Thursday, July 29, 2010

48 : நியதி

இப்பிரபஞ்சம் காரண, காரியங்களால் இயங்குவது. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் உண்டு. இதுவே இதன் நியதி. நமது மனமும் இப்படியே. இதுவும் காரண, காரியங்களால் இயங்குவது. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் உண்டு. இதுவே இதன் நியதி. இவ்விரண்டுக்குமே நியதி ஒன்றுதான். இப்பிரபஞ்சத்தின் மூல ஆதார நிலையும்,இம்மனத்தின் மூல ஆதார நிலையும் ஒன்றுதான். அங்கு காரண, காரியங்களுக்கு இடமில்லை. அது கூறுபடாத ஓர்மை.

Tuesday, July 27, 2010

47 :தெய்வம் - அதன் சொரூபம்.

நம் செயல்களுக்கு காரணம் வினைப்பயனும் இப்போது செய்யும் முயற்சியுமே. இவ்விரண்டைத்தவிர எந்த காரியத்திற்கும் அனுகூலமாகவோ, பிரதியனுகூலமாகவோ இருப்பதற்கு வேறொரு காரணமுமில்லை. நடக்க வேண்டிய காரியங்கள் இவ்விரண்டின் பலத்தை தழுவியே நடந்து தீரவேண்டும். எதற்கு தீவிரம் அதிகமோ அது ஜெயமடைகிறது. ஆனால் வினைப்பயன்
நம் நோக்கத்திற்கு எட்டாதது. அதை நாம் எவ்விதமும் மாற்ற முடியாது. வினைப்பயன் அளவில்பட்டது, வளராது. முயற்சியோ நம்முடைய வசம். இம்முயற்சியை யுக்தி புத்தி, விடாமுயற்சிகளோடு செய்து வந்தால் , வினைப்பயனை நசிப்பித்துக் காரியங்களில் ஜெயம் அடையலாம் . பெரும்பாலும் ஜனங்கள் தங்களுக்கு விளைவதெல்லாம் தெய்வசெயலாக கருதி செய்ய வேண்டியவைகளை , செய்யாமல் மதி கெட்டு இருக்கிறார்கள். அதாவது வினைப்பயன்களே தெய்வசெயலாக கூறப்படுகின்றன. ஆனால் இவ்வினைப்பயன்களோ, நம்முடைய பூர்வ பிரயத்தனங்கள். ஆகையால் நமது தேகம் ஒரு பூர்வ -பிரத்யட்ஷ வினைகளின் போர்க்களமாயிருந்து அப்போரின் முடிவே நமது வாழ்வாக ஏற்ப்படுகின்றது.

தெய்வம் - அதன் சொரூபம்.

நமக்கு வேண்டியவைகளை தேடிக்கொள்ள நம் பிரயத்தனத்தால் முடியுமேதவிர வேறோன்றினாலும் முடியாது. தீவிர முயற்சியே தெய்வம். இதையே ஒவ்வொருவரும் ஆசிரயிக்க வேண்டும். நமது முயற்சியில்லாமல் ஒரு காரியமும் சித்தி பெறாது. நம் புத்திக்கு புலப்படாமல் தெய்வம் எங்கிருந்தோ நம் செயல்களுக்கு பலனை அளிப்பதாக எண்ணுவது மூடத்தனம். இதைவிட அக்ஞானம் வேறில்லை. நம்மால் செய்யப்படும் காரியங்களெல்லாம் நம் இந்திரியங்களால் செய்யப்பட வேண்டும். இந்திரியங்கள் மனத்தால் ஏவப்படுகின்றன. மனது புத்தியின் அசைவு. நாம் அனுபவிப்பதெல்லாம் கிரியைகளின் பலனே. ஆகையால் புத்தியின் அசைவுதான் பலன் ரூபமாக அனுபவிக்கப்படுகின்றது. நியதி இப்படி இருக்க , தேயவத்தால் நடைபெற வேண்டியது என்ன? மனித பிரயத்தனங்கள் இல்லாமல், எப்பொழுது அவர்கள் (மனிதர்கள் ) காரியங்கள் யாதும் முடிவதில்லையோ , அப்பொழுது தெய்வாதீனம் என்னும் கொள்கையால் என்ன பயன்? குறிப்பு:- யோக வாசிஷ்டம் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

Saturday, July 24, 2010

46: யோக வாசிஷ்டம் தமிழ் நூலின் முகவுரை.

