காரண, காரியங்களால் இயங்குவது. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் உண்டு. இதுவே இதன் நியதி. இவ்விரண்டுக்குமே நியதி ஒன்றுதான். இப்பிரபஞ்சத்தின் மூல ஆதார நிலையும்,இம்மனத்தின் மூல ஆதார நிலையும் ஒன்றுதான். அங்கு காரண, காரியங்களுக்கு இடமில்லை. அது கூறுபடாத ஓர்மை.

Tuesday, July 27, 2010

47 :தெய்வம் - அதன் சொரூபம்.

நம் செயல்களுக்கு காரணம் வினைப்பயனும் இப்போது செய்யும் முயற்சியுமே. இவ்விரண்டைத்தவிர எந்த காரியத்திற்கும் அனுகூலமாகவோ, பிரதியனுகூலமாகவோ இருப்பதற்கு வேறொரு காரணமுமில்லை. நடக்க வேண்டிய காரியங்கள் இவ்விரண்டின் பலத்தை தழுவியே நடந்து தீரவேண்டும். எதற்கு தீவிரம் அதிகமோ அது ஜெயமடைகிறது. ஆனால் வினைப்பயன்
நம் நோக்கத்திற்கு எட்டாதது. அதை நாம் எவ்விதமும் மாற்ற முடியாது. வினைப்பயன் அளவில்பட்டது, வளராது. முயற்சியோ நம்முடைய வசம். இம்முயற்சியை யுக்தி புத்தி, விடாமுயற்சிகளோடு செய்து வந்தால் , வினைப்பயனை நசிப்பித்துக் காரியங்களில் ஜெயம் அடையலாம் . பெரும்பாலும் ஜனங்கள் தங்களுக்கு விளைவதெல்லாம் தெய்வசெயலாக கருதி செய்ய வேண்டியவைகளை , செய்யாமல் மதி கெட்டு இருக்கிறார்கள். அதாவது வினைப்பயன்களே தெய்வசெயலாக கூறப்படுகின்றன. ஆனால் இவ்வினைப்பயன்களோ, நம்முடைய பூர்வ பிரயத்தனங்கள். ஆகையால் நமது தேகம் ஒரு பூர்வ -பிரத்யட்ஷ வினைகளின் போர்க்களமாயிருந்து அப்போரின் முடிவே நமது வாழ்வாக ஏற்ப்படுகின்றது.

தெய்வம் - அதன் சொரூபம்.

நமக்கு வேண்டியவைகளை தேடிக்கொள்ள நம் பிரயத்தனத்தால் முடியுமேதவிர வேறோன்றினாலும் முடியாது. தீவிர முயற்சியே தெய்வம். இதையே ஒவ்வொருவரும் ஆசிரயிக்க வேண்டும். நமது முயற்சியில்லாமல் ஒரு காரியமும் சித்தி பெறாது. நம் புத்திக்கு புலப்படாமல் தெய்வம் எங்கிருந்தோ நம் செயல்களுக்கு பலனை அளிப்பதாக எண்ணுவது மூடத்தனம். இதைவிட அக்ஞானம் வேறில்லை. நம்மால் செய்யப்படும் காரியங்களெல்லாம் நம் இந்திரியங்களால் செய்யப்பட வேண்டும். இந்திரியங்கள் மனத்தால் ஏவப்படுகின்றன. மனது புத்தியின் அசைவு. நாம் அனுபவிப்பதெல்லாம் கிரியைகளின் பலனே. ஆகையால் புத்தியின் அசைவுதான் பலன் ரூபமாக அனுபவிக்கப்படுகின்றது. நியதி இப்படி இருக்க , தேயவத்தால் நடைபெற வேண்டியது என்ன? மனித பிரயத்தனங்கள் இல்லாமல், எப்பொழுது அவர்கள் (மனிதர்கள் ) காரியங்கள் யாதும் முடிவதில்லையோ , அப்பொழுது தெய்வாதீனம் என்னும் கொள்கையால் என்ன பயன்? குறிப்பு:- யோக வாசிஷ்டம் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

Saturday, July 24, 2010

46: யோக வாசிஷ்டம் தமிழ் நூலின் முகவுரை.

மனது எனும் சொரூபத்தையுடையவனே மனிதன். இம்மனதானது அறிவின் வேறுபாடு.ஆகையால், தன் சுய நிலையாகிய அறிவை அறிந்துகொள்வதே மனித உருவமாக இயங்கினதன் நோக்கம், இதுதான் மனித ஜென்மத்தின் குறியும் பலனும்.
ஜன்ம சாபல்யம் இப்படி இருக்க, அறிவுதான் அனைவராலும் அறியப்படாமல் இருக்கிறது. லட்சக்கணக்கான வருடங்கள் மானிட உருவத்தில் கழிந்தும் , இந்த 'அறிவு' எனும் சொரூபத்தை அறிந்து அதை அடையும் முறைகளைப்பற்றி உரைத்தவரோ, எழுதினவரோ இதுவரையில் எத்தேசத்திலும் தென்படவில்லை. அதாவது வசிஷ்டர் ஒருவரைத்தவிர. இதர உலக வியவகாரங்களைப்பற்றியும் , மானிட வாழ்க்கையைப்பற்றியும் , அதை சீர்திருத்திக்கொள்ளும் முறைகள், இன்னும் அநேகவித சித்தாந்தங்கள் பற்றியும் எல்லாம் , அநேக மகான்களிடமிருந்து கேட்டோ, படித்தோ இருக்கிறோம். ஆனால் பிரபஞ்சத்திற்கு சாரமாயுள்ள அறிவைப்பற்றி நாம் அறியோம். வசிஷ்டர் ஒருவரே இதைப்பற்றிப்பூர்ணமாக எடுத்துரைத்தவர்.
அதாவது வால்மீகி மகரிஷியால் கேட்டு எழுதப்பட்ட காவியமாகிய " யோக வாசிஷ்டம் " அல்லது "மகாராமாயணம்" என்பதே இங்கு குறிப்பிடப்படுவது. இந்நூலை தரவிறக்கிக்கொள்ள இங்கே அணுகவும்.......... http://www.scribd.com/doc/11815811/YOGA-VASISTAM-TAMIL-BOOK?secret_password=&autodown=pdf

Friday, July 23, 2010

45:சத்,சித், ஆனந்தம்.

சத்,சித், ஆனந்தம். என்பன மூன்று பதங்கள். சத்தின் விளக்கம் ( நான் இருக்கிறேன் என்ற உணர்ச்சி ) எல்லோருக்கும் உண்டு .சித் விவேகிக்கு விளங்கும். ஆனந்தம் பூர்ண போதமுடையவனுக்குதான் விளங்கும். இம்மூன்றையும் உடையவனுக்கு அமிர்தமயமான ,அத்தியந்த , துக்க நிவர்த்தி என்று இதற்கு ஒரு மகான் பொருள் கூறினார்.
1,சத், என்பது நமது இருப்புணர்வு. மற்றும் அது மனவிவகாரமும் கூட. உலக மாந்தர் அனைவருமே இதை கையிலெடுத்துக்கொண்டு அலைகின்றனர். இதுவே கதி இதை விட்டால் வேறு மார்க்கம் கிடையாது என நினைக்கின்றனர். இதிலிருக்கும் உணர்ச்சியே வாழ்வு என கருதுகின்றனர். இதை தாண்டி அவர்கள் பார்ப்பதே கிடையாது. இதனால் ஏற்பட்டதே இந்த சமூகம். உங்கள் சமூக வாழ்க்கை.
2,சித், என்பது-தியானத்தின்போது-நமக்குள் இருக்கும் எழுபது லட்சம் கோடி ஜீன்களின் விழிப்பு. உங்கள் உடலின் அனைத்து பாகங்களிலிருந்தும், அனைத்து இடங்களிலிருந்தும் எல்லா ஜீன்கள் விழிக்கின்றன. உடலின் முழு பாகமும் விழித்தவுடன் , மனம் உங்களை விட்டு விலகி விட்டதை அறிவீர்கள். 'சித்'தில் நீங்கள் முழு ஈடுபாட்டுடன் இருக்கும்பொழுது மனதை நீங்கள் தேடினாலும் கிடைக்காது, எழுபது லட்சம் கோடி ஜீன்களின் விழிப்பு ( ஒளி ) ஆரவாரத்தில், நிழலான மனம் கரைந்துபோயிருப்பதை காண்பீர்கள். சித் என்பது எழுபது லட்சம் கோடி ஜீன்களின் விழிப்பு.
3,ஆனந்தம் என்பது எழுபது லட்சம் கோடி ஜீன்களின் அடிப்படை உயிர் ஆதாரம் ஒன்றாக இணைவது. அது ஆனந்த தாண்டவம். இது மொழிகளின் அர்த்தங்களைஎல்லாம் தாண்டிய மாபெரும் அனுபவம்.

Thursday, July 22, 2010

44:நமது பாதுகாப்புணர்வு.

நாம் காரண , காரிய பிரபஞ்சத்தில் வாழ்கிறோம். ஒரு சிறு துரும்பு கூட காரணமின்றி அசைவதில்லை. அனைத்து நடப்புக்குமே அடிப்படையில் காரணம் இருக்கிறது. இங்கு பூமியில் நீங்கள் விரலை சொடுக்கினால் கூட அதன் பாதிப்பு சூரியனில் நிகழ்கிறது என்கிறது அறிவியல். ஒவ்வொரு 'இம்மி'யளவு அசைவுமே காரணத்துடனே நடக்கிறது. ஏதோ தன்னிச்சையான பிரபஞ்சமாக இருக்க முடியுமா இது? இந்த பிரபஞ்சத்துக்குள் உங்கள் வருகையும் இப்படியே. உங்களுக்குள் உங்கள் மனதின் வருகையும் இப்படியே. இந்த மனதுக்கு காரணம் என பின்னோக்கிப்பார்த்தால் ஒருசெல்( முதல் ) உயிரிலிருந்து , ஏன்? இந்த பூமியில் முதன்முதலில் உயிர் துவங்கிய பொழுதே உங்கள் துவக்கமும், உங்கள் மனதின் துவக்கமும் சூல் கொண்டுவிட்டது. இன்று இருக்கும் உங்கள் மனதின் தகவமைப்பு , பல பிறவிகளாக பரிணாமமடைந்து,பரிணாமமடைந்து வந்திருக்கிறது. அது ஒரு செல் உயிரிலிருந்து இன்று எழுபது லட்சம் கோடி உயிரிகளாக ( உயிரிகளின் தொகுப்பாக) பரிணாமமடைந்து வளர்ந்திருக்கிறது.
இவ்வளவு பிறவிகளில் அது ( மனம்) கண்ட அனுபவம் தனித்து நின்று உயிர் வாழ முடியாது என்பதே. ஒரு குழுவாக இருந்தே தொடர்ந்து உயிர் காத்தல் அவசியம் என்பது அதன் அனுபவ சாரம். இதன் காரணமாகவே , ஒரு செல்லில் துவங்கிய 'உன்' துவக்கம் பல செல் உயிராக பல்கி பெருகி குழு, குழுவாக தொகுப்பு, தொகுப்பாக பரிணாமமடைந்து தொடந்து வந்திருக்கிறது.
அதனால்தான் மனிதன் தன்னை காத்துக்கொள்ள , குடும்பம், ஜாதி, இனம், மொழி, கட்சி, தேசியம் என குழுவாக சேர்த்துக்கொள்கிறான். அந்த குழுவில் தலைவனாகி விட்டால் தனக்கு உச்ச பட்ச பாதுகாப்பு கிடைக்குமென நினைக்கிறான். இந்த பாதுகாப்பு மனோபாவத்தால்தான் இவன் அடுத்தவனை அடக்கி ஆள துடிக்கறான். இந்த அடக்கி ஆளும் மனோபாவமே சமூகத்தில் இன்று மலிந்து கிடக்கிறது.
மனிதன் குழு மனப்பான்மையிலேயே வளர்கிறான்,
இதன் விளைவே உலகை பலமுறை( அனைத்துயிரையும் ) அழிக்கவல்ல அணு ஆயுதங்கள். பல நாடுகளில் அங்கங்கே தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

43: மனிதகுலத்தின் அடிப்படை உண்மை : கௌதம புத்தர்

உடலை உண்டாக்கும் பஞ்ச பூதங்களை கலைத்தால்தான் பிறவி அறும். இல்லையேல் பிறவி தொடர்ந்து வந்து துக்கத்தை அளித்துக்கொண்டே இருக்கும். பஞ்ச பூதங்களை சேர்த்து வைக்கும் சக்தி, மனிதன் 'தனித்து' வாழ வேண்டும் என்று விரும்பும் ஆசையே. ஆகவே ஆசையை அழித்து விட்டால் பஞ்சபூதங்கள் கலைந்துவிடும். மறுபிறவி ஏற்படாது .
நன்றி:- தினமணி, ஆன்மீக சிந்தனை,22-07-2010

Wednesday, July 14, 2010

42 : அனுபவத்தாலறிவது.

நாம் அடிப்படையில் மூன்று வித தன்மையில் இருக்கிறோம்.1, ஜடம், 2, அறிவு, 3, இரண்டும் கலந்த ( உடல், உயிர்).அறிவும் ஜடமும் இணைந்து உணர்வாகிறது. நாம் பெரும்பாலும் இந்த இரண்டும் கலந்த உயிர் தன்மையிலேயே 'உணர்ந்து' வாழ்ந்து வருகிறோம்.நம்மிடம்அறிவானது இந்த உயிர் தன்மையின் உணர்வு சார்ந்தே இது நாளும் செயல்பட்டு வருகிறது. இவ்வுணர்வையொட்டியே 'மனம்' எழுகிறது. அந்த மனமே வழிகாட்டியாகிறது. மனதின் கட்டமைப்பை உருவாக்கியதும், பராமரிப்பதும் உணர்வுதான். அறிவு இதனூடாக செயல்படுகிறது. அறிவு தனி நிலையது.
ஜடம் இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் மாதிரி தன்மூல சமநிலை நோக்கி 'கலைகிறது'.அறிவோ இந்த உயிரை செயல்படுத்தி தனது மூல சுத்த சுயத்தை அறிய தவிக்கிறது. இதனாலேயே பருவம் மற்றும் மூப்பு வருகிறது. இந்த தனி நிலையறிவை கவனித்தால் உரையிலிருந்து உருவிய வாளைப்போல ( உடலை, உயிரையும் விட்டு தனித்தும் காணப்படுகிறது ).
அப்போது உயிர் தனித்து வெறும் அறிவற்ற உணர்வு செயலாக மட்டும் இருக்கிறது. இந்த உணர்வு செயலில் எந்த எண்ணமும் கலப்பில்லை. காலில் தைத்த முள்ளை வெளியில் எடுத்தது போல தினவு நீங்கி சுகதன்மையை உணர்கிறது உயிர்.

