Monday, February 14, 2011

நுகர்வு திறன்.

நமக்கு இந்த வாழ்க்கையை நுகர்வதற்கு ஐந்து புலன்கள் இருப்பது தெரியும். கண், காது, மூக்கு, நாக்கு, தேகம் . இந்த தேக உணர்வு என்பதை நாம் முழுமையாக உணர்ந்ததில்லை. கண் என்பது ( அதனை சார்ந்த நரம்பு தொகுதி ) நமது உடலில் ஒரு பகுதி. காது என்பதும் ( அதனை சார்ந்த நரம்பு தொகுதி ) நமது உடலில் ஒரு பகுதி. மூக்கு என்பதும் ( அதனை சார்ந்த நரம்பு தொகுதி ) நமது உடலில் ஒரு பகுதி.அதேப்போல நாக்கு என்பதும் ( அதனை சார்ந்த நரம்பு தொகுதி ) நமது உடலில் ஒரு பகுதி.ஆனால் தேகம் என்பது உடலில் ஒரு பகுதியல்ல. அது ஓர் முழுமை. நாம் இந்த தேக உணர்வு பற்றி தெளிவான அறிதல் இல்லாது இருக்கிறோம். இந்த தேகத்தால் குளிர், வெப்பம் , வலி, எரிச்சல் போன்ற உணர்வுகளைத்தான் உணர்ந்திருக்கிறோம். அந்த புலனை நுட்பமாக கவனிக்க தவறி விட்டோம். இந்த புலனை உபயோகிக்கவும் நமக்கு தெரிவதில்லை.

நாம் இந்த புலன்கள் எல்லாவற்றையுமே ஏதோ மேலோட்டமாகவே உபயோகித்து வந்துள்ளோம். இந்த ஐம்புலன்களும் நமக்கு ஐந்து கருவிகள். இந்த ஐம்புலன்களையுமே கூர்ந்து கவனிப்பதில்லை நாம். இந்த வாழ்க்கையை சிறப்புடன் வாழ, இந்த கருவிகளை விட சிறந்த ஓன்று கிடையாது. நம்மிடம் நுகர்வு திறன் மிக குறைவாகவே உள்ளது. ( நமக்கு குடும்பத்தில், சமூகத்தில் எவ்வளவோ பிரச்னை. இதற்கெல்லாம் நேரமில்லை.) கூர்மையான கவனத்தோடு இப்பிரச்னையை நாம் அணுகினால் அப்போது தெரியவரும் நாம் எவ்வளவு மெத்தனமாக, சோம்பேறியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது. நம்மிடம் இருக்கும் திறனையே நாம் அறியாது காலம கடத்தி வாழ்ந்து வந்துள்ளோம் . இந்த அறியாமை நம் வாழ்வில் ஏன் நிகழ்ந்துள்ளது தெரியுமா? இந்த ஐம்புலன்களுமே மனதுக்கு பின்னல் ஓடுவதால்தான் . இந்த ஐம்புலன்களைப்பற்றியுமே அந்த மனது தெரிந்து வைத்துள்ள அளவுக்கு - இந்த புலன்கள் தங்களைப்பற்றி அறிந்து வைத்திருக்கவில்லை. இந்த புலன்கள் தங்கள் நுகர் திறனை அறிய முயற்சிக்கவேண்டும்.

இந்த ஐம்புலன்களுக்கும் நாம் பயிற்சியளிக்க வேண்டும். அப்போது இந்த வாழ்வின் நுகர்வு தளம் வேறொரு உயர்ந்த பரிமாணத்துக்கு எடுத்து செல்லப்படும்.

No comments:

Post a Comment