மனது எனும் சொரூபத்தையுடையவனே மனிதன். இம்மனதானது அறிவின் வேறுபாடு.ஆகையால், தன் சுய நிலையாகிய அறிவை அறிந்துகொள்வதே மனித உருவமாக இயங்கினதன் நோக்கம், இதுதான் மனித ஜென்மத்தின் குறியும் பலனும்.
ஜன்ம சாபல்யம் இப்படி இருக்க, அறிவுதான் அனைவராலும் அறியப்படாமல் இருக்கிறது. லட்சக்கணக்கான வருடங்கள் மானிட உருவத்தில் கழிந்தும் , இந்த 'அறிவு' எனும் சொரூபத்தை அறிந்து அதை அடையும் முறைகளைப்பற்றி உரைத்தவரோ, எழுதினவரோ இதுவரையில் எத்தேசத்திலும் தென்படவில்லை. அதாவது வசிஷ்டர் ஒருவரைத்தவிர. இதர உலக வியவகாரங்களைப்பற்றியும் , மானிட வாழ்க்கையைப்பற்றியும் , அதை சீர்திருத்திக்கொள்ளும் முறைகள், இன்னும் அநேகவித சித்தாந்தங்கள் பற்றியும் எல்லாம் , அநேக மகான்களிடமிருந்து கேட்டோ, படித்தோ இருக்கிறோம். ஆனால் பிரபஞ்சத்திற்கு சாரமாயுள்ள அறிவைப்பற்றி நாம் அறியோம். வசிஷ்டர் ஒருவரே இதைப்பற்றிப்பூர்ணமாக எடுத்துரைத்தவர்.
அதாவது வால்மீகி மகரிஷியால் கேட்டு எழுதப்பட்ட காவியமாகிய " யோக வாசிஷ்டம் " அல்லது "மகாராமாயணம்" என்பதே இங்கு குறிப்பிடப்படுவது. இந்நூலை தரவிறக்கிக்கொள்ள இங்கே அணுகவும்.......... http://www.scribd.com/doc/11815811/YOGA-VASISTAM-TAMIL-BOOK?secret_password=&autodown=pdf

Friday, July 23, 2010

45:சத்,சித், ஆனந்தம்.

சத்,சித், ஆனந்தம். என்பன மூன்று பதங்கள். சத்தின் விளக்கம் ( நான் இருக்கிறேன் என்ற உணர்ச்சி ) எல்லோருக்கும் உண்டு .சித் விவேகிக்கு விளங்கும். ஆனந்தம் பூர்ண போதமுடையவனுக்குதான் விளங்கும். இம்மூன்றையும் உடையவனுக்கு அமிர்தமயமான ,அத்தியந்த , துக்க நிவர்த்தி என்று இதற்கு ஒரு மகான் பொருள் கூறினார்.
1,சத், என்பது நமது இருப்புணர்வு. மற்றும் அது மனவிவகாரமும் கூட. உலக மாந்தர் அனைவருமே இதை கையிலெடுத்துக்கொண்டு அலைகின்றனர். இதுவே கதி இதை விட்டால் வேறு மார்க்கம் கிடையாது என நினைக்கின்றனர். இதிலிருக்கும் உணர்ச்சியே வாழ்வு என கருதுகின்றனர். இதை தாண்டி அவர்கள் பார்ப்பதே கிடையாது. இதனால் ஏற்பட்டதே இந்த சமூகம். உங்கள் சமூக வாழ்க்கை.
2,சித், என்பது-தியானத்தின்போது-நமக்குள் இருக்கும் எழுபது லட்சம் கோடி ஜீன்களின் விழிப்பு. உங்கள் உடலின் அனைத்து பாகங்களிலிருந்தும், அனைத்து இடங்களிலிருந்தும் எல்லா ஜீன்கள் விழிக்கின்றன. உடலின் முழு பாகமும் விழித்தவுடன் , மனம் உங்களை விட்டு விலகி விட்டதை அறிவீர்கள். 'சித்'தில் நீங்கள் முழு ஈடுபாட்டுடன் இருக்கும்பொழுது மனதை நீங்கள் தேடினாலும் கிடைக்காது, எழுபது லட்சம் கோடி ஜீன்களின் விழிப்பு ( ஒளி ) ஆரவாரத்தில், நிழலான மனம் கரைந்துபோயிருப்பதை காண்பீர்கள். சித் என்பது எழுபது லட்சம் கோடி ஜீன்களின் விழிப்பு.
3,ஆனந்தம் என்பது எழுபது லட்சம் கோடி ஜீன்களின் அடிப்படை உயிர் ஆதாரம் ஒன்றாக இணைவது. அது ஆனந்த தாண்டவம். இது மொழிகளின் அர்த்தங்களைஎல்லாம் தாண்டிய மாபெரும் அனுபவம்.

Thursday, July 22, 2010

44:நமது பாதுகாப்புணர்வு.