Tuesday, July 13, 2010

41 :தன்னுணர்வு தகவமைப்பு ( அக உறுதி )

காலையில் தியானம் செய்கையில் புருவ மத்தியில் ஒளி துலங்குகிறது. அக்கணம் உடலும் உணர்வும் ஒரே ஏக உணர்வாக இருக்கிறது. எங்கும் ஒளி, ஒளி மட்டுமே! அவ்வொளி உணர்வை தன்னுணர்வு தகவமைப்பாக உறுதி செய்தல் வேண்டும். இவ்வளவு காலம் இந்த உணர்வு நமக்கு பரிச்சயமில்லாது இருந்தது. இப்போது பரிச்சயப்பட்டிருக்கிறது.இத்தன்னுணர்வு தகவமைப்பை நாம் பழக்கப்படுத்திக்கொள்ளும் வண்ணம் மதியம் , மாலை நேரங்களில் அத்தன்னுனர்வு தகவமைப்பை ஞாபகப்படுத்தி பழகி வரல் வேண்டும். இத்தன்னுணர்வு தகவமைப்பு நமக்கு பழக்கப்பட வேண்டும்.இவ்வாறு அக உறுதி செய்து கொள்ளல் வேண்டும்.

Friday, July 9, 2010

40:சும்மா இருப்பது.

மனித குரோமோசோம் ஒன்றை மட்டும் பிரித்து அதன் D N A - வை நீட்டி விரித்தால் அது 5 சென்டி மீட்டர் நீளமிருக்கும். 46 குரோமோசோம்களையும்( நமது உடலிலுள்ள ஒரு ஜீனுக்குள் உள்ள கருவில் உள்ள மூலப்பொருள்) சேர்த்து பிரித்து இணைத்தால் 2 மீட்டர் நீளமிருக்கும்.( ஒரு ஜீனுக்குள் இருக்கும் 'கரு'வான மூலப்பொருள் D N A - வின் நீளம் 2 மீட்டர் ) மனித உடலிலுள்ள எல்லா செல்களிளிருந்தும் D N A - வையும் பிரித்து நீட்டினால் இங்கிருந்து சூரியனுக்கு 500 முறை போய் வரலாம். இயற்கை எத்தனை அற்புதமாக சிக்கனமாக அடுக்கி வைத்திருக்கிறது பாருங்கள் . அப்போ உங்கள் உடலில் உள்ள ஜீன்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு ஜீனுமே தனித்தனி உயிரிதான். அவைகளுக்கு தனி உயிரும் தனி பண்பும், தனி எண்ணமும் உண்டு.

தினம் நீங்கள் காலையில் யோகா, தியானம் துவங்கும்பொழுது நீங்கள் பத்மாசனத்தில் அமரும்பொழுது , உங்களைப்போலவே உங்களுள் இருக்கும் கோடானு கோடி உயிரிகளையும் ஒரு ஒழுங்குக்கு கொண்டு வந்து அவைகளுக்கு பயிற்சி கொடுக்கும் விதமாக உங்கள் பயிற்சியை செய்து வாருங்கள்.
நீங்கள் அமர்ந்திருக்கிற மாதிரியே அவைகளையும் அமர சொல்லுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் அவைகளும் பின் பற்றி செய்யச்சொல்லுங்கள். நீங்கள் தினமும் தியானப்பயிற்சி செய்வது உங்களுக்காக அல்ல! உங்களுள் இருக்கும் உங்களின் கோடானு கோடி உயிரிகளையும் ஒரு ஒழுங்குக்கு கொண்டுவருவதற்காகவே.
இதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். அவைகள் தனித்தனி எண்ணம் கொண்டவையாக இருக்கின்றன . அவைகளை ஒரே வித தன்மைக்கு நீங்கள் எடுத்து வர வேண்டியுள்ளது. ( இதற்காகவே யோகா, தியானம் ) அவைகள் வெவ்வேறு எண்ணம் கொண்டவைகளாக இருப்பதால்தான் உங்களுக்கு அவ்வப்போது பல்வேறு எண்ணங்கள் தோன்றியவண்ணம் உள்ளது.
அவைகள் அனைத்தையுமே ஒரே நோக்கத்துக்கு திருப்ப வேண்டியுள்ளது. அவைகள் அனைத்துக்கும் பொதுவான ஒரு விஷயம் 'சும்மா' இருத்தலே!.நாமாக ஒரே 'எண்ணத்துக்குள்' கொண்டுவர முயற்சித்தால் சிறிது நேரத்தில் அவையவைகளும் தன போக்கிற்கு தனித்தனியாக எண்ண துவங்கிவிடுகிறது. ( அவைகளின் சுபாவம் அது. ஏனெனில் அவைகள் நீண்ட காலமாக அவைகள் அப்படிதான் - தனியாக - யோசித்து வந்திருக்கிறது.)
இப்போது நீங்கள் ஒரு ராணுவ அதிகாரியைப்போல நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அவையனைத்தையும் ஒரே குணமுள்ளதாக மாற்ற வேண்டியுள்ளது. அவைகளுக்கு இரண்டு தான் பழக்கமாக உள்ளது. ஒன்று ஏதாவது யோசிப்பது. மற்றொன்று முடிந்தவரை சும்மா இருப்பது. அவகளுக்கு பழக்கமான ஒன்றான சும்மா இருப்பதையே அவை அனைத்தையும் ஒரே நடை முறைக்கு கொண்டுவர நாம் உபயோகிக்க வேண்டியுள்ளது.
நீங்கள் அவைகளுக்கு பயிற்சியளிக்குபொழுது ஒரே லயமாகாமல் - உங்களுக்கு இடை இடையே ஏதாவது எண்ணம் தோன்றினால், சில ஜீன்கள் இன்னும் உங்கள் கட்டுப்பாட்டுக்கு வரவில்லை என அர்த்தம். அவ்வளவே.
அப்படியில்லாமல் ஒரே லயமானால் - அனைத்துயிரும் சும்மா இருந்தால் - அப்போது நீங்கள் ( உங்கள் மனம் ) காணாது போயிருக்கும். ஏனெனில் அவையனைத்தும் ஒரே லயமாகி அறிய துவங்கிவிடும்.அங்கு ஒரு பூரணம் திகழும். முரண்பட்ட வேறுபாடுகள், பேதங்கள் விலகும்.

Thursday, July 8, 2010

39: மனம் அறிவின் வாகனம்.

அறிவு, 'மனம்' எனும் வாகனத்தில் ஆரோகணிக்கிறது.அந்த மனமோ சதா அலைபாய்கிறது. ( அதன் அமைப்பு அப்படி ) அறிவும் அதன் கூடவே அலைய வேண்டியிருக்கிறது. ( அறிவு ஜடதுக்குள் பிரவேசித்ததின் விளைவு! ) நமது தியானத்தில் அந்த வாகனத்துக்கு ஓய்வு கொடுத்து கட்டிப்போட்டுவிட்டு, அறிவானது தனித்து நிற்கும்போது, தனித்து 'சும்மா இருக்கும்'போது அது தன்னில் லயிக்கிறது. அந்த லயிப்பில், லயத்தில் அறிவு தன்னையே அறிகிறது.
அந்த அகண்டாகார பேரறிவுக்கு 'தான்' ஜடப் பொருளுக்குள் புகுந்ததின் நோக்கம், தனக்கு தெரிய வருகிறது. இது அவரவர் அவரவரின் தியான பொழுதுகளில் அறிந்துகொள்ளவேண்டியதாக இருக்கிறது. அந்த அகண்டாகார பேரறிவு தன்னையறிய பொருளில் நுழைந்து , உயிராகி, புல்லாகி, பூண்டாகி, செடி கொடியாகி, விருட்சமாகி ,ஊர்வன, நகர்வன, பறப்பன, என பல்வேறு நிலைகளில் பரிணாமப்பட்டு மனிதராய் முதிர்வடைந்து நான் யார்? எனும் கேள்வி துவங்கி, இதை அறிவது அறிவே என்றறிந்து , இந்த அறிவு யாது? என்றாய்ந்து, தியானத்தில் தன்னில் மூழ்கி தன்னையறிகிறது. அந்த அகண்டாகார பேரறிவின் தேடலே இந்த 'பிரபஞ்ச ரகசியம்'.

Tuesday, July 6, 2010

38: இயல்பு சமநிலை.

இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்து பொருட்களுமே சமநிலையுறவே தவிக்கிறது. அதுவே இப்பிரபஞ்ச பொதுவியல்பாகவும் இருக்கிறது.இச்சமனிலையை அடைவதே ஒவ்வொரு பொருளின் முடிவானநோக்கு. ஏனெனில் அது அங்கிருந்தே துவங்கியுள்ளது இந்த பயணத்தை. அதுவே அதன் மூல இருப்பு. சமநிலையான அவ்வியல்பை நோக்கி 'கலை'வதே அப்பொருளின் மூல நிலைக்கு ஆனந்தமாகவும், இயல்பாகவும், இன்பமாகவும் உள்ளது.
இப்பிரபஞ்சமே ஆனந்தமாகவும், இயல்பாகவும், இன்பமாகவுமே இருக்கிறது. பொருள் நிலை என்பது எல்லைக்குட்பட்ட 'தனி'த்தன்மை வாய்ந்தது. சமநிலை என்பது எல்லையில்லா தன்மையது. ஒவ்வொரு பொருளுக்கும் தன் மூல இருப்பை நோக்கி கலைந்து நகர்தலே ஆனந்தமானது.
இக்காரணத்தினாலேயே நாம் உருவாக்கி வைத்த பழங்கால கட்டிடங்கள், பழங்கால கோவில்கள் எல்லாம் சிதைந்து வருகிறது. ( இதுவே பொருட்கள் தன் மூல இருப்பு நிலையை நோக்கி கலைந்து நகர்தல் என்பது ) பொருள் என்கிற நிலை கலைந்து தன் மூல நிலைக்கு திரும்புதல் எனலாம். ஆக ஒரு பொருள் தன் மூல நிலை நோக்கி திரும்புதல் இன்பமானது, ஆனந்தமானது.
நமது உடல்களிலுள்ள பல கோடி உயிரிகளுமே ஒவ்வொரு தனித்தனி பொருட்கள் தான். உயிர் அற்ற பொருளுக்கும், உயிர் உள்ள பொருளுக்கும் உள்ள வேறுபாடு என்னவெனில் உயிர் அற்ற பொருள், இயற்பியல், வேதியியல் விளைவுகளின் விதிப்படி அவை நடந்து கொள்கின்றன. தமக்கென்று எந்த இச்சையும் இல்லாது கிடக்கின்றன. எந்த தடையுமின்றி தன் மூலநிலையை நோக்கி ( தனது மூல இருப்பை நோக்கி ) இயல்பாகவே கலைந்து நகர்ந்து விடும்.
ஆனால் ஒரு உயிருள்ள பொருள் அப்படி தன் மூல நிலையை நோக்கி, திரும்ப நகர்ந்து விடுவதில்லை. அப்படி அப்பொருள் தனது மூல நிலையை நோக்கி நகர்தலை தடுத்து நிறுத்தும் செயலுக்கே உயிர் எனப் 'பொருள்'படும் . ஒரு பொருள் தன் மூல நிலையை நோக்கி நகர்வதே தீவிர முடிவாக இருக்கும், அதுவே அதன் இயல்பும் கூட.
நமது உடலிலுள்ள பலகோடி உயிர் பொருட்களும் இதற்கு விதி விலக்கல்ல! - அப்படி தன் மூல நிலைக்கு அப்பொருள் நகர்வதை தடுக்கும் உயிர் அப்பொருளை மேலும் ஓர் உயர்நிலை பரிமாணத்திற்கு இட்டு செல்கிறது. அந்த பொருளில் உயிர் என செயல்படுவதே அறிவுதான்.நாம் உயிர் என்று சொல்வது அறிவைத்தான்.அந்த அறிவு பல காலம் பரிணாமமடைந்து இப்போது மனித உயிரியாக பரிமாணப்பட்டிருக்கிறது.- அறிவு தன்னை அறியும் தேற்றமே பரிணாம முதிர்வு.
அந்த அறிவின் உச்சநிலையே இதுதான். இனி இந்த மனித உயிரிகளுக்கு( செல்களுக்கு ) சுதந்திரம் வழங்க வேண்டும். இந்த உயிரான 'அறிவு' தன் பொருளின் தன்மையான தன் மூல நிலையை நோக்கி, தன்மூல இருப்பை நோக்கி, நகர்தலை துவங்க வேண்டும். அல்லது பொருளின் இயல்புக்கு( அனுமதிக்க வேண்டும் ) ஆக அந்த மூல இருப்புக்குள் பிரவேசிக்க வேண்டும். இதுவே உயிரின் முடிவான நோக்கு.இதுவே ஜடப் பொருளுக்குள் அறிவு புகுந்ததின் நோக்கம்.

Sunday, July 4, 2010

37:யாவுயிரும் இன்பமுற!

