Monday, February 28, 2011

உங்கள் அறியும் தகவமைப்பை மாற்ற வேண்டும்.

நமக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த வாழ்க்கை முறை பிடிக்கவில்லை, அதில் ஏதும் சத்தியம் இல்லை, என தோன்றினால், சரி, இந்த வாழ்க்கையை பின்னும் சததியமுள்ளதாக வாழ வழிவகை என்ன? என புதுவாழ்க்கை முறையை தேட வேண்டும். அதற்கு முன் நமக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருக்கும் வாழ்க்கை முறை எப்படிப்பட்டது ? என்பதை அறிய வேண்டும். நமக்குள் புரோக்ராம் ஒன்று செய்யப்பட்டிருக்கிறது. இந்த உடல் சுமார் எழுபது டிரில்லியன் உயிர் செல்களை கொண்டது. இவ்வளவு செல்களும் தாய் தந்தையரின் இணைவிலிருந்து ( தாயின் கருமுட்டையை தந்தையின் விந்தணு துளைத்து இரண்டும் ஒன்று கலந்து தாயின் கருவில் தனி உயிராக துவங்கிய வளர்ச்சி இன்று எழுபது டிரில்லியன் உயிர் செல்களை கொண்ட ஒரு குழுவாக, உடல் எனும் அமைப்பாக, தோற்றமாக காட்சி தருகிறது. இந்த புரோக்ராம் பல தலைமுறைகளாக தொடர்ந்து நம்மை வந்தடைந்திருக்கிறது. ( தாய் தந்தை இணைவு துவங்கி - 50 வயது - இன்றுவரை நம்மி நடந்திருப்பது வேதியல் வினைகளே! ) இந்த புரோக்ராமை மையப்படுத்தியே வேதியல் வினைகள் நடக்கிறது. அல்லது இந்த புரோக்ராமே வேதியல் வினைகளை சரிபார்த்துககொள்கிறது. சரி, இது உங்களுக்குள் செய்யப்பட்டிருக்கும் புரோக்ராம். இந்த புரோக்ராமை வெளிக்காரணிகள் பாதிக்கவே செய்யும். வெளிசூல்நிலைகளான வெயில், மழை,காற்று தட்ப வெட்பம் இது போன்ற இன்ன பிற. எந்த மாதிரி சூழ்நிலைகளையும் தாங்கி, அல்லது ஒதுங்கி இருந்து தன்னை தகவமைத்துகொள்ளும் அளவுக்கு இந்த புரோக்ராம் செயல்படுகிறது. இந்த புரோக்ராம் தண்டுவடத்திலும், , மூலையிலும், சுரப்பிகளிலும் இந்த மூன்றிலும் கலந்து செயல்படுகிறது. இதிலிருந்து வருவதே உங்கள் எண்ணம், உணர்வு அனைத்தும்.

ஒருமனிதன்தன்னையேதனக்குஎப்படிஅறிமுகப்படுத்திக்கொள்கிறான், அடையாளப்படுத்திக்கொள்கிறான், என்பதையும் கவனிக்க வேண்டும். தான் யார்? நான் இந்த குடும்பத்தவன். என்னுடைய முழு ஈடுபாடும், செயலும் இந்த குடும்பத்துக்காக என்றும் மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்கள் குடும்ப வாசிகள். அடுத்து ஜாதீய வாசிகள், அடுத்து மதவாசிகள், அடுத்து தேசிய வாசிகள், ஏன்? கட்சி வாசிகள்கூட இருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி பொதுவாக இவர்கள் பூமி வாசிகள். ( பூலோகவாசிகள் ) இவர்களையெல்லாம் இப்படி பந்தப்படுத்தி வைத்திருப்பது இந்த பூமியின் ஈர்ப்பு விசையான புவிஈர்ப்பு விசையே. வெளிக்காரணியான இந்த ஈர்ப்புவிசையில் நமது புரோக்ராம் கட்டுப்பட்டு நம்மை இத்தனை விஷயங்களில் பந்தபடுத்தியுள்ளது. இந்த ஈர்ப்பு விசையே முதலாமவருக்கு குடும்ப ஈர்ப்பு விசையாகவும், அடுத்தவருக்கு, அடுத்தவருக்கென செயல்படுகிறது. அது அவர்களை அவர்கள் அறிமுகப்படுத்திக்கொண்ட விதம், அடையாளப்படுத்திக் கொண்டவிதம்.

