Thursday, February 24, 2011

ஒளியே நான்.அதிர்வே நான்.

நமது மிக ஆழ்ந்த தியான வேளையில் நமக்கு புருவ மத்தியில் ஒளி தோன்றுவதை காணலாம். நாம் நமது மனம் , உணர்வு இரண்டையும் கடந்து இந்த அநுபூதி ஒளித்தனமைக்குள் நுழைய ஒரு இலகுவான உத்தி. இதோ!

அதாவது நமது மனமே தனது விருத்தியை குறைத்துக்கொண்டு வந்து தனது மூல நிலையான ஒளி நிலைக்கு வருகிறது. ( உங்கள் மனதில் விளக்கமாவது ஒளி எனும் அறிவேயாகும். ) அறிவே ஒளியாக திகழ்கிறது. உங்கள் மனமே இப்போது -தியான நிலையில்- ஒளியாக துலங்குகிறது.

உங்கள் உணர்வு தளத்தில் உணர்வாக திகழ்வது ஈர்ப்பு விசையே . உங்கள் உணர்வு இக்கணம் , இக்கணம் எனும் விழிப்புணர்வுக்கு வந்து அதுவே அதிர்வாக மாறுகிறது.

ஆக! உங்கள் மனம் ஒளியாக மாறிவிட்டது, உங்கள் உணர்வு அதிர்வாக மாறிவிட்டது. {நீங்கள் மனதையும், உணர்வையும் கடந்து விட்டீர்கள்.)

உங்கள் மனமே ஒளியாகவும், உங்கள் உணர்வே அதிர்வாகவும் மாற்றமடைந்திருக்கிறது.

நீங்கள் தியான வேளையில் இந்த ஒளியே நான். இந்த அதிர்வே நான். என உங்களை ஒளியாகவும், அதிர்வாகவும் அறிந்து அந்த அதிர்விலும், ஒளியிலும் வியாபித்திடுங்கள்.

நீங்கள் தியான வேளையில் ஒளியாகவும், அதிர்வாகவும் இருக்கிறீர்கள்.

No comments:

Post a Comment