இந்த சுந்தரம் ஒரு தனி உயிர் அல்ல. தனக்குள் இருக்கும் கோடிக்கணக்கான உயிரிகளின்( செல்களின் ) தொகுப்பு. சுந்தரம் தனக்குள் இருக்கும் இந்த கோடிக்கணக்கான உயிரிகளையும் மூடி காப்பாற்றும் ஒரு பாதுகாப்பு அமைப்பு. இந்த உள் உயிரிகளுக்கு உதவும் அனைத்து வித பொருட்களையும், இந்த உயிர்கள் ஏற்றுக்கொள்ளும். தீங்கு செய்யும் பொருட்களால் தான் மனிதனுக்கு வியாதி வருகிறது.( இந்த உயிரிகளே கண்ணாகவும், காதாகவும், மூக்காகவும், ரத்தமாகவும், எலும்பாகவும், தோலாகவும், இன்னபிற உறுப்புகளாகவும் இருக்கின்றன. அதன் ஒட்டுமொத்த பாதுகாப்பு உணர்வு தன்மையே இந்த உடல். மனம், அறிவு எல்லாம்.
நம்மோடு வாழும் மற்ற யாவுயிரையும் காப்பதே நம் கடமை. மனிதரைப்போலவே மரம் செடி கொடி, ஊர்வன, நகர்வன, பறப்பன, விலங்குகள் யாவுமே தனி உயிர் அல்ல. ஒவ்வொன்றுமே ஓர் உயிர்தொகுப்பு. தனக்குள் இருக்கும் உயிர் தொகுப்புகளை, எவ்விதம் இந்த மரம் செடி கொடி, ஊர்வன, நகர்வன, பறப்பன, விலங்குகள், மனிதர்கள் காப்பாற்றுகின்றனர் பாருங்கள், வேடிக்கைதான்.
இதுவே உயிர் பற்றிய அடிப்படை உண்மை. - தனக்கான இந்த உயிர் தொகுதியினை, மரம் செடி கொடி, ஊர்வன, நகர்வன, பறப்பன, விலங்குகள், மனிதர்கள்பெறும் விதமே, அவரவர் கர்மா. இந்த கர்மா மனிதருக்கு மட்டுமல்ல மரம் செடி கொடி, ஊர்வன, நகர்வன, பறப்பன, விலங்குகள் அனைத்துக்குமே உண்டு.
கர்மா என்பது ஒரு உயிர் தொகுதி உருவாகும் பொழுது, அது மரம் செடி கொடி, ஊர்வன, நகர்வன, பறப்பன, விலங்குகள், மனிதர்கள் எதுவாயினும் தனது மூலமான தன் தாய், தந்தையிடமிருந்து உயிரைப்பெறும்போழுதே இந்த பாதுகாப்பு உணர்வான் தன்மையையும் பெற்றுக்கொள்கின்றன. அதனதன் பெற்றோரும் அப்படியே!. இந்த பாதுகாப்பு உணர்வே கர்மா.
இது மனிதருக்கு அறிவால் தெளிவாகும்போது இந்த பாதுகாப்பு தன்மையைத்தான் இதுவரை 'நான்; என்றும் 'எனது' என்றும் கருதி வந்திருக்கிறேன் என்பதை அறிகின்றனர். ஆனால் அதி அற்புதமான உண்மை என்னவெனில் இந்த உயிரிகள் எல்லாம் எக்கணமும் இன்புற்றிருக்கவே வந்திருக்கின்றன.
உங்களுடைய 'நான்' எனும் தன்முனைப்பு எப்போதெல்லாம் கவனம் குறைகிறதோ அப்போதெல்லாம் இந்த உயிரிகள் குதூகலத்தில் இருந்திருக்கிறது. ( மனிதன் அதிக அளவுக்கு செக்ஸ் ஆசைப்படுவது இதனால் தான். அவன் செக்ஸ் ஈடுபாட்டில் இருக்குபொழுது அவனது தன்முனைப்பு தன்னை மறந்து கிடக்கிறது.}
அதன் ( செல்களின் ) தொடர்ந்த குதூகலத்தை தடுத்து வருவது உங்களுடைய 'நான்' எனும் தன்முனைப்பே! நீங்கள் சற்று நேரம் தியானத்தில் உங்களுடைய ' நானை' ( அதாவது உங்களுடைய 'நான்'என்பதான மனதின் செயல்பாட்டை ) நிறுத்தி வைத்ததால் அப்போது விளங்கும் உண்மை.
ஆகவே நண்பர்களே, சகோதரிகளே நீங்கள் காலையில் தியானம் செய்ய அமரும் பொழுது இவ்வுண்மையை கருத்தில் கொண்டு உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் யோகாவும், உங்கள் உடலில் மூளை முடுக்கிலுள்ள, பிராணனே சரியாக செல்லாத இருளில் கிடக்கிற உயிரிகளுக்கும் போய் சேருமளவுக்கு ஆழ்ந்த சுவாச பயிற்சியும் செய்து உங்கள் உள்ளிருக்கும் உயிரிகளுக்கு நன்மை செய்வீர்களாக! உங்களைப்போலவே வெளியில் உள்ள மற்ற உயிர் தொகுப்புகளுக்கும் நன்மை செய்வீராக!.

நன்றாக கவனியுங்கள் இந்த அடிப்படையிலேயே, ரமண மகரிஷியால் அவரது ஆசிரமத்தில் இருந்த பசு, மற்றும் சில உயிர்களுக்கு அவரால் மோட்சம் அளிக்கப்பட்டது.

Friday, July 2, 2010

36 : என் ஆவல் .

நமது தியானத்தில் தோன்றும் ஒளியை அகம் குளிர தரிசனம் செய்வதோடு மட்டுமன்றி, திடுமென அவ்வொளி பிரவாகத்திற்குள் குதித்து விடல் வேண்டும்.இப்போது நீங்கள் ஒளியில் கரைவதைக காணமுடியும். எந்த மிச்சமும் இல்லாமல் நீங்கள் கரைந்து , உங்கள் உடலிலுள்ள அனைத்து அணுக்களும் ஒளியாகி சுடர்வதை காணமுடியும். ஒரு இம்மிக்கூட குறைவில்லாது உங்கள் முழுமையும் ஒளியோடு இயைந்து விடும். உங்கள் உள் அமைப்பின் தகவமைப்பும், ஒளியின் உள்ளடக்கமாக மாறிவிடும். இப்போது ஒளியைதவிர எதுவுமேயில்லை. நீங்களும் (உங்கள் மனம் ) இல்லை. -மனம் என்பது ஒளியோடு இருள் விளையாடும் நிழல் விளையாட்டு . நிழலிருட்டு விளையாட்டு மட்டுமே மனம். நிழலும் இருட்டும் விளையாடுகிற நிழல்கள்தான் தான் இங்கிருக்கும் எல்லாமே!- ஒளியின் கதிக்கு உங்களை ஒப்படைத்து விட்டீர்கள். இப்படி ஒரு பத்து நிமிடம் நித்தம், நித்தம் ஒரு நாற்பத்தைந்து நாள் தொடந்து நீங்கள் ஒளியில் திளைத்தால், நீங்களும் இது மாதிரி ஒரு பிளாக் போட்டு, நீங்கள் அறிந்த உண்மை விளக்கத்தை அனைவருக்கும் சொல்வீர்கள். இப்படி அனைவரும் அறிந்துணர்ந்து சொல்லவேண்டும் என்பதும் என் ஆவல்.

Thursday, July 1, 2010

35 : ஒளி- காலம்- தியானம்.

1, இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருட்களும் , ஏன் அனைத்து அண்டங்களுமேக்கூட ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கிறது. ஒவ்வொரு அணுக்களுமே ஒன்றை ஒன்று சார்ந்தே செயல்படுகிறது. இந்த பிரபஞ்சத்தில் ஒரு தனித்த 'தனிமுதல்' உண்டு என்றால் அது ஒளியே ஆகும். ஒளி ஒரு சார்பற்ற தனி முதல். 2, காலம் : காலம் என்பது பொருட்களால் ஆன உலகுக்குதான் முப்பரிமாணமாக தோன்றுகிறது. அதுவும் கூட மனதின் தோற்றமே. எதிர்காலம், இறந்த காலம் என்ற ஒன்று கருத்து ரீதியானது தான். அப்படி இரண்டு காலங்கள் இல்லவே இல்லை. பொருள் மட்ட 'ஆதாரத்தள'த்தில் மட்டுமே இந்த கருத்துரு தோன்றுகிறது. ஒரு பொருள் சார்பியல் வேகத்தில் ( ஒளியின் வேகம் ) பயணிக்கும்போது , காலம் மட்டும் அல்லாமல் இடமும் தம் அளவுகளில் மாறுபடுகிறது. சரி ஒளியின் வேகத்திற்கே ஒரு விண்கலம் ஓடக்கூடியதாக இருந்தால் , அங்கு கடிகாரமும் ஓடாமல் காலமே ஸ்தம்பித்துவிடும். எவ்வளவு தான் நாம் சார்பியல் தத்துவத்தை புரிந்து கொண்டாலும், நம்மை அறியாமல் நம் ஆழ்மனதில் ஒரு சார்பற்ற தனிமுதல் காலம் ஒன்று இருக்க முடியும் என்ற எண்ணம் தோன்றுகிறது. உண்மையில் அப்படியொரு சார்பற்ற காலம் இல்லவே இல்லை.
இந்த பிரபஞ்சம் என்றோ ஒரு காலத்தில் தோன்றியதாக எண்ணுகிறோம். அக்காலத்திற்கு முன்பு இப்பிரபஞ்சம் என்னவாக இருந்தது? என்ற கேள்வி உடனே எழுகிறது. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் . காலமும் இடமும் இந்த பிரபஞ்சத்திற்குள் தான் இருக்கிறது .
ஆனால் பிரபஞ்சம் காலத்திற்குள் இல்லை.
அதேபோல பிரபஞ்சத்திற்கு வெளியே என்று ஒரு இடமும் இல்லை, பிரபஞ்சத்திற்கு முன்போ , அல்லது மறைவுக்கு பின்னாலோ காலமும் இல்லை. இடமும் இல்லை. பிரபஞ்சம் தோன்றிய பிறகே காலமும் இடமும் தோன்றியன.
இந்த பிரபஞ்சம் விரிந்துகொண்டிருக்கிறது என்று நினைக்கும்பொழுது எதில் விரிந்துகொண்டிருக்கிறது என்று கேள்வி எழுகிறது. பதில் பிரபஞ்சத்திற்கு வெளியே இடம் எதுவும் கிடையாது.
* குறிப்பு
1,ஒளி ஒரு சார்பற்ற தனி முதல்
2, ஒளி வேகத்தில் ஒரு பொருள் பயணித்தால் அந்த பொருளே மறைந்துவிடும்.
3, பிரபஞ்சத்திற்கு முன்போ , அல்லது மறைவுக்கு பின்னாலோ காலமும் இல்லை. இடமும் இல்லை.
4,நமது தியானத்தின் போது நாம் அந்த ஒளி நிலையில் லயிக்கும்பொழுது காலம் பற்றிய உணர்வு இருப்பதில்லை. ஏன்? ஒளி ஒரு சார்பற்ற தனி முதல்.இது பொருள் கடந்த நிலை,இதுவே காரணம்.
'காலம்' என்பது பொருட்களால் ஆன உலகுக்குதான். ஒரு உதாரணம். நமக்கு காலை, மதியம், மாலை, இரவு என நான்கு வேளைகள் உண்டு. நமக்கு அடுத்துள்ள ஒரு நட்சத்திர வாசிக்கு ( கற்பனைதான் ) இந்த வேளைகள் கிடையாது. அவர்களுக்கு ஒரே வேளைதான்.ஏனெனில் அங்கு எப்போதுமே ஒளி வீசிக்கொண்டுதான் இருக்கிறது. இதுபோலதான் காலத்தின் நிலையும்.
நன்றி: அணு, உயிர், அண்டம். கலைக்கதிர், கோவை.

அநுபூதி நிலையை அடைந்த ஒருவருக்கு எந்த கேள்வியும் மனதில் எழுவது கிடையாது. அவருக்கு மனமே செயல்படுவது கிடையாது. அவர் அனைத்து கேள்விகளையும் கடந்து விட்டவர். அவர் நிறைவானவர், பூர்த்தியானவர்.அங்கு அவரே கிடையாது. அது எந்த சலனமும் அற்ற வெளி. அங்கு எதுவும் சூல் கொள்வதில்லை. தனது தேக உணர்வையே கடந்து வாழ்ந்தவர்களையும் கேள்விப்பட்டு இருக்கிறோம். மனம் நிலவுகிற இடத்தில தான் சந்தேகங்களும்,கேள்விகளும்.

கவனிக்கவும்: பிரபஞ்சம் தோன்றிய பிறகே காலமும் இடமும் தோன்றியன.

34 : அன்னை

அன்னை கூறுகிறார்: முனிவருடைய ஒளி வெளிரிய நீல நிறமானது. தேவலோக ஒளி நீலம்.சைத்திய ஒளி ( பிங்க் ) ரோஸ் நிறமானது. உணர்வின் ஒளி வயலட். உடலின் ஒளி சிவப்பு. மனதின் ஒளி மஞ்சள். சத்திய ஜீவிய ஒளி போன்னொளியாகும்.

Tuesday, June 29, 2010

33 : சுவாசமும், மின் மற்றும் காந்த புலன்களும்.

காலை தியானத்தின்போது ஓம் சாண்டிங் பயிற்சி முடித்து 'நாடிசுத்தி' எனும் சுவாசப்பயிற்சியின்போது வலது நாசியை மூடி , இடது நாசி வழியாக உள்ளிருக்கும் காற்றை சீராக , மிக சீராக, காற்றை மெதுவாக நடத்தி , மெதுவாக, மிக மெதுவாக நடத்தி வெளி விடல் வேண்டும். முழுக்காற்றையும் வெளி விட்டபின் , அப்படியே அதே நாசியில் சுவாசக்காற்றை உள்ளிழுக்க வேண்டும்.முடிந்த மட்டும் நிறைவாக காற்றை இழுத்து, சுவாசப்பையை நிறைத்து , பின் இடது நாசியை மூடி, வலது நாசி வழியாக உள்ளிருக்கும் காற்றை சீராக , மிக சீராக, காற்றை மெதுவாக நடத்தி , மெதுவாக, மிக மெதுவாக நடத்தி வெளி விடல் வேண்டும். இப்படி மெதுவாக, மிக மெதுவாக என்பது ஒரு நடையாக அல்லாமல் ஒரு ஆமையின் நகர்வாக நகர்தல் நலம்.எவ்வளவு உங்களால் முடியுமோ அவ்வளவு தாமதமாக , ( இது நீண்ட காலமாக தியானம் செய்து வருபவர்களால் மட்டுமே முடியும்) இந்த நகர்தல் சற்று நின்றாலும் , அந்த 'அசைவற்றகணம்' உன் நுகர்வு தளம் முழுமைக்கும் ஒளிபிரவேசிக்கும். அக்கணம் நீ ஒளித்தன்மையையடைவாய்.இப்படி ஆழ்ந்து நீடித்த சுவாசப்பயிற்சி செய்வோர் இந்நிலையை அறிந்துணர முடியும். இந்த மூச்சுக்காற்றின் அடிப்படை ( இயற்பியல் சூத்திரம் ) என்னவென்றால், நாம் வலது நாசி வழியாக உள் இழுக்கும் காற்று நமது உணர்வு மண்டலத்திற்கு காந்தப்புலத்தை வலிமையடைய செய்வதாகவும், நமது இடது நாசி வழியாக உள் இழுக்கும் காற்று நமது உணர்வு மண்டலத்திற்கு மின் புலத்தை வலிமையடைய செய்வதாகவும் இருக்கிறது.இந்த இரண்டு ( காந்த மற்றும் மின் ) புலன்களும் வலிமையானவுடன் வினைபுரிய துவங்கி அது எண்ணங்களாக விகசிக்கிறது கண்கூடு. நமது தியான நிலையில் நாம், நமது எண்ணங்களை களைந்து ( கடந்து ) பிரவேசிக்க வேண்டியிருப்பதால், இந்த சுவாச ரகசியத்தை அறிந்துகொள்ள வேண்டியதாக இருக்கிறது. நமது 'தியானித்தல்' சரியான நிலைமைக்கு வரும்போது , நமது மூச்சுக்காற்று வலது நாசியிலும் அல்லாமல், இடது நாசியிலும் அல்லாமல் நம் புருவ மத்தியிலுள்ள சுழுமுனை எனும் இடத்தில் , இட வல சிற்றசைவாக துடித்து ( அந்த குறு இட நிலையில், மின் புலமும், காந்த புலமும் வினை புரிய அந்த வினை ஒளியாக துலங்க) அந்த ஒளியே உன் நுகர்வுக்கு கிடைக்கிறது. நமது நுகர்வுக்கு அப்போது ஒளிமட்டுமே நுகர்வாகும். இந்த ஒளி நிலையே 'மின் காந்த அலை தளம்' .

Saturday, June 26, 2010

32 ; உணர்வு தகவமைப்பு.