நாம் காரண , காரிய பிரபஞ்சத்தில் வாழ்கிறோம். ஒரு சிறு துரும்பு கூட காரணமின்றி அசைவதில்லை. அனைத்து நடப்புக்குமே அடிப்படையில் காரணம் இருக்கிறது. இங்கு பூமியில் நீங்கள் விரலை சொடுக்கினால் கூட அதன் பாதிப்பு சூரியனில் நிகழ்கிறது என்கிறது அறிவியல். ஒவ்வொரு 'இம்மி'யளவு அசைவுமே காரணத்துடனே நடக்கிறது. ஏதோ தன்னிச்சையான பிரபஞ்சமாக இருக்க முடியுமா இது? இந்த பிரபஞ்சத்துக்குள் உங்கள் வருகையும் இப்படியே. உங்களுக்குள் உங்கள் மனதின் வருகையும் இப்படியே. இந்த மனதுக்கு காரணம் என பின்னோக்கிப்பார்த்தால் ஒருசெல்( முதல் ) உயிரிலிருந்து , ஏன்? இந்த பூமியில் முதன்முதலில் உயிர் துவங்கிய பொழுதே உங்கள் துவக்கமும், உங்கள் மனதின் துவக்கமும் சூல் கொண்டுவிட்டது. இன்று இருக்கும் உங்கள் மனதின் தகவமைப்பு , பல பிறவிகளாக பரிணாமமடைந்து,பரிணாமமடைந்து வந்திருக்கிறது. அது ஒரு செல் உயிரிலிருந்து இன்று எழுபது லட்சம் கோடி உயிரிகளாக ( உயிரிகளின் தொகுப்பாக) பரிணாமமடைந்து வளர்ந்திருக்கிறது.
இவ்வளவு பிறவிகளில் அது ( மனம்) கண்ட அனுபவம் தனித்து நின்று உயிர் வாழ முடியாது என்பதே. ஒரு குழுவாக இருந்தே தொடர்ந்து உயிர் காத்தல் அவசியம் என்பது அதன் அனுபவ சாரம். இதன் காரணமாகவே , ஒரு செல்லில் துவங்கிய 'உன்' துவக்கம் பல செல் உயிராக பல்கி பெருகி குழு, குழுவாக தொகுப்பு, தொகுப்பாக பரிணாமமடைந்து தொடந்து வந்திருக்கிறது.
அதனால்தான் மனிதன் தன்னை காத்துக்கொள்ள , குடும்பம், ஜாதி, இனம், மொழி, கட்சி, தேசியம் என குழுவாக சேர்த்துக்கொள்கிறான். அந்த குழுவில் தலைவனாகி விட்டால் தனக்கு உச்ச பட்ச பாதுகாப்பு கிடைக்குமென நினைக்கிறான். இந்த பாதுகாப்பு மனோபாவத்தால்தான் இவன் அடுத்தவனை அடக்கி ஆள துடிக்கறான். இந்த அடக்கி ஆளும் மனோபாவமே சமூகத்தில் இன்று மலிந்து கிடக்கிறது.
மனிதன் குழு மனப்பான்மையிலேயே வளர்கிறான்,
இதன் விளைவே உலகை பலமுறை( அனைத்துயிரையும் ) அழிக்கவல்ல அணு ஆயுதங்கள். பல நாடுகளில் அங்கங்கே தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

43: மனிதகுலத்தின் அடிப்படை உண்மை : கௌதம புத்தர்

உடலை உண்டாக்கும் பஞ்ச பூதங்களை கலைத்தால்தான் பிறவி அறும். இல்லையேல் பிறவி தொடர்ந்து வந்து துக்கத்தை அளித்துக்கொண்டே இருக்கும். பஞ்ச பூதங்களை சேர்த்து வைக்கும் சக்தி, மனிதன் 'தனித்து' வாழ வேண்டும் என்று விரும்பும் ஆசையே. ஆகவே ஆசையை அழித்து விட்டால் பஞ்சபூதங்கள் கலைந்துவிடும். மறுபிறவி ஏற்படாது .
நன்றி:- தினமணி, ஆன்மீக சிந்தனை,22-07-2010

Wednesday, July 14, 2010

42 : அனுபவத்தாலறிவது.

நாம் அடிப்படையில் மூன்று வித தன்மையில் இருக்கிறோம்.1, ஜடம், 2, அறிவு, 3, இரண்டும் கலந்த ( உடல், உயிர்).அறிவும் ஜடமும் இணைந்து உணர்வாகிறது. நாம் பெரும்பாலும் இந்த இரண்டும் கலந்த உயிர் தன்மையிலேயே 'உணர்ந்து' வாழ்ந்து வருகிறோம்.நம்மிடம்அறிவானது இந்த உயிர் தன்மையின் உணர்வு சார்ந்தே இது நாளும் செயல்பட்டு வருகிறது. இவ்வுணர்வையொட்டியே 'மனம்' எழுகிறது. அந்த மனமே வழிகாட்டியாகிறது. மனதின் கட்டமைப்பை உருவாக்கியதும், பராமரிப்பதும் உணர்வுதான். அறிவு இதனூடாக செயல்படுகிறது. அறிவு தனி நிலையது.
ஜடம் இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் மாதிரி தன்மூல சமநிலை நோக்கி 'கலைகிறது'.அறிவோ இந்த உயிரை செயல்படுத்தி தனது மூல சுத்த சுயத்தை அறிய தவிக்கிறது. இதனாலேயே பருவம் மற்றும் மூப்பு வருகிறது. இந்த தனி நிலையறிவை கவனித்தால் உரையிலிருந்து உருவிய வாளைப்போல ( உடலை, உயிரையும் விட்டு தனித்தும் காணப்படுகிறது ).
அப்போது உயிர் தனித்து வெறும் அறிவற்ற உணர்வு செயலாக மட்டும் இருக்கிறது. இந்த உணர்வு செயலில் எந்த எண்ணமும் கலப்பில்லை. காலில் தைத்த முள்ளை வெளியில் எடுத்தது போல தினவு நீங்கி சுகதன்மையை உணர்கிறது உயிர்.

