Sunday, February 27, 2011

சத்தியலோகம்.

அறியாமையுலகும் - சத்தியலோகமும்.

அந்த அசைவற்ற, நிலையான பரிபூரண சத்தியம் , அதிலிருந்து உதித்த, முழுமையற்ற, குறைபாடுடைய, நிலையற்ற, சதா சஞ்சரிக்கும் சதா மாற்றமடையும், உருமாறும் இயக்கமுறும் 'மாயா' அறியாமை என 'கலந்து' நிலைமை இருக்கிறது.

இதில் நாம் ( கண்ணில் காணுவது தான் நிலையானது எனும் )அறியாமையோடு அறியாமையாக கலந்து உறவாடுவோமா ? இல்லை, எது நிலையான சத்தியம் என தேடி இனம் கண்டு சத்தியத்தோடு சத்தியமாக இணைந்து வாழ்வோமா?

இந்த பொருட்களாலான பிரபஞ்சமே நிலையற்ற ஒன்றுதான். சதா மாற்றமுறுவதுதான். ( மனிதன் தோற்ற பிரமையில் மூழ்கிக்கிடககிறான்.) - ஒரு பொருளுக்கு திடத்தன்மையையும், தோற்றத்தையும் அளிப்பது . எலக்ட்ரான்களின் அதிவேக விளைவுகளே என்பதை முன் கட்டுரைகளில் பார்த்தோம்- இந்த மாயா பிரபஞ்சத்திலிருந்து கிளைத்த அறியாமைகள்தான் அனைத்து உயிர்களும், நீங்களும், நானும்.

நம்மில் கிளைக்கும் அறியாமைகள்தான் மனம் எனும் எண்ணங்களும், உணர்வும். ஆனால் இந்த அறியாமைகள் எல்லாம் எதில் நிலைகொண்டிருக்கின்றன என்றால்? அந்த அசைவற்ற, நிலையான பரிபூரண சத்தியத்திலே!

அந்த அசைவற்ற, நிலையான பரிபூரண சத்தியம் ஒவ்வொரு அணுவிலும் கோர்த்து நிற்கிறது.

அனைத்து அறியாமைகளையும் எலக்ட்ரான் துகள்களே நடத்துகின்றன!. அதற்க்கு இணையாக இருப்பது புரோட்டான் துகள்கள். இதில் எலக்ட்ரான் துகள்களே 'வெளிநோக்கி' செயல்புரிவது.

உங்களுக்கு இருப்பது போலவே, இந்த பிரபஞ்சத்துக்கும் தேடல் இருக்கிறது. முழுமையுறா அனைத்துக்குமே தேடல் இருக்கிறது. அந்த முழுமையுறா தன்மையே அறியாமை. இது அங்கிங்கெனாதபடி பிரபஞ்சமெங்கும் பரவி, விரவிக்கிடக்கிறது. அதுதான் உங்களிடமும் செயல்படுகிறது.

நீங்கள் கோடிக்கணக்கான பிறவிகளாக அந்த முழுமையைத்தான் தேடிக்கொண்டிருக்கிறீர்கள்.

அந்த முழுமையை அடைந்த எதுவும் எதையும் தேடுவதில்லை. அது அந்த முழுமையோடு முழுமையாக முழுமையாகி விடுகிறது.

அந்த முழுமையே சத்தியலோகம்.அறிவு என்பது நிலையான அசைவற்ற சத்தியம், அறியாமை என்பது இயக்கமாயிருக்கிற இயக்க பிரபஞ்சம் முழுவதுமே!.

No comments:

Post a Comment