நமது காலை நேர ஆழ்ந்ததியான நிலையில் நமது புருவ மத்தியில் ஒளிப்பிரவாகம் தோன்றும். அந்த ஒளிப்பிரவாகம் நம் உடல் முழுவதும் சுடர்வதாகவும், நம் ஒவ்வொரு அங்கமும் சுடர்வதாக, நம்முடைய ஒவ்வொரு திசுவும் சுடர்வதாக, நம்முடைய ஒவ்வொரு அணுவுமே சுடர்வதாக, ஏன் அந்த அணுக்களிலுள்ள நேர்மின் துகள்கள், எதிர்மின் துகள்கள், நிலைமின் துகள்களும் சுடர்வதாக பாவித்து வர அந்த ஒளிச்சுடர் உணர்வு தண்டுவடத்தில் சுடர்ந்து , அந்த ஒளித்தண்டுவடம் பிளந்து (ஒளி துலங்கி 'நான்' எனும் 'நிழலான கவனம்' மறைந்து தொலைய ) இப்போது ஏக ஒளிப்பிரவாகம் தோன்றும். எப்போதும், எங்கும், எதிலும் ஒளியே . இந்த ஒளித்தன்மையே மின்காந்த அலைத்தளம். இந்த ஒளிநிலையில் நீங்கள் எவ்வளவு நேரம் நீடிக்க முடியுமோ அந்த அளவுக்கு உங்கள் அறிவு தெள்ளத் தெளிவாகும். ( இது நூற்றுக்கு நூறு சத்தியம்) இது அறிவில் இப்படி மாற்றத்தை செய்வதோடல்லாமல், உங்கள் உள்ளே நிகழும் உணர்வு தகவமைப்பையும் சீர் படுத்துகிறது. ( இந்த உணர்வு தகவமைப்பே சர்வமும்) ஆகையினாலேயே புத்தர்பிரான் இந்த உடலுக்கு வெளியே நிகழும் பிரபஞ்சத்தைப்பற்றியோ, மக்களால் நம்பப்பட்டுக்கொண்டிருந்த, இந்த அண்ட புவனங்களை ஆக்கி, காத்துக்கொண்டிருப்பதான 'கடவுள்' பற்றியோ அவர் எதுவும் மக்களுக்கு தெரிவிக்கவில்லை. என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இது இப்படியிருக்க, இந்த தியான நிகழ்வை நீங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திலேயே செய்துவரல் வேண்டும். இது மிக முக்கியம். இதை நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்திலேயே செய்து வருவது , உங்கள் உணர்வுதன்மையில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு தலைசிறந்த உத்தி.

Thursday, June 24, 2010

31:அறி உணர் நுட்ப மட்டங்கள்.

இந்த பிரபஞ்சம் எப்படி இருக்கிறதோ - ஒரே முழுப்பிரபஞ்சமாக, பால்வீதி மண்டலமாக, நட்சத்திரங்களாக, பூமியாக, கல்லாக, மண்ணாக, நீராக, செடி,கொடிகளாக, பொருளாக, உயிராக,மூலக்கூறாக,உயிர்செல்லாக, அணுவாக, அணுவினுள் அமைந்த மின் துகள்களாக, துகள்களை உருவாக்கும் மின் காந்த அலைகளாக, மிக நுட்பமான குவாண்ட ஆற்றலாக - இப்படி பல்வேறு மட்டங்களில் இப்பிரபஞ்சத்தை நாம் அறியமுடியும்.
நாம் எங்கிருந்து அளவிடுகிறோமோ அந்த தளத்தை 'ஆதாரத்தளம்' (frame of reference) என்று அழைக்கலாம். குவாண்ட ஆற்றலில் துவங்கி , மின் காந்த அலை,அணுத்துகள், அணு, மூலகம், கல், மண், பூமி,நட்சத்திரம் ,பால்வீதி, பிரபஞ்சம் இப்படி விகசிக்கிறது.
அதுவே அடிப்படை நுட்பமாக நோக்கினால், பிரபஞ்சம்,பால்வீதி, நட்சத்திரம், பூமி, உயிர் , மூலகம், அணு, மின் காந்த அலைகள், குவாண்ட ஆற்றல் என நுணுகிக்கொண்டு போகிறது.
இதில் மனிதன் இருக்கும்(frame of reference) 'ஆதாரத்தளம்'எதுவென அறிவீர்களாக!

நம்மை விட அகண்ட,விரிவான பூமி, நடசத்திரம் , பால்வீதி, பிரபஞ்சம் - இந்த 'ஆதாரத்தளங்களை' அறிந்துணர நாம் நமக்கு வெளியே பயணம் மேற்கொள்ள வேண்டும்.அல்லது தொலை நோக்கியால் பிரவேசிக்கவேண்டும் வெளி நோக்கி.


மனிதனின் கிடை மட்டத்தில் உள்ள செடிகொடி,பொருள்,காடு, மலை, நதி மற்றும் நீங்கள் எப்படி எதுவெல்லாம் உண்மை என நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களோ அவைகள் அனைத்தும். இப்போது துலங்கும் நம்முடைய ஐந்து புலன்களாலேயே அறிந்துணர முடியும்.இதுவே நமது 'ஐம்புலன்ஆதாரத்தளம்'.
மனிதனை விட சுருக்கமான மூலகம்,அணு,மின்காந்த அலை, குவாண்டம் ஆற்றல். போன்ற மிக நுட்பமான அறியுணர்வை,('ஆதாரத்தளங்களை') - பொருட்களால் கட்டப்பட்ட இந்த உடலை முழு ஓய்வில் இருத்தி நாம் 'நம்முள்ளே'( inner travel) பிரவேசிப்பதன் மூலமே - உடலை அசைவின்றி ஓய்வில் இருத்தினால் மனம் தானே ஓய்வில் ஒடுங்கும்- மனம் கடந்து, நமது அடிப்படை இருப்புணர்வில் ( தியானத்தில்) நம் அறியுணர்வை நிறுத்தினால் அணுத்தளம்,மின்காந்த அலைத்தளம், குவாண்ட ஆற்றல்தளம் ஆகிய இந்த 'ஆதாரத்தளங்களில்' சஞ்சரிக்க முடியும்.
நாம் கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் இருக்கும்போது நாம் இருக்கும் ( மனித மட்டத்தாலான 'ஆதாரத்தள' )உணர்வேயில்லாது இருக்கிற நிலையே அணுத்தளம்.( 'அணு ஆதாரத்தளம்' ).
நம் புருவ மத்தியில் தோன்றி பிரகாசிக்கும் ஒளியே மின்காந்த அலைத்தளம்.( 'மின்காந்தஆதாரத்தளம்' ).
எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் பூரண தன்மையே குவாண்ட ஆற்றல் தளம்.( 'குவாண்ட நிலை ஆதாரத்தளம்' ).

1, பிரபஞ்ச நிலை ஆதாரத்தளம்
2, உடுமண்டல நிலை ஆதாரத்தளம்
3, நட்சத்திர நிலை ஆதாரத்தளம்
4, கிரகநிலை ஆதாரத்தளம்
5, உயிர்நிலை ஆதாரத்தளம் ( மூளை, மனம்)
6, மூலகம் ஆதாரத்தளம்
7, அணு நிலை ஆதாரத்தளம்
8, மின்காந்த அலை ஆதாரத்தளம்
9, குவாண்ட நிலை ஆதாரத்தளம்

30: குவாண்ட உலகம்

ஒரு குவாண்ட ஆற்றலானது ( எதிர் மின் துகளான ) எலெக்ட்ரானை பொறுத்தவரையில் மிக மிக முக்கியமானதாக இருக்கிறது. இரண்டும் ஒன்றோடு ஒன்று உறவாடும் போது எலக்ட்ரானுக்கு பெருத்த விளைவு ஏற்படுகிறது. ஒரு பொருளின் அளவை 10^ -27 cm என்று எண்ணிக்கொள்ளுங்கள். அப்பொருளை பக்கம் பக்கமாக அடுக்கி 1cm நீளம் வரை வைக்க முயலுங்கள். எத்தனை பொருள் வைத்தால் 1cm நீளம் கிடைக்கும் என பார்த்தால் அது 10^27 என்பதை வெறும் கணக்கின் உதவியால் சொல்லிவிடலாம். இனி 10^27 என்றால் எத்தனை என்று பார்ப்போம். சர்க்கரை பருக்கை ஒன்று 1mm இருக்கலாம் 10^27 சர்க்கரை பருக்கைகளை பக்கம் பக்கமாக அடுக்கினால் அது ஒரு பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவு தூரம் செல்லும். இந்த பிரபஞ்சத்தை காட்டிலும் சர்க்கரை துகள் எந்த அளவுக்கு சிறியதோ அந்த அளவுக்கு குவாண்ட உலகம் சர்க்கரை துகளைவிட சிறியது. நமக்கு பிரபஞ்சத்தின் விசுவரூபம் ஒரு பக்கமும் , அணுவின் நுட்பத்திற்கும் நுட்பமான அளவு இன்னொரு பக்கமும் இருக்கிறது. நாம் நடுவில் இருக்கிறோம்.

நன்றி :: அணு, உயிர், அண்டம். ...கலைக்கதிர் அச்சகம். கோவை.

29,மின் காந்த அலைகள் .

மின் புலத்தை அசைக்கும்போது அங்கே காந்த அலையும், ஒரு காந்த புலத்தை அசைக்கும் போது அங்கே மின் அலையும் தோன்றுகின்றன. - மின் புலமும், காந்த புலமும் அடுத்தடுத்து மாறி மாறிப் பரவுவதாக ஜேம்ஸ் மேக்ஸ்வெல் என்பவர் ஒரு சமன்பாட்டை உருவாக்கினார். அதை நாம் மின்காந்த அலை என்கிறோம். ஒளி என்பதுவும் அதுவே. சூரிய ஒளி, விளக்கொளி, ரேடியோ அலை, நெருப்பிலிருந்து வரும் அனல், புற ஊதாக்கதிர், x-கதிர், காம்மா கதிர், ஆகிய அனைத்தும் பல்வேறுவகை ஒளிகளே. அனைத்தும் மின் காந்த அலைகள் குடும்பத்தின் அங்கத்தினர்களே.
நன்றி :: அணு, உயிர், அண்டம். ...கலைக்கதிர் அச்சகம். கோவை.

Wednesday, June 23, 2010

28 : இணைப்பு

நீங்கள், நான், இந்த பூச்சி, அந்த குதிரை, அந்த நாய், இதோ இந்த மரம், பூத்து குலுங்கும் இந்த கொடி,ஒரு எறும்பு, எதுவுமே தனி, தனி செயல்பாடு உடையதாகவே இருக்கிறது. இந்த பூமி, அந்த நிலா, புதன், சுக்கிரன், வியாழன், சனி என கிரகங்களும் தனி, தனி செயல்பாடுகள் உள்ளதுதான். நம்மோட சூரியன், மற்றும் நட்சத்திரங்களும் தனி,தனி செயல்பாடுகள் உள்ளவைதான். உங்களோட பால்வீதி மண்டலம் ,அதேப்போன்ற கோடிக்கணக்கான மண்டலங்கள் அனைத்துமே தனி,தனி செயல்பாடுகள் கொண்டவைதாம். ஏன்? ஒவ்வொரு அணுக்களுமே தனி, தனி செயல்பாடுகள் கொண்டவைதான். நம் தியானத்தில் , தியானத்தின் அமைதியில் , அமைதியின் ஆழத்தில், வெளியுலக தொடர்பை தாண்டி, எண்ணம்,அக காட்சிகளையும், மனதின் செயல்பாடுகளையும் தாண்டி, மனமற்ற வெளியில் , உடல் இருப்புணர்வையும் கடந்து, ஆழ்ந்த மோனத்தில்,- நான், நீ, அது என்ற விகல்பம் இன்றி, அனைத்து பொருட்களின் அடிப்படை இணைப்பாக , விகல்பமற்ற ஓர் ஒர்மையுணர்வு துலங்குகிறது. இது ஒவ்வொரு பொருளின் அடிப்படை தன்மையே . ஒவ்வொரு அணுவின் அடிப்படைத்தன்மையும் இதுவே. இதன் உணர்வுதன்மை மின் தன்மையதாக இருக்கிறது. அனைத்து பொருட்களுமே அடிப்படையில் மின் தன்மையதாகவேயுள்ளது.இந்த பிரபஞ்சம் தொடங்குமுன் இருந்ததும் வெறும் மின் மட்டுமே! இந்தநிலைமின், நேர் மின், எதிர்மின், என விகல்பமானதாலேயே இப்பிரபஞ்சம் தோன்றியிருக்கிறது. ( இந்த பிரபஞ்சத்தின் அடிப்படை 'அலகே' அணுதான். ( நமது அடிப்படை 'அலகு'ம் அணுதான். ) அந்த அணுவும் மூன்றுவித மின் துகள்களாலானது . 1,நேர்மின் துகள், 2, எதிர்மின் துகள், 3, நிலை மின் துகள். ஒரு அணுவின் உருவத்தில் நூறு ட்ரில்லியனில் ( 100,000,000 ) ஒரு பகுதிதான் கெட்டியான உட்பகுதி ( கருமையம்) இந்த பகுதியில் நேர்மின் துகளும், நிலைமின் துகளும் அடர்ந்து பிணைந்துள்ளது. அணுவின் வெளிவட்டத்தில் எதிர்மின் துகள்கள் சுற்றிவருகிறது. இடையில் இருக்கும் மீதியெல்லாம் வெற்றிடம்தான். பெரிதாக இருக்கும் இவ்வுலகம் நீங்கள், உங்கள் நாற்காலி, இந்த கம்ப்யூட்டர், ஆகிய யாவும் பெரும்பாலும் வெற்றிடத்தால் ஆனதுதான். இருப்பினும் நமது உடலும், பொருட்களும் கெட்டியாக இருப்பதற்கு காரணம் அணுவின் கருவைச்சுற்றி மேகம்போல் சூழ்ந்திருக்கும் மிக விரைவாக சுற்றிவரும் எதிர்மின் துகள்களால்தான்.) இந்த அகிலமே வெறும் மின்னோட்டமட்டும் உடையதுதான்.அந்த மின் தன்மையே நமது தியானத்தில் உணரப்படுகிறது.
இந்த ஒர்மையுணர்வே அனைத்தையும் இணைக்கிறது.நமது ஆழ்ந்த அடிப்படை உணர்வான இந்த மின்தன்மை நம்மையும் தன்னோடு இணைக்கிறது.

Tuesday, June 22, 2010

27 : மிக அடிப்படையான ஒரு விஷயம்.