Tuesday, July 13, 2010

41 :தன்னுணர்வு தகவமைப்பு ( அக உறுதி )

காலையில் தியானம் செய்கையில் புருவ மத்தியில் ஒளி துலங்குகிறது. அக்கணம் உடலும் உணர்வும் ஒரே ஏக உணர்வாக இருக்கிறது. எங்கும் ஒளி, ஒளி மட்டுமே! அவ்வொளி உணர்வை தன்னுணர்வு தகவமைப்பாக உறுதி செய்தல் வேண்டும். இவ்வளவு காலம் இந்த உணர்வு நமக்கு பரிச்சயமில்லாது இருந்தது. இப்போது பரிச்சயப்பட்டிருக்கிறது.இத்தன்னுணர்வு தகவமைப்பை நாம் பழக்கப்படுத்திக்கொள்ளும் வண்ணம் மதியம் , மாலை நேரங்களில் அத்தன்னுனர்வு தகவமைப்பை ஞாபகப்படுத்தி பழகி வரல் வேண்டும். இத்தன்னுணர்வு தகவமைப்பு நமக்கு பழக்கப்பட வேண்டும்.இவ்வாறு அக உறுதி செய்து கொள்ளல் வேண்டும்.

Friday, July 9, 2010

40:சும்மா இருப்பது.

மனித குரோமோசோம் ஒன்றை மட்டும் பிரித்து அதன் D N A - வை நீட்டி விரித்தால் அது 5 சென்டி மீட்டர் நீளமிருக்கும். 46 குரோமோசோம்களையும்( நமது உடலிலுள்ள ஒரு ஜீனுக்குள் உள்ள கருவில் உள்ள மூலப்பொருள்) சேர்த்து பிரித்து இணைத்தால் 2 மீட்டர் நீளமிருக்கும்.( ஒரு ஜீனுக்குள் இருக்கும் 'கரு'வான மூலப்பொருள் D N A - வின் நீளம் 2 மீட்டர் ) மனித உடலிலுள்ள எல்லா செல்களிளிருந்தும் D N A - வையும் பிரித்து நீட்டினால் இங்கிருந்து சூரியனுக்கு 500 முறை போய் வரலாம். இயற்கை எத்தனை அற்புதமாக சிக்கனமாக அடுக்கி வைத்திருக்கிறது பாருங்கள் . அப்போ உங்கள் உடலில் உள்ள ஜீன்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு ஜீனுமே தனித்தனி உயிரிதான். அவைகளுக்கு தனி உயிரும் தனி பண்பும், தனி எண்ணமும் உண்டு.

தினம் நீங்கள் காலையில் யோகா, தியானம் துவங்கும்பொழுது நீங்கள் பத்மாசனத்தில் அமரும்பொழுது , உங்களைப்போலவே உங்களுள் இருக்கும் கோடானு கோடி உயிரிகளையும் ஒரு ஒழுங்குக்கு கொண்டு வந்து அவைகளுக்கு பயிற்சி கொடுக்கும் விதமாக உங்கள் பயிற்சியை செய்து வாருங்கள்.
நீங்கள் அமர்ந்திருக்கிற மாதிரியே அவைகளையும் அமர சொல்லுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் அவைகளும் பின் பற்றி செய்யச்சொல்லுங்கள். நீங்கள் தினமும் தியானப்பயிற்சி செய்வது உங்களுக்காக அல்ல! உங்களுள் இருக்கும் உங்களின் கோடானு கோடி உயிரிகளையும் ஒரு ஒழுங்குக்கு கொண்டுவருவதற்காகவே.
இதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். அவைகள் தனித்தனி எண்ணம் கொண்டவையாக இருக்கின்றன . அவைகளை ஒரே வித தன்மைக்கு நீங்கள் எடுத்து வர வேண்டியுள்ளது. ( இதற்காகவே யோகா, தியானம் ) அவைகள் வெவ்வேறு எண்ணம் கொண்டவைகளாக இருப்பதால்தான் உங்களுக்கு அவ்வப்போது பல்வேறு எண்ணங்கள் தோன்றியவண்ணம் உள்ளது.
அவைகள் அனைத்தையுமே ஒரே நோக்கத்துக்கு திருப்ப வேண்டியுள்ளது. அவைகள் அனைத்துக்கும் பொதுவான ஒரு விஷயம் 'சும்மா' இருத்தலே!.நாமாக ஒரே 'எண்ணத்துக்குள்' கொண்டுவர முயற்சித்தால் சிறிது நேரத்தில் அவையவைகளும் தன போக்கிற்கு தனித்தனியாக எண்ண துவங்கிவிடுகிறது. ( அவைகளின் சுபாவம் அது. ஏனெனில் அவைகள் நீண்ட காலமாக அவைகள் அப்படிதான் - தனியாக - யோசித்து வந்திருக்கிறது.)
இப்போது நீங்கள் ஒரு ராணுவ அதிகாரியைப்போல நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அவையனைத்தையும் ஒரே குணமுள்ளதாக மாற்ற வேண்டியுள்ளது. அவைகளுக்கு இரண்டு தான் பழக்கமாக உள்ளது. ஒன்று ஏதாவது யோசிப்பது. மற்றொன்று முடிந்தவரை சும்மா இருப்பது. அவகளுக்கு பழக்கமான ஒன்றான சும்மா இருப்பதையே அவை அனைத்தையும் ஒரே நடை முறைக்கு கொண்டுவர நாம் உபயோகிக்க வேண்டியுள்ளது.
நீங்கள் அவைகளுக்கு பயிற்சியளிக்குபொழுது ஒரே லயமாகாமல் - உங்களுக்கு இடை இடையே ஏதாவது எண்ணம் தோன்றினால், சில ஜீன்கள் இன்னும் உங்கள் கட்டுப்பாட்டுக்கு வரவில்லை என அர்த்தம். அவ்வளவே.
அப்படியில்லாமல் ஒரே லயமானால் - அனைத்துயிரும் சும்மா இருந்தால் - அப்போது நீங்கள் ( உங்கள் மனம் ) காணாது போயிருக்கும். ஏனெனில் அவையனைத்தும் ஒரே லயமாகி அறிய துவங்கிவிடும்.அங்கு ஒரு பூரணம் திகழும். முரண்பட்ட வேறுபாடுகள், பேதங்கள் விலகும்.