உண்மையான சத்தியம் என்ன? நான் யார்? இந்த பூமியில் நான் பிறந்ததின் காரணம் என்ன? இந்த நான் என்பது என்ன? நான் என்பதே ஒரு கற்பனா ரூபம் என அறிந்த பின் இனி செய்ய வேண்டியது என்ன? அந்த மூல சத்தியம் என்ன? இந்த கேள்விகள் எழுந்து இந்த பிரபஞ்சத்தின் ஆதாரம் என்ன? என்று நோக்கும்போது - ஒரு சரியான உண்மையை நாம் இப்போது இருக்கும் உடல் தகவமைப்பில் அறிந்து கொள்ள முடியாது என தெரிய வருகிறது. இப்போது நம்மில் இயங்கும் புரோக்ராம் நம்மை அனைத்தின் மீதும் பந்தப்படுத்தி, இந்த பந்தத்திலிருந்து விடுபட மறுக்கும் புரோக்ராம் அமைப்பு. இந்த அமைப்பில் ஒரு மனிதராவது போதும் என திருதியுற்று மரித்தாரா என்றால் 'இல்லை' என்றே பதில் வரும். ஒரு பொருளிலோ, ஒரு உறவிலோ, ஒரு கற்பனையிலோ பந்தப்பட்டிருக்கும் பொழுது சரியான உண்மையை நாம் அறிய முடியாது.

ஆனால் நம்முடைய அடிப்படைத்தன்மை என்னவோ திருப்தியையும் , பூரணத்தையும் எதிர்கொண்டதாக இருக்கிறது. அந்த திருப்தியையும், பூரணத்தையும் நாம் காண வேறு ஏதாவது வழிமுறைகள் உண்டா? என தேட வேண்டியிருக்கிறது. இப்படி பல காலமாக மனித குலம் தேடிக்கொண்டிருக்கிறது. கண்டடைந்தவர்களும் ஏராளமானவர்கள். கண்டடைந்தவர்கள் தங்களை “நாங்கள் இந்த பூமிக்கு மட்டும் சொந்தமில்லை, இந்த பிரபஞ்சத்துக்கே சொந்தமானவர்கள்” என்று சொல்லியிருக்கிறார்கள். நீங்களும் பிரபஞ்சவாசியாக வாழ விரும்பினால், உங்கள் அறியும் தகவமைப்பை மாற்ற வேண்டும்.

இந்த புரோக்ராம் மாற்றம் என்பது வேதியல் வினைகள் மூலமே சாத்தியப்படும்.
இந்த வேதியல் வினைகளை எப்படி செய்வது?

புறக்காரணிகளால் நமது புரோக்ராம் மாறுதலடையும் வாய்ப்புள்ளது. ஆனால் நாம் பல காலம் அவைகளை தவிர்த்தே வந்துள்ளோம். நமக்கு வெளியே நெருக்கமாக புவிஈர்ப்பு விசையும், வெளியில் கிரக ஈர்ப்பு விசைகளும், அதற்க்கு அடுத்து சூரிய ஈர்ப்பு விசையும், அதை அடுத்து உடுமண்டல ஈர்ப்புவிசையும், அதையும் அடுத்து உடுமண்டல தொகுப்பு ஈர்ப்பு விசையும்,அதையடுத்து, இப்பிரபஞ்ச ஈர்ப்பு விசையும்,அதையடுத்து, சூழ்ந்து நிற்கும் சூன்ய ஈர்ப்பு விசையுமென மொத்த விசைகளும் நம்மை சூழ்ந்துள்ளன. இதில் ஓர் ஒழுங்கான அமைப்பும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்த ஒழுங்கான ஈர்ப்பு விசைகளை நாம் நமக்குள் அனுமதிததோமானால், ஏற்கனவே நம்மிடம் உள்ள இந்த பந்த தன்மை அகன்று, ஒரு நிறைவான, குறைவற்ற, பூரண தன்மையை அடைவோம். அந்த ஒழுங்கான ஈர்ப்பு விசை நம்மில் நுழைந்து நமது புரோக்ராமில் சரியாக தகவமைத்து அந்த பரிபூரண சத்தியத்தை நாம் அறிய வழிவகை செய்து தரும். நம்மையும் பூரணத்தன்மையில் நிலை நிறுத்தும். உங்கள் புரோக்ராம் தன்னிறைவுறும்.

2 comments:

  1. தங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும்

    பாரி தாண்டவமூர்த்தி
    http://blogintamil.blogspot.com/2011/03/4.html

    ReplyDelete
  2. ஐயா கருத்துரை போடும் போது வரும் word verification ஐ நீக்கிவிடவும்....

    ReplyDelete