ஆன்மீக உலகில் உள்ள அனைவருக்கும் வணக்கம். 'மிக அடிப்படையான' ஒரு விஷயத்தைப்பற்றி இப்போது பார்ப்போம். இதுவரை ஞானம் அடைந்த பெரியோர்களில் அநேகமானவர்கள், ஞானமடைந்த பின் அந்த ஞான நிலையுணர்வை மக்களுக்கு தெரிவிக்கும் வழியாக - தங்களின் பழைய மனதையே உபயோகிக்கின்றனர். என்பது கண்கூடு. இதனாலேயே உலகில் இத்தனை வேறுபாடுகளாலான மதங்கள் தோன்றியுள்ளன. அதாவது ஞான நிலை என்பது, இந்த மனித உயிருக்கு எல்லா கால கட்டத்திலும், எல்லா கலாசாரத்திலும், எல்லா மொழிகளிலும், எல்லாவித பழக்க, வழக்கம் உள்ளவர்களிடையேயும் ஒரே விதமாகவே நிகழ்ந்திருக்கிறது. புத்தரிடம் நிகழ்ந்த ஞான நிகழ்வுக்கும், யேசுவிடம் நிகழ்ந்த ஞான நிகழ்வுக்கும், முகமது நபியிடம் நிகழ்ந்த ஞான நிகழ்வுக்கும், இந்து மத முனிவர்களிடம் நிகழ்ந்த ஞான நிகழ்வுக்கும், மகா வீரரிடம் நிகழ்ந்த ஞான நிகழ்வுக்கும் ஒரு இம்மியளவு கூட வித்தியாசம் இருக்க வாய்ப்பில்லை. இது சரியாக ஆன்மீகத்தில் உள்ள அனைவரும் எந்த மறுப்புமின்றி ஒப்புக்கொள்ளும் உண்மை. ஒரு வேதியியலுக்கு 'நிரூபணம்' உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும், அனைத்து மொழிகளிலும் ஒன்றே தான். ஒரு இயற்பியலுக்கு 'நிரூபணம்' உலகிலுள்ளஅனைத்துநாடுகளிலும்,அனைத்து மொழிகளிலும் ஒன்றே தான்.ஒரு கணிதவியலுக்கு 'நிரூபணம்' உலகிலுள்ள அனைத்து
நாடுகளிலும், அனைத்து மொழிகளிலும் ஒன்றே தான். ஒரு தாவரயியலுக்கு 'நிரூபணம்' உலகிலுள்ள அனைத்து
நாடுகளிலும், அனைத்து மொழிகளிலும் ஒன்றே தான்.ஏன்?
உயிரியலுக்கே கூட 'நிரூபணம்' உலகிலுள்ள அனைத்து
நாடுகளிலும், அனைத்து மொழிகளிலும் ஒன்றே தான்.ஆனால்? இந்த ஆன்மீக இயலுக்கு மட்டும் ஏன் இத்தனை வித மதங்கள்? இத்தனை வித கடவுள்கள்?, இத்தனை வித நிறுவனங்கள், இத்தனைவித குருமார்கள், இத்தனை விதமான போதனைகள்,இத்தனை விதமான வழிகாட்டல்கள்?. இந்த ஆன்மீகஇயலுக்கும் ஒரு அறிவியல் விளக்கம் அவசியம் தேவை. சொல்லவேண்டிய விஷயங்களை நேரிடையாக சொல்லக்கூடிய அறிவியல் விளக்கம். அது எல்லா நாட்டினருக்கும், எல்லா இனத்தவருக்கும், எல்லா மொழியினருக்கும் பொருந்துவதாக இருக்க வேண்டும் .அந்த முயற்சியில் தான் இந்த கட்டுரைகள் எழுதப்படுகின்றன. ஆம், அறிவியலான ஆன்மீக நிரூபணதுக்காக!.

26 : இயற்கை விதி

நாம் தியானம் முடிந்து கண்விழித்து பார்க்க துவங்கியவுடன் மனம் விழித்துக்கொள்கிறது. மீண்டும் அது தன்னியல்பிலேயே ஒடதொடங்கிவிடுகிறது.சரி, நம் மனதின் இயல்பு எப்படிப்பட்டது என பார்ப்போம்.உதாரணமாக, நம் முன்னாள் ஒரு மோட்டார் சைக்கிளில் ஒரு இளம் ஜோடி சந்தோசமாக, சிட்டென பறந்து போகிறதைப்பார்த்ததும்; ஆகா! இந்தமாதிரி வாய்ப்பு நமக்கு உண்டா? என கேள்வி கேட்டு, பொருத்திப்பார்க்கிறது மனம்.( அப்படி வாய்ப்பு இருந்தால் , மனம் நிறைவடைகிறது. இல்லையென்றால் ' தனக்கு ஒரு புது மோட்டார்சைக்கிள் இல்லை', அல்லது 'என் மனைவி இந்த பெண்ணைப்போல' அவ்வளவு அழகாக இல்லை.அல்லது, இந்த ஜோடி மாதிரி உணர்வை நாமும் உணர்ந்து பார்க்கவேண்டும் என எண்ணுகிறது.) 1, அதாவது உங்கள் மனதுக்கும் உங்களுக்குமிடையில் ஒரு நல்ல தொடர்பு இல்லாத பட்சத்தில் , உங்கள் மனம் இப்படி தன்போக்கில் போக வேண்டியிருக்கிறது. உங்களுக்கு தொடர்பு இருந்தால் , உங்களால் உங்கள் மனதுக்கு பதில் சொல்லி அதை சமாதானப்படுத்த முடியும். 2,உங்கள் மனம் தனக்கென சில விதிகளை கற்றுக்கொண்டிருக்கிறது. உங்கள் மத விதி, உங்கள் ஜாதி விதி, உங்கள் குடும்ப விதி , 'உங்களி'ன் பொருளாதார விதி. இப்படி இன்னபிற விதிகள். உங்களின் மனதை இனி, இயற்கை விதி என்ன? என ஆராய சொல்லுங்கள். தியானம் முடித்து எழும்போது உங்கள் மனதிடம் இதை சொல்லுங்கள். நீங்கள் நீண்ட நாட்களாக தியானம் செய்பவராக இருந்தால் இந்த ஆராய்ச்சிக்கு உடனடி பலன் ஏற்படும். இயற்கை விதி என்பது , இந்த பிரபஞ்ச விதி, நம் உடல் இயங்கும் விதி, இப்படிப்பட்ட அடிப்படை விதிகள்.

Monday, June 21, 2010

25 : நம் வள்ளலுக்கு ஒய்வு கொடுப்போம்.

உங்கள் மனம் உங்களுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, உங்களுக்காக இடையாறாது, இரவு பகலாக உழைத்து வந்திருக்கிறது. அல்லது அதன் மீது நீங்கள், சற்றும் ஈவு இரக்கமின்றி, கொஞ்சமும் தாட்சண்யமின்றி அதனிடம் - உங்கள் சுயநலத்திற்காக - இடையாறாது ( கொஞ்ச நேரமும் ஒய்வு இன்றி ) வேலை வாங்கியிருக்கிறீர்கள். உங்கள் மனமோ தன் சக்தியையும் மீறி உங்களுக்காக உழைத்துக்கொண்டு இருக்கிறது 'இன்னும்' ஒரு அடிமைப்போல . அதனிடம் தன்னையே தியாகம் பண்ணும் வள்ளல் தன்மையும் உள்ளது. நீங்களோ ஒரு சொகுசான பேர்வழி. அனால் உங்கள் மனம் அப்படியல்ல! உங்களை முழுதுமாக உங்கள் மனதிடமே ஒப்படைத்துவிட்ட சோம்பேறி நீங்கள். நீங்கள் ஒரு மாபெரும் சோம்பேறி.உங்களுக்காக உங்கள் மனம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம், ஏராளம். அது பட்ட கஷ்டமும் கொஞ்சமல்ல! உங்களுடைய அனைத்து தேவைகளையும் அது நிறைவேற்றியிருக்கிறது. உங்களுடைய துர் இச்சைகளையும் கூட அது நிறைவேற்றி கொடுத்துள்ளது. உங்களுக்கு அரணாக, பாதுகாவலாக, உங்களை ரட்சிக்கும் ரட்சகனே உங்கள் மனம தான். அப்படிப்பட்ட உங்கள் மனதுக்கு கைமாறாக நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் ? குறைந்தபட்சம் உங்கள் மனதுக்கு கொஞ்சம் ஓய்வாவது கொடுக்கலாம். இன்றிலிருந்து அதற்க்கு கொஞ்ச, கொஞ்ச நேரம் ஒய்வு கொடுக்க ஏற்பாடு செயுங்கள் உண்மையாகவே நீங்கள் நன்றியுள்ளவராக இருந்தால்! நீங்கள் உங்கள் மனதுக்கு சற்று ஒய்வு கொடுக்க விரும்புபவராக இருந்தால் இந்த உதவிக்குறிப்பை கவனித்து படியுங்கள்.

* குறிப்பு : உங்கள் மனம் என்பது உங்களை காப்பாற்றிவரும் , உங்கள் தன்முனைப்பு அமைப்பு. அது தன்னிகரற்ற சக்தி. அது செயல்படும் விதமானது உங்களை மையப்படுத்தியே செயல்படும். உங்களைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் , உங்களுக்கு இடையூறு உண்டாக்கும் செயல் ஏதாவது ( அல்லது அதற்க்கான காரணங்கள் ஏதாவது ) நடக்கிறதா? என்பதிலேயே கவனமாக இருக்கும். உங்களை சுற்றி நடக்கும் செயல்களில் மட்டுமல்ல , உங்களுக்குள் எழும் எண்ணங்களை கூட அவ்வண்ணமே கவனிக்கும் தன்மையுடையது. அவ்வளவு துல்லியமான கவனம் கொள்ளும் உங்கள் மனதுக்கு ஒய்வு கொடுப்பது என்பது , அதனுடைய துல்லிய தன்மைக்கு குறையாத கவனத்துடன் விழிப்புணர்வோடு இந்த மனதிற்கு சற்று ஒய்வு அளிக்கவேண்டும். நீங்கள் ஒரு தூய விழிப்புணர்வோடு ஏகாந்த தன்மையில் கவனம் பிசகாமல் நடந்து வந்தால் -( இப்போது மனம் சற்று சும்மா இருக்காது. அவ்வப்போது இயங்க தொடங்கும். பாவம் அதன் பழக்க தோஷம் அது) - இப்போது மனதோடு வாஞ்சையாக பேசி அதை ஓய்வெடுக்க செய்ய வேண்டும். உங்கள் மனதுக்கு அவ்வப்போது ஒய்வு கொடுப்பதுதான் நீங்கள் அதற்க்கு செய்யும் கைம்மாறு. இவ்வளவு நாள் அது உங்களை காப்பாற்றி வந்ததுபோல, நீங்களும் அதை காப்பாற்ற வேண்டும். இதுவரை ஒரு தீவிர விழிப்புணர்வு உங்கள் மனதிடம் செயல்பட்டது போல , இனி அதேயளவு தீவிர விழிப்புணர்வை உங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள் அவ்வளவே.

Saturday, June 19, 2010

24 : உலகு - உடல் - உள்ளம் - உயிர் - உண்மை .

ஐந்து வித தன்மைகள் இருக்கிறது. 1,உலகு , 2,உடல் , 3,உள்ளம் , 4,உயிர் , 5,உண்மை . இதில் உண்மையை சூழ்ந்து உயிர் உறையாக பாது காக்கிறது. உயிரை சூழ்ந்து உள்ளம் உறையாக பாதுகாக்கிறது.உள்ளத்தை சூழ்ந்து உடல் உறையாக பாதுகாக்கிறது.உடலை சூழ்ந்து உலகு உறையாக பாதுகாக்கிறது.
அதாவது உலகு எனும் உறைக்குள் உடல் இருக்கிறது . உடல் எனும் உறைக்குள் உள்ளம் இருக்கிறது . உள்ளம் எனும் உறைக்குள் உயிர் இருக்கிறது . உயிர் எனும் உறைக்குள் உண்மை இருக்கிறது . இது மனித வாழ்வுக்குமட்டுமல்ல, இந்த பிரபஞ்சத்துக்கே பொதுவான நிலைமையாக இருக்கிறது . உலகு =இப்பிரபஞ்சம் . உடல்= ஸ்தூலப் பொருட்கள் , உள்ளம் = வேதியல் வினைகள் , உயிர்= ஈர்ப்புவிசை,காந்தப்புலன், மின்னோட்டம், உண்மை= உண்மை. அதாவது எப்போதுமே இருப்பது உண்மை . உண்மையிலிருந்து விகசிப்பது உயிர். உயிரிலிருந்து விகசிப்பது உள்ளம். உள்ளத்திலிருந்து விகசிப்பது உடல். உடலிலிருந்து விகசிப்பது உலகு. உள்ளிருப்பது உண்மை, அடுத்த அடுக்கில் உயிர், அடுத்த அடுக்கில் உள்ளம், அடுத்த அடுக்கில் உடல் , அடுத்த அடுக்கில் உலகு ஆனால் இவை அனைத்தும் 'ஒன்று' தான், நீங்கள் உண்மையில் இருந்தால்!

Friday, June 18, 2010

23 : இடைத்தரகர்கள்

நீங்கள் இருக்கிறீர்கள் இதை நீங்கள் அறிவீர்கள் . உங்களின் இருப்பு உணர்வு உங்களில் எங்கு மையம் கொண்டுள்ளது? இதை நீங்கள் ஒரு ஆழ்ந்த தியானிப்பின் மூலமே அறிந்துணர முடியும். உங்களின் இருப்பு உணர்வை நீங்கள் அறியும்போது அந்த உணர்வு ஒரு காட்சியாகவோ அல்லது ஒரு சப்த உணர்வாகவோ , ஒரு ருசியாகவோ , ஏன் உங்களின் ஐம்புல உணர்வுகளில் ஒன்றாகவோ அது இருக்காது.நீங்கள் இதுவரை அறியாத ஒரு உணர்வாகவே அது இருக்கும். அது ஆறாவது ஒரு உணர்வாகவே இருக்கும். உங்களின் ஐம்புல உணர்வுகள் ஒரு முழுமையை நோக்கிய ( குறையின் தவிப்பு- incomplete-குறைகுடம். ) உணர்வுகளே . இந்த ஆறாவது உணர்வோ முழுமையானது ( absolute-நிறைகுடம் ) அனைத்தையும் உள்ளடக்கிய,முழுநிறைவான , பூர்த்தியான,பூரண தன்மையானது. இந்த உங்கள் இருப்புணர்வின் மையத்திலிருந்து - இப்பிரபஞ்சத்தின் மகா இருப்புணர்வை நோக்கி இந்த இரு உணர்வையும் இணைப்பதே ஞான நிலையையடைதல் என்பது. அந்த பிரபஞ்ச மகா இருப்புணர்விலிருந்து விகசித்து, உணர்வு, எண்ணமாக, எண்ணம் பொருளாக விகசித்து விரிவடைவதே இப்பிரபஞ்சம்.அங்கிருந்தே நீங்களும் வந்தீர்கள் . உங்களுடைய இருப்புணர்வு அந்த மகா இருப்புணர்வின் தொடராகும். விஷயம் என்னவென்றால்,உங்களுள் நிகழும்-உங்களுள் துவங்கி உங்களுள் நிறைவாகும் - இந்த இருப்புணர்வின் இணைப்புக்கு இடையில் ( தரகர்கள் - கடவுள் , மதம் , குரு - எவரும் கிடையாது ஏன், இங்கு எந்த வியாபாரமும் கிடையாது ) உங்களுக்குள்ளே வந்து கடை விரிக்கும் கூட்டம் தான் இவர்கள் . அதாவது உங்களுக்கும் உங்கள் மூலத்துக்கும் நடுவில். உங்களுக்கும் உங்கள் மூலத்திற்கும் இடையில் இருப்பது உங்கள் ( குறைவுள்ள )மனம் மட்டுமே! ( குறைவுள்ள )உணர்வுகள் மட்டுமே! அதையும் கைவிடும்போழுதே இருப்பு இணைப்பு நடக்கிறது. உங்களை காப்பாற்றிக்கொண்டிருக்கிற, காப்பாற்றிக்கொண்டிருந்த மனதையே நீங்கள் கைவிடும் பொழுது, உங்கள் உணர்வையே நீங்கள் கைவிடும் பொழுது இடையில் இவர்களுக்கு என்ன வேலை? ஒரு தனி மனிதனின் உள் உலகுக்குள் துளி நாகரீகமுமின்றி நுழையும் இந்த இடைத்தரகர்கள் தான் உலகுக்கு ஒழுக்கத்தை, நாகரீகத்தை கற்று தருபவர்கள்.
இவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