Thursday, July 8, 2010

39: மனம் அறிவின் வாகனம்.

அறிவு, 'மனம்' எனும் வாகனத்தில் ஆரோகணிக்கிறது.அந்த மனமோ சதா அலைபாய்கிறது. ( அதன் அமைப்பு அப்படி ) அறிவும் அதன் கூடவே அலைய வேண்டியிருக்கிறது. ( அறிவு ஜடதுக்குள் பிரவேசித்ததின் விளைவு! ) நமது தியானத்தில் அந்த வாகனத்துக்கு ஓய்வு கொடுத்து கட்டிப்போட்டுவிட்டு, அறிவானது தனித்து நிற்கும்போது, தனித்து 'சும்மா இருக்கும்'போது அது தன்னில் லயிக்கிறது. அந்த லயிப்பில், லயத்தில் அறிவு தன்னையே அறிகிறது.
அந்த அகண்டாகார பேரறிவுக்கு 'தான்' ஜடப் பொருளுக்குள் புகுந்ததின் நோக்கம், தனக்கு தெரிய வருகிறது. இது அவரவர் அவரவரின் தியான பொழுதுகளில் அறிந்துகொள்ளவேண்டியதாக இருக்கிறது. அந்த அகண்டாகார பேரறிவு தன்னையறிய பொருளில் நுழைந்து , உயிராகி, புல்லாகி, பூண்டாகி, செடி கொடியாகி, விருட்சமாகி ,ஊர்வன, நகர்வன, பறப்பன, என பல்வேறு நிலைகளில் பரிணாமப்பட்டு மனிதராய் முதிர்வடைந்து நான் யார்? எனும் கேள்வி துவங்கி, இதை அறிவது அறிவே என்றறிந்து , இந்த அறிவு யாது? என்றாய்ந்து, தியானத்தில் தன்னில் மூழ்கி தன்னையறிகிறது. அந்த அகண்டாகார பேரறிவின் தேடலே இந்த 'பிரபஞ்ச ரகசியம்'.

Tuesday, July 6, 2010

38: இயல்பு சமநிலை.

இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்து பொருட்களுமே சமநிலையுறவே தவிக்கிறது. அதுவே இப்பிரபஞ்ச பொதுவியல்பாகவும் இருக்கிறது.இச்சமனிலையை அடைவதே ஒவ்வொரு பொருளின் முடிவானநோக்கு. ஏனெனில் அது அங்கிருந்தே துவங்கியுள்ளது இந்த பயணத்தை. அதுவே அதன் மூல இருப்பு. சமநிலையான அவ்வியல்பை நோக்கி 'கலை'வதே அப்பொருளின் மூல நிலைக்கு ஆனந்தமாகவும், இயல்பாகவும், இன்பமாகவும் உள்ளது.
இப்பிரபஞ்சமே ஆனந்தமாகவும், இயல்பாகவும், இன்பமாகவுமே இருக்கிறது. பொருள் நிலை என்பது எல்லைக்குட்பட்ட 'தனி'த்தன்மை வாய்ந்தது. சமநிலை என்பது எல்லையில்லா தன்மையது. ஒவ்வொரு பொருளுக்கும் தன் மூல இருப்பை நோக்கி கலைந்து நகர்தலே ஆனந்தமானது.
இக்காரணத்தினாலேயே நாம் உருவாக்கி வைத்த பழங்கால கட்டிடங்கள், பழங்கால கோவில்கள் எல்லாம் சிதைந்து வருகிறது. ( இதுவே பொருட்கள் தன் மூல இருப்பு நிலையை நோக்கி கலைந்து நகர்தல் என்பது ) பொருள் என்கிற நிலை கலைந்து தன் மூல நிலைக்கு திரும்புதல் எனலாம். ஆக ஒரு பொருள் தன் மூல நிலை நோக்கி திரும்புதல் இன்பமானது, ஆனந்தமானது.
நமது உடல்களிலுள்ள பல கோடி உயிரிகளுமே ஒவ்வொரு தனித்தனி பொருட்கள் தான். உயிர் அற்ற பொருளுக்கும், உயிர் உள்ள பொருளுக்கும் உள்ள வேறுபாடு என்னவெனில் உயிர் அற்ற பொருள், இயற்பியல், வேதியியல் விளைவுகளின் விதிப்படி அவை நடந்து கொள்கின்றன. தமக்கென்று எந்த இச்சையும் இல்லாது கிடக்கின்றன. எந்த தடையுமின்றி தன் மூலநிலையை நோக்கி ( தனது மூல இருப்பை நோக்கி ) இயல்பாகவே கலைந்து நகர்ந்து விடும்.
ஆனால் ஒரு உயிருள்ள பொருள் அப்படி தன் மூல நிலையை நோக்கி, திரும்ப நகர்ந்து விடுவதில்லை. அப்படி அப்பொருள் தனது மூல நிலையை நோக்கி நகர்தலை தடுத்து நிறுத்தும் செயலுக்கே உயிர் எனப் 'பொருள்'படும் . ஒரு பொருள் தன் மூல நிலையை நோக்கி நகர்வதே தீவிர முடிவாக இருக்கும், அதுவே அதன் இயல்பும் கூட.
நமது உடலிலுள்ள பலகோடி உயிர் பொருட்களும் இதற்கு விதி விலக்கல்ல! - அப்படி தன் மூல நிலைக்கு அப்பொருள் நகர்வதை தடுக்கும் உயிர் அப்பொருளை மேலும் ஓர் உயர்நிலை பரிமாணத்திற்கு இட்டு செல்கிறது. அந்த பொருளில் உயிர் என செயல்படுவதே அறிவுதான்.நாம் உயிர் என்று சொல்வது அறிவைத்தான்.அந்த அறிவு பல காலம் பரிணாமமடைந்து இப்போது மனித உயிரியாக பரிமாணப்பட்டிருக்கிறது.- அறிவு தன்னை அறியும் தேற்றமே பரிணாம முதிர்வு.
அந்த அறிவின் உச்சநிலையே இதுதான். இனி இந்த மனித உயிரிகளுக்கு( செல்களுக்கு ) சுதந்திரம் வழங்க வேண்டும். இந்த உயிரான 'அறிவு' தன் பொருளின் தன்மையான தன் மூல நிலையை நோக்கி, தன்மூல இருப்பை நோக்கி, நகர்தலை துவங்க வேண்டும். அல்லது பொருளின் இயல்புக்கு( அனுமதிக்க வேண்டும் ) ஆக அந்த மூல இருப்புக்குள் பிரவேசிக்க வேண்டும். இதுவே உயிரின் முடிவான நோக்கு.இதுவே ஜடப் பொருளுக்குள் அறிவு புகுந்ததின் நோக்கம்.

