Thursday, February 24, 2011

அர்த்தமே வேண்டாம் ஆனந்தமா யிரு.

நாம் இப்போது இன்பம் துன்பம் இரண்டையும் மனதின் துணை கொண்டே உணர்ந்து வருகிறோம்.
மனம், இந்த உணர்வு நமக்கு(உயிருக்கு)நல்லது, ஆகவே இன்பமாயிருக்கலாம். அல்லது , இந்த உணர்வு நமக்கு(உயிருக்கு) கெட்டதுஆகவே, இது நமக்கு துன்பம் என மனது சதா தணிக்கை செய்து கொண்டேயிருக்கிறது.

மனதால் தணிக்கை செய்து உணர்வது மட்டுமே புத்திசாலித்தனம் என நினைக்கிறோம். எந்த ஒரு உணர்வும் ஒரு காரண காரியத்தோடு, ஒரு அர்த்தத்தோடு இருக்க வேண்டும் என மனம் நினைக்கிறது -அப்படியே 'சரியாக' நடந்தால் - இப்போது உணர்வு, மனதின் கட்டுப்பாட்டில், கட்டுப்பட்டு இருப்பது மனதுக்கு உறுதியாகிறது. உணர்வு தனித்து உணர துவங்கினால் மனதால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அது மனதின் சுயத்துக்கு விடப்பட்ட சவாலாக எண்ணுகிறது.

மனதின் சதா எதையாவது நினைத்துக்கொண்டேயிருக்கும் செயலைக்குறைக்க ஒரு உபயம்.

உணர்வு நிலையில்காரண காரியமின்றி சதா இன்பமாயிருங்கள். அவ்வப்போது மனம் ஓடிச்சென்று உணர்வை கவனிக்கும். ஏன் இப்படி இன்பமாக தானே உணர்கிறது என! காரணம் புரிந்தாலும், புரியாவிட்டாலும் " இன்பமயிருப்பது உயிருக்கு உகந்ததே! என விட்டு விடும். மனம் எந்த பாதிப்பும் அடையாது. அதே சமயம் மனதின் தேவையற்ற ஓட்டம் குறையும். உங்கள் கவனம் எப்போதும் உணர்வின் ஆனந்தத்திலேயே குவிக்கப்படுவதால், உங்களின் அத்தனை செல்களும் குதூகலமடையும். ஆகவே ' அர்த்தமே வேண்டாம் ஆனந்தமாயிரு'.

No comments:

Post a Comment