22 : 'நான்' எனும் ஆளுமை - ஓஷோ

உங்கள் தனி மனித தன்மையை கண்டுபிடிப்பதில் உங்கள் சக்தியை ஈடுபடுத்துங்கள். இதுவே , உங்கள் பிறப்பிலிருந்தே உங்களுடன் நீங்கள் கொண்டு வந்திருப்பது . தனிமனித தன்மையே உங்களின் சாரமான இருப்பு. நான் எனும் உங்கள் தன்முனைப்பான ஆளுமையோ சமுதாயத்தால் உங்களுள் உருவாக்கப்பட்டது. அவர்கள் உங்களை என்னவாக ஆக்க விரும்பினார்களோ அப்படி ஆனதே ஆளுமை.
ஆனால் நீங்கள் மட்டுமல்ல இப்படி இருப்பது . உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தம் ஆளுமையை மட்டுமே அறிந்திருக்கிறார்கள். ஆளுமையை தவிர வேறெதுவும் இருப்பதே அவர்களுக்கு தெரியாது. தம்மையே அவர்கள் முழுமையாக மறந்துவிட்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே நடிகர்களாக, வெளிவேசக்காரர்களாக ஆகி இருக்கிறார்கள். மதவாதிகள், அரசியல்வாதிகள், பெற்றோர்கள் ஆகியோரின் கைகளில் ஆடும் பாவைகளாக அவர்கள் ஆகி இருக்கிறார்கள். தாம் ஒருபோதும் செய்ய விரும்பியிராத காரியங்களை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். தாம் பெரு விருப்பம் கொண்டிருக்கிற விதமான செய்கைகளை அவர்கள் செய்யாதிருக்கிறார்கள்.
ஒன்றுக்கொன்று எதிரும்புதிருமான முறையில் அவர்களின் வாழ்க்கை பிளவு பட்டுள்ளது. இதனால் அவர்கள் ஒரு போதும் அமைதியாக இருக்க முடிவதில்லை. அவர்களின் இயற்கை ( தனி மனித தன்மை ) தன்னை மீண்டும், மீண்டும் முன் நிறுத்தும் . அது அவர்களை அமைதியாக இருக்கவிடாது. அனால், அவர்களின் ஆளுமை எனப்படுவதோ அவ்வியற்கையை தொடர்ந்து ஒடுக்கிக்கொண்டே போகும். உணர்வற்ற தளத்துக்குள் மென்மேலும் ஆழமாக அதை பதித்துக்கொண்டே இருக்கும். இந்த மோதல் உங்களையும் உங்கள் ஆற்றலையும் பிரிக்கிறது. ஆனால் தனக்கெதிராக தானே பிரிந்த வீடு அதிக நாள் நிலைக்க முடியாது.
இதுவே மனித பிறவிகளின் முழு அவலமுமாய் இருக்கிறது.

Thursday, June 17, 2010

21 : மனதிடம் மாட்டிக்கொண்ட மனிதர்கள்.

நேற்று நள்ளிரவில் இது நடந்தது. எப்போதோஆங்கில சினிமாவில் பார்த்த ஒரு இடம் மாதிரி இருக்கிறது. பெரிய மலைத்தொடர். பச்சையே இல்லை, பெரும், பெரும் செந்நிறபாறைகளால் ஆன உயர்ந்தமலை.முகடுகள் வானத்தை தொட்டு, மேலே கவிழ்ந்து நிற்கிறது. மலையின் அடிவாரத்தில் ( மலையின் மடியில் )அமர்ந்து இருக்கிறேன். சுற்றும் சூழ மலைகள்.இன்னும் சிலகாட்சிகளில் குளறுபடிகள் 'லாஜிக்'கே இல்லை.( அனால் காட்சிகளின் அடிப்படையில் 'லாஜிக்' இருக்கிறமாதிரி தான் தோன்றுகிறது ) ( ஏன்? 'லாஜிக்' இல்லாத மாதிரியும் இருக்கிறது?'லாஜிக்' இருக்கிற மாதிரியும் இருக்கிறது?) எனது இடது பாதியில் மட்டும் உணர்கிறேன். வலது பாதி புலனாகவில்லை. ஒரு கருப்பு நிற 'ரிச்'சான( rich ) கம்யூட்டர். அதன் கீ போர்ட் பட்டன்கள் உருண்டை, உருண்டையாக வெண்ணிற முத்துபோல மின்னுகிறது. எதோ ஒரு டவுன் லோடு கொடுக்கிறேன். கம்ப்யூட்டர் ஸ்பீடாக இயங்குகிறது. ஆனால் டவுன் லோடு நிறைவு ஆகவில்லை. அதற்கான காரண காரியம் புரியவில்லை. ஏன்?, ஏன்?, மீண்டும் மனம் தேடுகிறது.
தேடி, தேடி ஓடினால் கொஞ்ச தூரம் போனால் பாதை அடைப்பட்டிருக்கிறது. எல்லா பாதைகளுமே சற்று, சற்று தூரத்தில் அடைப்பட்டு கிடைக்கிறதாக தகவல் வருகிறது. தேடல், தேடல், தேடல். ஒரே அவஸ்த்தையாக இருக்கிறது.மூச்சு திணறுகிறது, இந்த மாதிரியான அவஸ்தையை இதுவரை பட்டதில்லை. மனசு வலிக்கிறது. இனி உயிர் வாழவே முடியாது.
என் மனசை எதோ உருவம் இல்லாத பலமான மாயக்கரம் பிசைகிறது. மனிதன் இந்த தொந்தரவோடு வாழ்வதைவிட இறந்து போவது நிம்மதி.( இப்படி எவ்வளவு நேரம் நடந்தது என்பது பற்றி ஞாபகம் இல்லை. ) - இறந்து விட்டால் நிம்மதி எந்த பிரச்னையும் இருக்காது.
'திடுக்'கென தூக்கத்திலிருந்து எழுந்தேன்.கண் விழித்துப்பார்த்தேன்.கடிகாரத்தில் மணி இரண்டு. நல்லவேளை இது வெறும் கனவுதான், இது பச்சைப்பொய். அப்பாடா பிழைத்தேன் . இருந்தாலும் சந்தேகப்பட்டு வீட்டிலிருந்த கம்ப்யூட்டரையும் பார்த்தேன்.அது மூடி வைத்திருந்த படிதான் இருந்தது. நூற்றுக்கு நூறு இது கனவுதான்.
சிறுநீர் கழித்துவிட்டு வந்து,மீண்டும் படுத்து 'சரி நிம்மதியாக இனி தூங்குவோம்' என, கண்களை மூடி தூங்கப்போனால் , மீண்டும் அதே கம்ப்யூட்டர் காட்சிக்கு வருகிறது. மனசில் லேசாக வலி துவங்குகிறது. சற்றும் சூழ பாறையால் ஆன மலைகள். சே! வெறும் மனசால் வந்த கோளாறு.
எதோ டிரைவர் இல்லாத ரயில் போல மனம் தன்னிச்சையில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதுவும் என்னையும் சேர்த்து இழுத்துக்கொண்டு. எழுந்து அமர்ந்து கொண்டேன். இனி கண்ணை மூடி தூங்கப்போவதில்லை. ஏன் இந்த மனசு என்னை இப்படி வதைக்கிறது? ஏன்? இந்த மனம் என் கட்டுப்பாட்டிற்கு வர மறுக்கிறது? எனக்கும் மனசுக்கும் இடையே இவ்வளவு பெரிய இடைவெளி எப்படி ஏற்ப்பட்டது? இந்த மனசுக்கு சர்வ சுதந்திரத்தையும் கொடுத்து என்னையும் அதனிடமே முழுசாக ஒப்புக்கொடுத்து வைத்திருப்பது அப்போது அறிய வருகிறது. என் வசம் எந்த அதிகாரமும் இல்லை. சர்வ அதிகாரமும் தன் கையில் வைத்திருக்கிற சர்வாதிகாரியே இந்த மனம்தான். என் முழு உரிமையையும் அதனிடமே அடிமை சாசனம் போட்டு கொடுத்திருக்கிறேன்.தப்பிக்க முடியுமா? ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க?

Wednesday, June 16, 2010

20 : மனம் உருவான வரலாறு

இப்பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களையும் போல நீங்களும் ஒரு பொருள்தான். ( இப்பிரபஞ்ச பொருள் ) எல்லா பொருட்களுக்கும் தொடர்ந்து வாழ விருப்பம் இருப்பது போல உங்களுக்கும் நீடித்து வாழ விருப்பம் உள்ளது. இது பிரபஞ்ச பொதுஇயல்பு .உங்களின் 'வாழவேண்டும்' எனும் விருப்பமே மனமாக விருத்தியாகி செயல்படுகிறது என்பதை நாம் உணர வேண்டும். இந்த மனம் உருவான வரலாறு - தன் உயிருக்கு ஆபத்தை உண்டாக்குவது எது? தனக்கு பாதுகாப்பாக இருப்பது எது? என்பதைப்பற்றிய தகவல் தொகுப்பே 'மனம்' .( memory) மனம் இதன் அடிப்படையிலேயே செயல்படுகிறது. உங்கள் மனதில் எழும் எல்லா சிந்தனைகளும் , நினைவுகளும் உங்களின் 'பாதுகாப்பின்' அடிப்படையிலேயே நிகழ்கிறது. - என்பதை நாம் அறிய வேண்டும். நீங்கள் வந்த வேலை முடிந்து விட்டது என அறிந்தால், ( வாழ வேண்டும் எனும் ஆசை மறைந்து விடும்போது ) உங்கள் மனம் ஓய்வெடுக்க விரும்புகிறதை அறிவீர்கள். வாழும் ஆசை இருக்கும்வரை மனதின் ஓட்டத்தை நிறுத்துவது மிகவும் கஷ்டம். நம் வாழும் ஆசையே மனமாக செயல்படுகிறது.

Friday, June 11, 2010

19 : நிறைவான பூரண நிலை

நான் யார்? நான் என்பது இந்த உடலை, உயிரை பாதுகாப்புடன் வளர்த்திக்கொள்ளும் ஒரு தன்முனைப்பு மன இயக்கம்.( இந்த நான், மனிதர்க்கு மட்டுமல்ல விலங்குகளுக்கு, பறவைகளுக்கு, புழு, பூச்சிகளுக்கு,மரம், செடி, கொடிகளுக்கும் , நுண்ணுயிரிகளுக்கும் உள்ளது) சரி இந்த உடல், உயிர் இன்னும் சுமார் பத்து வருடத்திற்கு தாங்கும் என வைத்துக்கொள்வோம் அதுவரைக்கு உண்டான பாதுகாப்புக்கு தேவையான பொருளாதார நிலை, குடும்ப நிலை, சமூக நிலை எல்லாம் சரி செய்தாகிவிட்டது.பாதுகாப்பு சூழல் நிறைவாகிவிட்டது. இனி 'இவன்' இங்கு வந்த நோக்கத்தை கவனிக்க வேண்டும். இவன் இங்கு வந்தது இவன் விரும்பி அல்ல! (இங்கு இவனாக செயல்படுவது பிரபஞ்ச சக்தியே).இந்த இயற்கையோ நிறைவை நோக்கியே செயல்படுகிறது. சரி, நான் அடுத்து செய்ய வேண்டியது என்ன? மூன்று நிலைகளான 1, பிரபஞ்ச நிலை 2,நமது மன நிலை 3,மன நிலையை கடந்த 'நிறைவான' பூரண நிலை. இவற்றில் நாம் நம் தியானத்தின் மூலம் நிறைவான பூரண நிலையில் நின்று நிறைவான பூரணத்தில் (complete)லயிப்போம்.

Wednesday, June 9, 2010

18 : ஒரு நகைச்சுவை

எனக்கு இந்த ஜில்லா, இந்த தாலுக்கா, இந்த கிராமத்தில் 160/3சர்வே எண்ணின் படி 5 ஏக்கர் 42 சென்ட் நிலம் எனக்கு சொந்தமானது. அது என்னுடையது. இந்த உலகில் உள்ள எவரும் இந்த நிலத்துக்கு சொந்தம் கொண்டாட முடியாது. அது என்னுடையது. என்னிடம் ஒரு பஜாஜ் கம்பெனி மோட்டார் சைக்கிள் உள்ளது. அதுவும் என் பெயரில் ரிஜிஸ்ட்ரேஷன் செய்யப்பட்டு அதுவும் எனக்கு சொந்தமானது. நான் நான்கு பசு மாடு வளர்க்கிறேன் அவைகளும் எனக்கு மட்டுமே சொந்தம். நான் விரும்பினால் அதற்கு தீனி போடலாம், அதன் தாகத்துக்கு தண்ணீர் வைக்கலாம் , விருப்பமில்லாவிட்டால் அவைகளை அப்படியே கவனிக்காமல், பட்டினி போட்டு 'கொல்ல' முடியும். அது என் உரிமை. போன வாரம் இரண்டாயிரம் கொடுத்து சந்தையில் இரண்டு வெண்ணிற ஆட்டுக்குட்டி வாங்கினேன். அதுவும் எனக்கு சொந்தம். நான் விரும்பினால் அதனுடைய ஒரு காதை மட்டும் அறுத்து , நெருப்பில் சுட்டு தின்னலாம். எவனும் கேட்க முடியாது.ஏன் அதை கொன்று கறி சமைத்து உண்ணலாம். (உலகில் உள்ள எல்லா ஆடுகளுமே இதற்குதான் கொல்லப்படுகிறது) அல்லது அந்த இரண்டு ஆட்டுக்குட்டிகளையும் கட்டப்பட்டிருக்கிற கயிற்றை தரித்து விட்டு , எங்கோ போய் பிழைத்துக்கொள்ளுங்கள் என சுதந்திரமாக திரியவிடலாம். எனக்கு சொந்தமாக மனைவி ஒருத்தி, இரண்டு பிள்ளைகள் இருக்கின்றன.
எனக்கு ரொம்ப நாளாக ஒரு கேள்வி. என்னுடைய கண் அணுக்களால் ஆனது, என்னுடைய காது அணுக்களால் ஆனது, என்னுடைய வாய் அணுக்களால் ஆனது,என்னோட மூளை அணுக்களால் ஆனது, என்னோட ஒவ்வொரு உறுப்பும் , எலும்புகளும், ரத்தமும் அணுக்களால் ஆனது. என் உடல் பல கோடி அணுக்களால் ஆனது. சரி, இது இப்படி இருக்க-
என்னோட உடலில் உள்ள எல்லா அணுக்களும் இந்த பிரபஞ்சத்துக்கு சொந்தம். இந்த பிரபஞ்சம் முழுக்க உள்ள அனைத்து அணுக்களும் என் அணுக்களும் ஒரே மாதிரியானது தான். இந்த உடலிலுள்ள அனைத்து அணுக்களும் இப்பிரபஞ்சத்துக்கு சொந்தமானது என்றால்! அப்போ நான் என்பது என்ன?