Sunday, July 4, 2010

37:யாவுயிரும் இன்பமுற!

இந்த சுந்தரம் ஒரு தனி உயிர் அல்ல. தனக்குள் இருக்கும் கோடிக்கணக்கான உயிரிகளின்( செல்களின் ) தொகுப்பு. சுந்தரம் தனக்குள் இருக்கும் இந்த கோடிக்கணக்கான உயிரிகளையும் மூடி காப்பாற்றும் ஒரு பாதுகாப்பு அமைப்பு. இந்த உள் உயிரிகளுக்கு உதவும் அனைத்து வித பொருட்களையும், இந்த உயிர்கள் ஏற்றுக்கொள்ளும். தீங்கு செய்யும் பொருட்களால் தான் மனிதனுக்கு வியாதி வருகிறது.( இந்த உயிரிகளே கண்ணாகவும், காதாகவும், மூக்காகவும், ரத்தமாகவும், எலும்பாகவும், தோலாகவும், இன்னபிற உறுப்புகளாகவும் இருக்கின்றன. அதன் ஒட்டுமொத்த பாதுகாப்பு உணர்வு தன்மையே இந்த உடல். மனம், அறிவு எல்லாம்.
நம்மோடு வாழும் மற்ற யாவுயிரையும் காப்பதே நம் கடமை. மனிதரைப்போலவே மரம் செடி கொடி, ஊர்வன, நகர்வன, பறப்பன, விலங்குகள் யாவுமே தனி உயிர் அல்ல. ஒவ்வொன்றுமே ஓர் உயிர்தொகுப்பு. தனக்குள் இருக்கும் உயிர் தொகுப்புகளை, எவ்விதம் இந்த மரம் செடி கொடி, ஊர்வன, நகர்வன, பறப்பன, விலங்குகள், மனிதர்கள் காப்பாற்றுகின்றனர் பாருங்கள், வேடிக்கைதான்.
இதுவே உயிர் பற்றிய அடிப்படை உண்மை. - தனக்கான இந்த உயிர் தொகுதியினை, மரம் செடி கொடி, ஊர்வன, நகர்வன, பறப்பன, விலங்குகள், மனிதர்கள்பெறும் விதமே, அவரவர் கர்மா. இந்த கர்மா மனிதருக்கு மட்டுமல்ல மரம் செடி கொடி, ஊர்வன, நகர்வன, பறப்பன, விலங்குகள் அனைத்துக்குமே உண்டு.
கர்மா என்பது ஒரு உயிர் தொகுதி உருவாகும் பொழுது, அது மரம் செடி கொடி, ஊர்வன, நகர்வன, பறப்பன, விலங்குகள், மனிதர்கள் எதுவாயினும் தனது மூலமான தன் தாய், தந்தையிடமிருந்து உயிரைப்பெறும்போழுதே இந்த பாதுகாப்பு உணர்வான் தன்மையையும் பெற்றுக்கொள்கின்றன. அதனதன் பெற்றோரும் அப்படியே!. இந்த பாதுகாப்பு உணர்வே கர்மா.
இது மனிதருக்கு அறிவால் தெளிவாகும்போது இந்த பாதுகாப்பு தன்மையைத்தான் இதுவரை 'நான்; என்றும் 'எனது' என்றும் கருதி வந்திருக்கிறேன் என்பதை அறிகின்றனர். ஆனால் அதி அற்புதமான உண்மை என்னவெனில் இந்த உயிரிகள் எல்லாம் எக்கணமும் இன்புற்றிருக்கவே வந்திருக்கின்றன.
உங்களுடைய 'நான்' எனும் தன்முனைப்பு எப்போதெல்லாம் கவனம் குறைகிறதோ அப்போதெல்லாம் இந்த உயிரிகள் குதூகலத்தில் இருந்திருக்கிறது. ( மனிதன் அதிக அளவுக்கு செக்ஸ் ஆசைப்படுவது இதனால் தான். அவன் செக்ஸ் ஈடுபாட்டில் இருக்குபொழுது அவனது தன்முனைப்பு தன்னை மறந்து கிடக்கிறது.}
அதன் ( செல்களின் ) தொடர்ந்த குதூகலத்தை தடுத்து வருவது உங்களுடைய 'நான்' எனும் தன்முனைப்பே! நீங்கள் சற்று நேரம் தியானத்தில் உங்களுடைய ' நானை' ( அதாவது உங்களுடைய 'நான்'என்பதான மனதின் செயல்பாட்டை ) நிறுத்தி வைத்ததால் அப்போது விளங்கும் உண்மை.
ஆகவே நண்பர்களே, சகோதரிகளே நீங்கள் காலையில் தியானம் செய்ய அமரும் பொழுது இவ்வுண்மையை கருத்தில் கொண்டு உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் யோகாவும், உங்கள் உடலில் மூளை முடுக்கிலுள்ள, பிராணனே சரியாக செல்லாத இருளில் கிடக்கிற உயிரிகளுக்கும் போய் சேருமளவுக்கு ஆழ்ந்த சுவாச பயிற்சியும் செய்து உங்கள் உள்ளிருக்கும் உயிரிகளுக்கு நன்மை செய்வீர்களாக! உங்களைப்போலவே வெளியில் உள்ள மற்ற உயிர் தொகுப்புகளுக்கும் நன்மை செய்வீராக!.

நன்றாக கவனியுங்கள் இந்த அடிப்படையிலேயே, ரமண மகரிஷியால் அவரது ஆசிரமத்தில் இருந்த பசு, மற்றும் சில உயிர்களுக்கு அவரால் மோட்சம் அளிக்கப்பட்டது.

Friday, July 2, 2010

36 : என் ஆவல் .

நமது தியானத்தில் தோன்றும் ஒளியை அகம் குளிர தரிசனம் செய்வதோடு மட்டுமன்றி, திடுமென அவ்வொளி பிரவாகத்திற்குள் குதித்து விடல் வேண்டும்.இப்போது நீங்கள் ஒளியில் கரைவதைக காணமுடியும். எந்த மிச்சமும் இல்லாமல் நீங்கள் கரைந்து , உங்கள் உடலிலுள்ள அனைத்து அணுக்களும் ஒளியாகி சுடர்வதை காணமுடியும். ஒரு இம்மிக்கூட குறைவில்லாது உங்கள் முழுமையும் ஒளியோடு இயைந்து விடும். உங்கள் உள் அமைப்பின் தகவமைப்பும், ஒளியின் உள்ளடக்கமாக மாறிவிடும். இப்போது ஒளியைதவிர எதுவுமேயில்லை. நீங்களும் (உங்கள் மனம் ) இல்லை. -மனம் என்பது ஒளியோடு இருள் விளையாடும் நிழல் விளையாட்டு . நிழலிருட்டு விளையாட்டு மட்டுமே மனம். நிழலும் இருட்டும் விளையாடுகிற நிழல்கள்தான் தான் இங்கிருக்கும் எல்லாமே!- ஒளியின் கதிக்கு உங்களை ஒப்படைத்து விட்டீர்கள். இப்படி ஒரு பத்து நிமிடம் நித்தம், நித்தம் ஒரு நாற்பத்தைந்து நாள் தொடந்து நீங்கள் ஒளியில் திளைத்தால், நீங்களும் இது மாதிரி ஒரு பிளாக் போட்டு, நீங்கள் அறிந்த உண்மை விளக்கத்தை அனைவருக்கும் சொல்வீர்கள். இப்படி அனைவரும் அறிந்துணர்ந்து சொல்லவேண்டும் என்பதும் என் ஆவல்.

Thursday, July 1, 2010

35 : ஒளி- காலம்- தியானம்.

1, இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருட்களும் , ஏன் அனைத்து அண்டங்களுமேக்கூட ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கிறது. ஒவ்வொரு அணுக்களுமே ஒன்றை ஒன்று சார்ந்தே செயல்படுகிறது. இந்த பிரபஞ்சத்தில் ஒரு தனித்த 'தனிமுதல்' உண்டு என்றால் அது ஒளியே ஆகும். ஒளி ஒரு சார்பற்ற தனி முதல். 2, காலம் : காலம் என்பது பொருட்களால் ஆன உலகுக்குதான் முப்பரிமாணமாக தோன்றுகிறது. அதுவும் கூட மனதின் தோற்றமே. எதிர்காலம், இறந்த காலம் என்ற ஒன்று கருத்து ரீதியானது தான். அப்படி இரண்டு காலங்கள் இல்லவே இல்லை. பொருள் மட்ட 'ஆதாரத்தள'த்தில் மட்டுமே இந்த கருத்துரு தோன்றுகிறது. ஒரு பொருள் சார்பியல் வேகத்தில் ( ஒளியின் வேகம் ) பயணிக்கும்போது , காலம் மட்டும் அல்லாமல் இடமும் தம் அளவுகளில் மாறுபடுகிறது. சரி ஒளியின் வேகத்திற்கே ஒரு விண்கலம் ஓடக்கூடியதாக இருந்தால் , அங்கு கடிகாரமும் ஓடாமல் காலமே ஸ்தம்பித்துவிடும். எவ்வளவு தான் நாம் சார்பியல் தத்துவத்தை புரிந்து கொண்டாலும், நம்மை அறியாமல் நம் ஆழ்மனதில் ஒரு சார்பற்ற தனிமுதல் காலம் ஒன்று இருக்க முடியும் என்ற எண்ணம் தோன்றுகிறது. உண்மையில் அப்படியொரு சார்பற்ற காலம் இல்லவே இல்லை.
இந்த பிரபஞ்சம் என்றோ ஒரு காலத்தில் தோன்றியதாக எண்ணுகிறோம். அக்காலத்திற்கு முன்பு இப்பிரபஞ்சம் என்னவாக இருந்தது? என்ற கேள்வி உடனே எழுகிறது. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் . காலமும் இடமும் இந்த பிரபஞ்சத்திற்குள் தான் இருக்கிறது .
ஆனால் பிரபஞ்சம் காலத்திற்குள் இல்லை.
அதேபோல பிரபஞ்சத்திற்கு வெளியே என்று ஒரு இடமும் இல்லை, பிரபஞ்சத்திற்கு முன்போ , அல்லது மறைவுக்கு பின்னாலோ காலமும் இல்லை. இடமும் இல்லை. பிரபஞ்சம் தோன்றிய பிறகே காலமும் இடமும் தோன்றியன.
இந்த பிரபஞ்சம் விரிந்துகொண்டிருக்கிறது என்று நினைக்கும்பொழுது எதில் விரிந்துகொண்டிருக்கிறது என்று கேள்வி எழுகிறது. பதில் பிரபஞ்சத்திற்கு வெளியே இடம் எதுவும் கிடையாது.
* குறிப்பு
1,ஒளி ஒரு சார்பற்ற தனி முதல்
2, ஒளி வேகத்தில் ஒரு பொருள் பயணித்தால் அந்த பொருளே மறைந்துவிடும்.
3, பிரபஞ்சத்திற்கு முன்போ , அல்லது மறைவுக்கு பின்னாலோ காலமும் இல்லை. இடமும் இல்லை.
4,நமது தியானத்தின் போது நாம் அந்த ஒளி நிலையில் லயிக்கும்பொழுது காலம் பற்றிய உணர்வு இருப்பதில்லை. ஏன்? ஒளி ஒரு சார்பற்ற தனி முதல்.இது பொருள் கடந்த நிலை,இதுவே காரணம்.
'காலம்' என்பது பொருட்களால் ஆன உலகுக்குதான். ஒரு உதாரணம். நமக்கு காலை, மதியம், மாலை, இரவு என நான்கு வேளைகள் உண்டு. நமக்கு அடுத்துள்ள ஒரு நட்சத்திர வாசிக்கு ( கற்பனைதான் ) இந்த வேளைகள் கிடையாது. அவர்களுக்கு ஒரே வேளைதான்.ஏனெனில் அங்கு எப்போதுமே ஒளி வீசிக்கொண்டுதான் இருக்கிறது. இதுபோலதான் காலத்தின் நிலையும்.
நன்றி: அணு, உயிர், அண்டம். கலைக்கதிர், கோவை.

அநுபூதி நிலையை அடைந்த ஒருவருக்கு எந்த கேள்வியும் மனதில் எழுவது கிடையாது. அவருக்கு மனமே செயல்படுவது கிடையாது. அவர் அனைத்து கேள்விகளையும் கடந்து விட்டவர். அவர் நிறைவானவர், பூர்த்தியானவர்.அங்கு அவரே கிடையாது. அது எந்த சலனமும் அற்ற வெளி. அங்கு எதுவும் சூல் கொள்வதில்லை. தனது தேக உணர்வையே கடந்து வாழ்ந்தவர்களையும் கேள்விப்பட்டு இருக்கிறோம். மனம் நிலவுகிற இடத்தில தான் சந்தேகங்களும்,கேள்விகளும்.

கவனிக்கவும்: பிரபஞ்சம் தோன்றிய பிறகே காலமும் இடமும் தோன்றியன.

34 : அன்னை

அன்னை கூறுகிறார்: முனிவருடைய ஒளி வெளிரிய நீல நிறமானது. தேவலோக ஒளி நீலம்.சைத்திய ஒளி ( பிங்க் ) ரோஸ் நிறமானது. உணர்வின் ஒளி வயலட். உடலின் ஒளி சிவப்பு. மனதின் ஒளி மஞ்சள். சத்திய ஜீவிய ஒளி போன்னொளியாகும்.