17 : மூன்று நிலைகள்

ஓம் சாந்தி, சாந்தி,சாந்திஹி
இதன் பொருள்: 'மூன்று உலகும் சாந்தி பெறுவதாக!' என்பதாகும்.
அந்த மூன்று உலகு :
1, நமக்கு வெளியே உள்ள பௌதிகமான புற உலகு - இப்பிரபஞ்சம் முழுமையும். அதன் அனைத்து செயல்களும்.
2, நமது அக உலகு. எண்ணங்கள் உலாவுகிற, எண்ணங்களால் அறியப்படுகிற நமது மனம்.
3,அக உலகான மனதை தாண்டி (மனதின் செயல் கடந்து) துலங்கும் பூரணம். ( நமக்கு மனதை கடப்பதால் பூரணம் துலக்கமாகி அறியப்படுகிறது ) இப்பூரணம் எங்கும் இருக்கிறது.
நமது அக உலகு(அதாவது மனம்) வெளியிலுள்ள புற உலக சக்திகளாலும், ( ஒளி, தட்ப வெட்பம், காந்த புலன்கள், புவி ஈர்ப்பு. அண்ட வெளி ஈர்ப்பு இன்ன பிற சக்திகளாலும்) நமக்குள் இயங்குகிற பூரண தன்மையாலும் இயக்கப்படுகிறது. அதாவது புற - நடு - உள்.

Tuesday, June 1, 2010

16 : அறிவு மடை மாற்றம்

காலை நேரம் யோகா முடிந்து ஆழ்ந்த தியானத்தில் புருவ மத்தியில் ஓர் ஒளிப்பந்து பிரகாசிப்பதை கவனித்து இருப்பீர்கள். அந்த ஒளிப்பந்தை சாட்சி தன்மையாக கவனித்தல் (அறிவு அசைவற்று) (சுவாசமும் அசைவற்று) -still- எவ்வளவு நேரம் நிகழ்வில் இருக்க முடிகிறதோ அதுவே அறிவு மடை மாற்றம். -'பூரண ஒளிப்பிரவாகம்'- அதாவது, முதல் செல் உயிரிலிருந்து, இந்த கணம் வரை உங்கள் அறிவு 'நான்' எனும் (சுய சார்பு) உயிர் வாழ்தலிலேயே நிலை கொண்டிருந்தது- மாறி, அனைத்தும் ஒன்று எனும் பூரணத்துவம் துலங்க துவங்கும் நிகழ்வு.

Saturday, May 29, 2010

15 : ஆத்மா ஒரு விளக்கம்

நீங்கள் அறியும் இந்த உலகு, மாயா கோவ்ச்கியின் புல்லங்குழல்இசை, ஒரு அழகிய பூத்து குலுங்கும் மலர், கள்ளம் கபடு அற்ற,தன் போக்கில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சிறுமி, மத்தியான கொளுத்தும் வெயிலில் ஒதுங்க கிடைக்கும் அடர்ந்த புங்க மரத்து நிழல், அதன் குளும் காற்று , மற்றும் இன்னும் சிறிது நேரத்தில் வெட்டி கொல்லப்பட போகிற அந்த திருவிழா ஆட்டுக்குட்டி, சற்று நேரத்திற்கு முன், விபத்தில் காயமடைந்து அழுது கொண்டிருக்கும் இந்த சிறுவன், இன்னும் எவ்வளவோ, நீங்கள் அறிவது, நீங்கள் உணர்வது (உங்களால் வாழப்படுகிற உங்கள் வாழ்வு) அனைத்தையும் அறியப்படுவது, உணரப்படுவது உங்கள் உள்ளே உள்ள 'உணர்வு தளத்தி'லேதான். இந்த உலகு, இந்த பிரபஞ்சம் எல்லாமே உங்களை பொறுத்த வரையில் , உங்கள் உள்ளேதான் நிகழ்கிறது.
அந்த தளம் தான் , உங்கள் வாழ்வு நிகழும் தளம். உங்கள் வாழ்வின் அனைத்து அர்த்தமும் இதில் மட்டுமே உள்ளது. இந்த உணர்வு தளத்தை நாம் கூர்ந்து கவனித்து அதன் கட்டமைப்பு, அதன் இயக்கம், அதன் தன்மையை அறிவது அவசியம். அது நிறைவு பெறாத நிலையில், (நிறைவை நோக்கிய -குறையின் தவிப்பு) இந்த தவிப்பு உள்ளவரை இவை அனைத்தும் நமக்கு துலக்கமாகிக்கொண்டேயிருக்கும்.
'போதும்' எனும் ஒரு உணர்வால் இந்த தளத்தை நிறைவு செய்ய முடியும். இந்த உணர்வுதளம் நிறைவு நிலையில் நின்றால், உணர்வு தளம் பூரணத்துவம் பெறும்.
அந்த பூரண தன்மையை நோக்கியே , நமது வாழ்வு அந்த ஒருசெல் உயிரியிலிருந்து புறப்பட்டு இன்று வரை, பல்லாயிர பிறவிகள் தொடர்ந்து 'தவித்து'க்கொண்டிருக்கிறது.இதைத்தான் முன்னோர்கள் 'ஆத்மா' என சொல்லியிருக்கிறார்கள்.

Tuesday, May 11, 2010

14 : மூலமும் வியக்தியும்.


மனித உயிரின் தொழில் நுட்பம் மிக நேர்த்தியாக இருக்கிறது. நாம் இரட்டையாக இருக்கிறோம். நமக்குள் ஒருவன் இருப்பதை நாம் அறிவோம். நாம் செய்கிற காரியத்தை நாமே உள்ளிருந்து கவனித்துக்கொண்டும் இருப்போம் தெரியுமா? செயல்படுபவன் ஒருவன், கவனிப்பவன் ஒருவன். கவனிப்பவன் வெறும் சாட்சிதன்மையுடன் இருக்கிறான். சாட்சி தன்மையாக இருப்பவன் நமது மூலம். காரியமாற்றுபவன் நமதுவியக்தி.
இந்த பிரபஞ்சத்திலும் இந்த இரட்டை தன்மை உண்டு. மூலம் ஒன்று; வியக்தி ஒன்று. தூய இருப்பே அந்த மூலம். நம் காட்சிக்கு புலனாகும் இந்த பிரபஞ்ச தோற்றமே வியக்தி.

Wednesday, March 31, 2010

13 : சரியான ஆதாரம்.


நீங்கள் இப்போது
பூமி எனும் வாகனம் மீது
அமர்ந்து இருந்து பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
இந்த வேகத்தை நீங்கள் உணருவதில்லை.
ஏன் தெரியுமா?
பூமி சூரியனை சுற்றி வருகிறது.
சூரியன் பூமியின் போக்குக்கு எதிரான திசையில்
தனது குடும்பத்தோடு பால்வீதி மண்டலத்தை சுற்றுகிறது.
பால்வீதி மண்டலமோ
அதன் தொகுப்பை சுற்றி வருகிறது.
இதுபோல ஒவ்வொரு சுற்றுப்பாதையும்
எதிரெதிரே அமைந்து இருப்பதால்
உங்களுக்கு பாலன்ஸ் கிடைக்கிறது.
இதுவே உங்களை நிறுத்தி ,
இருத்தி வைத்துள்ளது இங்கே.
நீங்கள் இங்கு இருப்பதற்கு காரணமும் இதுவே.
நீங்கள் இருக்கும் பூமியை நிலவு சுற்றி வருவது
உங்களுக்கு ஸ்பெஷல் எபெக்ட்.
இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு அணுவுமே
இந்த பிரபஞ்சத்தின் மையம்.
அவ்வண்ணமே அமைந்துள்ளது இப்பிரபஞ்சம்.
ஆகவே இந்த பிரபஞ்சம் எதோ தன்னிச்சையில் உருவானது இல்லை.
இந்த பிரபஞ்சம் வெறும் பொருட்களால் ஆனது இல்லை,
ஒரு பேரறிவு மனம் என்பதற்கு
மேற்கண்ட விபரங்களே சரியான ஆதாரம்.

12 : மன சிலந்தி.


யோகா முடித்து த்யானத்தில் நுழைந்தால்,

வெட்ட வெளியான

வெண்ணிற மைதானம் நெற்றி சுட்டியில் தோன்றும்.

ஒரு நொடியும் குறையாத விழிப்புணர்வோடு

இருக்கும்வரை இது தொடரும்.

ஒரு அரை நொடி கவனம் தவறினாலும்,

அந்த வெண்ணிற மைதானத்தில் அங்கங்கே

இருள் திட்டுகள் தோன்றி களங்கம் உண்டாகும்.

அந்த இருள் திட்டுகளை தொடர்ந்து

திசைக்கொரு ‘கால்’ முளைத்து

மன சிலந்தி வலை பின்ன தொடங்கிவிடும்.

(வலை-எண்ணம்) அந்த எடையில்லா பூச்சியின்

இந்த வலைப்பசையில் சிக்கிக்கொண்டு

அதிலேயே லயிப்பதும் உண்டு.

தீவிர கவனம் கொண்டு

அந்த வெண்ணிற வெட்ட வெளியில் களங்கம் ஏற்படாது

காத்து கொள்வோருமுண்டு.

Saturday, March 27, 2010

11 : செத்தாரைப்போல திரி.


பதினொன்று
பத்து
ஒன்பது
எட்டு
ஏழு
ஆறு
ஐந்து
நான்கு
மூன்று
இரண்டு
ஒன்று
ஒன்றுமில்லை

Sunday, March 21, 2010

10 : நமது இருப்பு நிலை.

நண்பர்களே, நீங்கள் இருக்கிறீர்களா? இருக்கிறோம் என்றால் அந்த இருப்பை எப்படி அறிகிறீர்கள்? கொஞ்சம் கண்மூடி யோசித்து பாருங்கள். பொதுவாக நம் இருப்பை நாம் நமது உடல் முழுவதும் உணர்வதாக நினைக்கிறோம். கொஞ்சம் ஆழமாக பாருங்கள். நாம் நமது இருப்பை நமது முதுகு தண்டுவடத்திலேதான் உணர்கிறோம். நமது ஐம்புல உணர்வை விடுத்து,{ஐம்புல உணர்வு உடல் முழுவதும் உள்ளதாக உணர்வது ) நம் தண்டுவட உணர்வுக்கு போனோமானால், நமது இருப்பு உணர்வு முழுவதும் இந்த தண்டுவடத்தில் உணரமுடியும். நமது ருசி, வலி, இன்னபிற உணர்வுகளையும் நாம் இங்கேதான் உணர்கிறோம் என்பதையும் கண்டுகொள்வீர்கள். த்யானத்தின்போது இதை தெளிவாக உணர முடியும். இன்னும் மிக ஆழ்ந்த த்யானத்தில் இந்த உணர்வு ஒரு புள்ளியில் ஓடுங்குவதையும் அறிய முடியும். நமக்கு இருக்கும் இருப்பு உணர்வைப்போலவே, இந்த பிரபஞ்சத்துக்கும் ஒரு இருப்பு உணர்வு இருக்கிறது. நமது இருப்பு உணர்வும் அந்த பிரபஞ்ச இருப்பு உணர்வும் ஒரு லயமாவதே ஞானமடைதல் என்பது. நமது இருப்புணர்வை தவிர, நம்மில் நிகழும் மற்றவை அனைத்தும் மாயை நிரந்தரமில்லாதது. அதே போல இப்பிரபஞ்சத்தின் இருப்புணர்வு மட்டுமே நிலையானது. நம் காட்சிக்கு புலனாகும் இந்த தோற்ற பிரபஞ்சமே ஒரு மாயை நிரந்தரமில்லாதது. . இருப்புணர்வு மட்டுமே நிலையானது.நிரந்தரமானது. ஆகவே நமது இருப்பு உணர்வை ஆழ்ந்து கவனிப்போம்.

Saturday, March 20, 2010

9 : ஆனந்த அலை.


இந்த பிரபஞ்ச சாகரத்தில் நீ ஒரு துளி, நான் ஒரு துளி, அவன் ஒரு துளி.
இந்த சாகரத்தில் உள்ள துளிகள் அனைத்தும்
தனித்தன்மை வாய்ந்தது,அதனதன் உள் அமைப்பில்.
துளிகளால் ஆனதுவே சமுத்திரம்.
இந்த துளியின் உள் அமைப்பும் மாறிக்கொண்டேதான் இருக்கிறது,
(இந்த உள் அமைப்பை நிர்ணயிப்பதும் அந்த சாகரமே)
துளிக்கு ஒரு தனி நிலை தொடர்வதில்லை.
இந்த துளிக்கு என ஒரு தனி வாழ்வு உண்டா?
அதன் எதிர் நீச்சல்தான் என்னே? அது எதை சாதிப்பதற்காக இந்த எதிர் நீச்சல்?
அதற்கு பாவம் ஓய்வுகூட கிடையாது.
அந்த துளி எந்த உண்மையை நிலைநிறுத்த இந்த எதிர் நீச்சல் போடுகிறது?
அந்த துளியே இந்த சமுத்திரத்தின் ஒரு பகுதிதான்
.இதை அறிந்துகொள்ளக்கூட அதற்கு நேரம் இல்லை.
அப்படி ஒரு போராட்டம்.
சமுத்திரம் தான் துளியின் கதியை என்றும் நிர்ணயிக்கும்,
துளியால், 'துளிக்கூட' சமுத்திரத்தின் கதியை நிர்ணயிக்க முடியாது.
துளி போராட்டத்தை விடுத்து தன்னை அறிந்து- தன்னை மறந்து
சமுத்திரத்தோடு இயைவதுவே அதற்கு விதிக்கப்பட்டது.
அப்படி இயைந்தால் துளிக்குள்ளும் அலை நிகழும்
அது ஆனந்த அலை.

Friday, March 19, 2010

8 : அறிவு - பேரறிவு.


அறிவு

நமது 'உடல்' எல்லையோடு இயங்குவது
நமது அறிவு
அதாவது -மனம்.
அவரவர் அறிவு,

நமது சிந்தனைக்கு எல்லை இருப்பதால்,
அதற்கு வடிவம் உண்டு.

பேரறிவு,

இந்த பிரபஞ்சம் உட்பட அகண்டு,விரிந்து ,
எல்லையே அற்று இயங்கிக்கொண்டு இருப்பது பேரறிவு.
முற்றறிவு.

அந்த பேரறிவு தான்
இந்த சின்ன உடலிலும் இயங்குகிறது.

அந்த பேரறிவுக்குள் தான் நாமும் இருக்கிறோம்.

நமக்கு 'எல்லையோடு' மட்டுமே எண்ணம் கொள்ள தெரியும்.
நமக்கு எல்லைகளற்ற தன்மையை உணர தெரியாது.

எல்லைகளற்ற தன்மையை அறிவதே ஆன்மிகம்.

நாம் எப்போது இந்த உடல் எல்லையைத்தாண்டி,
எல்லையேயில்லாத
அந்த அடிப்படையான அறிவை அறிவது?

அது எல்லைகளற்று இயங்குவதால்

அதற்கு ஒரு வடிவம் இல்லை.

அதற்க்கு ஒரு 'வடிவம்' இல்லை என்பதால் நம்மால் அறிய முடிவதில்லை.

நாம் பழக்கத்தின் வசப்பட்டவர்கள்.

அந்த பேரறிவை தெரிந்து கொள்ள 'புதிதாக' பழகுவோம்.

7 : வலியும் - சுகமும்.



நான் என்பது வலி உணர்ச்சி.'நான்' என்பதை நாம் உணரும் விதம் இதுதான்.( அது குறை உணர்ச்சி )
அது உடல் எனும் எல்லைக்கு உட்பட்டு உணரப்படுவது.
அந்த முழுநிலை என்பது சுக உணர்ச்சி. இது எல்லையற்ற தன்மையில் உணரப்படுவது.
அந்த சுக உணர்வை உணர்வது 'நான்' அல்ல! எம்முள் இருக்கும் அந்த முழுநிலையே அச்சுகத்தை அறிவது.
(அதாவது அந்த எல்லையற்ற முழுநிலைசக்தி நான் எனும் உடல் எல்லையையும் உள் அடக்கிய முழுமை .)
(அந்த எல்லையற்ற முழுநிலை விகசிப்பை உடல் எனும் 'எல்லைக்குள்' அடக்கி வைத்திருப்பது தான் தவிப்பு,
- அதில் உணரும் உணர்வுகளே வலி - )
எந்த உணர்வானாலும் உடல் எல்லைக்குள் உணரப்படும்போது அது வலியை சார்ந்தே உணரப்படும்.அது குறை உணர்வே!
எந்த உணர்வானாலும் அந்த எல்லையற்ற விகசிப்பில் உணரப்படும்போது அது சுக உணர்வாகவே உணரப்படும்.
ஆக! வலி 'நான்'.
சுகம் 'முழுநிலை'.
வலிக்கு உடலே எல்லை. சுகத்துக்கு எல்லையே இல்லை.
-(அந்த எல்லையற்ற முழுநிலை விகசிப்பை உடல் எனும் எல்லைக்குள் அடக்கி வைத்திருப்பது தான் தவிப்பு,பதற்றம். -
அதில் உணரும் உணர்வுகளே வலி )
-உடல் எல்லைக்குள் அடக்கி வைத்திருக்கும் அந்த விகசிப்பை
கட்டவிழ்த்து விட்டாலே போதும்-
அது எல்லையற்ற நிலையில் தன் சுய சுபாவத்துக்கு வந்து விடும்.
நமக்கு தவிப்பும் இல்லை, வலியும் இல்லை,திருப்தி, திருப்தி, திருப்தி,
ஒரே பரம சுகம் மட்டுமே!

6 : மனமும்-அலையும்.



ஒரு அளவுள்ள சிறு பாத்திரத்தில் உள்ள தண்ணீர் பரப்பில், நடுவில் தோன்றும் அலையானது அதன் எல்லையாகிய பத்திரத்தின் விளிம்பை அடைந்ததும், அது திரும்பி புறப்பட்ட இடத்தை நோக்கியே வருகிறது. ஒரு குளத்தின் நடுவில் தோன்றும் அலையானது அதன் விளிம்பான கரையை அடைந்ததும் அது திரும்பி புறப்பட்ட இடத்தை நோக்கியே வருகிறது.நீர் பரப்பின் நடுவிலிருந்து அலைகள் எழும்பி வெளி நோக்கி போவதும், ஏற்கனவே கரையிலிருந்து திரும்பி வரும் அலைகள் இந்த அலைகளை வெட்டி தடுப்பதுமான இந்த மாதிரி நிகழ்வே மனத்தில் நிகழும்போது எண்ணமாக அறியப்படுவது. இதுவே ஒரு எல்லைகளற்ற நீர் பரப்பில் நிகழுமானால், நீர்பரப்பின் மையத்திலிருந்து புறப்படும் அலைகளானது எந்த தடுப்பும் இல்லாது தொடர்ந்து எல்லைகளற்ற திசைகளில் ஓடுகிறது. அங்கு எந்த எண்ணமும் தோன்றுவதில்லை. உங்கள் மனதுக்கு நீங்கக் எந்த எல்லைகளையும் நிர்ணயம் செய்யாமல், மனதை எல்லையற்ற தன்மையில் வைத்திருந்தால், உங்கள் மனதும் எண்ணங்கள் அற்று நிர்மலமாக இருக்கும்.மனம் எல்லையுள்ளதாக இருக்குபோது எண்ணங்கள் தொடந்து தோன்றுகின்றன. மனம் எல்லைகளற்று இயங்கும்போது எண்ணங்கள் எதுவும் தோன்றுவதில்லை. அலையும் எதிரலையும் மோதிக்கொள்வது எண்ணம். எதிரலைகள் இல்லாது ஒரே அலைகளில் தோன்றுவது லயம். மனதை எல்லைகளற்று வைத்திருந்து கவனியுங்கள்.

Friday, March 12, 2010

5 : இறையும்-மாயாவும்.

இங்கு இருப்பது இரண்டு மட்டுமே! ஒன்று மாயா. மற்றது இறைநிலையறிவு.

மாயா எல்லா மாற்றங்களையும் உடையது.

இறைநிலையறிவோ நிலையானது. எந்தவித மாற்றமும் அடையாதது.

இறைநிலையோ இருப்பு உணர்வாகவும், சாட்சி தன்மையாகவும் நமக்கு விளங்க கூடியது.

வளமை, வறுமை- சுகம், வலி-இதுபோன்ற விஷயங்களை மாயா

தனது கட்டுப்பாட்டில், அதிகாரத்தில், ஆட்சியில் வைத்து இருக்கிறது.

(உங்களுக்கு பணம் வேண்டும், அதிகாரம் வேண்டும் இன்னும் இதுபோன்ற
தேவைகளுக்கு நீங்கள் மாயாவிடம் தான் போய் கேட்க வேண்டும்.
அதை உங்களுக்கு தருவதும், அல்லது அதை உங்களிடமிருந்து பறித்து கொள்வதும்
மாயாவின் ஆட்சிக்கு உட்பட்டு இருக்கிறது. சர்வ நிச்சயமாக இந்த அதிகாரம்
இறையறிவிடம் இல்லை.இதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும்.)

அந்த இறைநிலை அறிவிடம் நிம்மதி, பூர்ணதன்மை, உயிர்ப்பு மட்டுமே உள்ளது.

இறையிடம் போனால் இதுமட்டுமே கிடைக்கும்.

ஆனால், அந்த மாயா இறையறிவுக்கு கட்டுப்பட்டே இயங்குகிறது.

Friday, February 26, 2010

4 : மையம்.

நமக்கு ,
நம் உடலுக்கு ஒரு மைய விசை உள்ளது.
நாம் நடக்கும் போது,
ஓடும்போது,
விளையாடும்போது,
நீந்தும்போது,
ஹைஜம்ப் தாண்டும்போது இதை நாம் நன்கு உணர முடியும்.
நாம் சைக்கிள் ஓட்டும்போது ,
அந்த சைக்கிளின் மைய விசையும், நமது மைய விசையையும்
ஒரே மைய விசையாக்கி,நாம் அவ்வண்டியை ஓட்டுகிறோம்.
நமது மைய விசை , இந்த பூமியின் மைய விசையை சார்ந்து ,
நாம் இயக்குகிறவரையில் நமக்கு எந்த விபத்தும் ஏற்ப்படாமல் நம்மை நாம்பாதுகாத்துக்கொள்ளமுடியும்.
இப்படி ,
எனக்கு ஒரு மைய விசை,
உங்களுக்கு ஒரு மைய விசை,
அவரவர் உடலை மையப்படுத்தி அமைகிறது.
இந்த மையவிசை இந்த பூமியின் மைய விசையை சார்ந்து இயங்குகிறது.
நமது பூமியின் மையவிசை,
அதன் குடும்பமான சூரிய குடும்பத்தில், சூரியனை மையப்படுத்தி உள்ளது.
நமது சூரியனோ அதன் பால்வீதி குடும்பத்தை, அதன் மையத்தைசார்ந்து உள்ளது.
நமது பால்வீதி மண்டலமோ,
இதைப்போன்ற கோடிக்கணக்கான மண்டலங்களை உள்ளடக்கிய,
ஒரு தொகுப்பின் மையத்தை சார்ந்து உள்ளது.
இதுபோன்ற, அண்டதொகுதிகள் கோடிக்கணக்கில் உள்ளது.
நமது அண்ட தொகுதி, இந்த கூட்டு தொகுதிகளின் மையத்தை சார்ந்து இயங்குகிறது.
இந்த கூட்டு தொகுதியோ,
நமது பிரபஞ்சத்தின் மைய விசையை சார்ந்து இயங்குகிறது.
சுருங்கி விரிவடையும் நம் பிரபஞ்சமோ,
நிலையான ஒரு இருப்பின் மையத்தை சார்ந்துதொடர்ந்து இயங்கி வருகிறது.
இதுவரை சொன்ன
நான், நீங்கள், சைக்கிள், பூமி, சூரியன், பால்வீதி மண்டலம், மண்டலங்களின் தொகுதி, மண்டல கூட்டுத்தொகுதி, இப்பிரபஞ்சம் யாவும் திடபொருட்களால் ஆனது.
அந்த தூய இருப்பு நிலையோ உருவமற்றது.
அது எப்போதும் மாற்றமடைவது கிடையாது.
அது நிலையானது.
அந்த நிலையான ஒன்றை சார்ந்துதான் இத்தனை நிலையற்றவைகளும் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

Tuesday, February 2, 2010

3 : அகம் - புறம் - சமம்

நமது நோக்கம் மூன்று வழிகளில் செயல்பட முடியும்.

அக நோக்கமாகவும்,

புற நோக்கமாகவும்,

மற்றும் சம நோக்கமாகவும்.

நாம் புறநோக்காகவே இந்த வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளோம்.

நம்மில் மட்டும் என்றில்லை -

இந்த பிரபஞ்சத்துக்கும்,

அக நோக்கு, புற நோக்கு, சம நோக்கு என மூன்று நோக்கு உள்ளது.

நாம் வாழும் இந்த பிரபஞ்சம் முழுவதும் அணுக்களால் ஆனது.

அனைத்து பொருட்களுக்கும் அததற்குண்டான அணு கட்டமைப்பு உண்டு.

அணுவின் அடிப்படை,

மூன்று வித 'மின்' செயலாக உள்ளது.

1.நிலை மின் (neutron),

2. நேர் மின் (proton),

3.எதிர் மின்(electron).

நமது மன ‘எண்ணமும்’

மின்னோட்டத்தின் அடிப்படையிலேயே அமைகிறது.

நமது (அக, புற, சம ) நோக்கை, எண்ணத்தின் வாயிலாகவே மடை மாற்ற முடியும்.

Saturday, January 30, 2010

2 : நிலமும் விதையும்

ஈர நிலத்தில் விழும் விதை
 எப்படி
 தவறாமல் முளைத்து, விளைந்து, பலனை தருகிறதோ,

அதே மாதிரி

 உங்கள் மனதில் விழும் எண்ணங்களும்
 விளைந்து விருத்தியாகும்.

இப்போது உள்ள நீங்கள்,

 ஏற்கனவே
 உங்கள் எண்ணமெனும் விதையால் முளைத்து,
 விளைந்து,விருத்தியாகி நிற்கும்
'சதைக்கோளம்' தான்.

Wednesday, January 27, 2010

1 : நமது மூலம்.


சகோதர, சகோதரிகளே வணக்கம்.

இந்த வாழ்க்கைக்கு 'விளக்கம்' என்ன?

இந்த வாழ்க்கையை வாழ்வது யார்?

நாம்தான் வாழ்கிறோம்.

சரி!

நாம் யார்? நமது மூலம் என்ன?

நாம், நம் தாய், தந்தை வழியே -இணையப்பெற்று வந்துள்ளோம்.

சரி!

தாய்,தந்தையரின் மூலம் என்ன?

நம் தாய் உருவாக இரண்டு பேர் காரணம். அவளது தாய் மற்றும் தந்தை.
நம் தந்தை உருவாக இரண்டு பேர் காரணம். அவனது தாய் மற்றும் தந்தை.

ஆக! நான்கு பேர்.

அந்த நான்கு பேர் உருவாக, அந்த நான்கு பேரின் தாய் தந்தையென எட்டு பேர்.

இப்படி,

2 – 4 – 8 – 16 – 32 – 64 – 128 – 256 – 512 - 1024 .

(இந்த ‘1024’ என்பது நம்ம CD மெமரி மாதிரி தெரிகிறதல்லவா? 1024 பைட்ஸ்( BITS)- ஒரு கிலோ பைட்ஸ்( K B) – 1024 கிலோ பைட்ஸ் - ஒரு மெகா பைட்ஸ் ( MB)-1024 மெகா பைட்ஸ் - ஒரு ஜிகா பைட்ஸ்( GB) இந்த 1024 என்பது ஒரு'தனி'முழு சுழற்சி போல தோன்றுகிறது. )

இந்த பெருகி விரியும் முன்னோர் சந்ததி இப்படி இரு வேறு புறத்திலும் விரிவடைகிறது.

ஆக! நாம் என்னவோ முப்பாட்டன், பாட்டன், அப்பன், பிறகு நான், எனக்கு அடுத்தது என் மகன்என, இந்த மரபுஒரே வழியாக , நேரிடையாக வரும் மரபு என நினைத்துக்கொண்டிருக்கிறோம். அது தவறு.

அது நேரிடையான மரபு இல்லை.

உன் முன்னோர்கள் என சொன்னால் அது ‘ஒரு நதி’யின் நீரோட்டமல்ல!

அந்த நதி தாய், தந்தை என இரண்டு கிளை பிரிகிறது. இன்னும் கொஞ்சம் முன்னே பார்த்தால், அந்த இரண்டுக்கும் நான்கு கிளைகள் இப்படி 1024 கிளைகள் வரையும் போகிறது .

இரு வேறு விரிவு அடுக்குகளிலிருந்து வரும் 'உயிர் பண்புக்கூறு நிழல் விசைகள்' ஒன்றை ஒன்று
சந்திக்குமிடத்து - பதிவாகி உருவாகும் உயிர் 'நாம்'.

நமது மூலம்
ஒரு வழிப்பாதை அல்ல!
இரு 'வேறு' வழிப்பாதை!.

நம் இடப்புற பாதையிலும் , வலப்புற பாதையிலும்
இருவேறு உலகங்கள் அகண்டு ,விரிந்து, பரவுகிறது.