Thursday, March 3, 2011

புவி ஈர்ப்பு விசையும், பிரபஞ்ச ஈர்ப்பு விசையும்.

நாம் இப்பொழுது புவி ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு, இன்றைக்கு நமக்கு இருக்கும் உணர்வு நிலைமையை அனுபவித்து வருகிறோம். இந்த வலி, சுகம் என்பது மாதிரி நமக்கு இப்போதைய உணர்வு இருக்கிறது. இந்த உணர்வுகள் அனைத்துமே இந்த புவிஈர்ப்பு விசை நமது முதுகு தண்டின் கீழ்பகுதியான மூலாதாரம் எனும் முதுகு தண்டின் நுனி பகுதியில் துவங்கி படிப்படியாக மேலேபோய் மூளையை அடைவதால் ஏற்படுவது. இது மூலாதாரத்தில் வலுவாகவும், மூளைப்பகுதியில் குறைந்தும் நமது மூளையிலுள்ள நியூரான் அணுக்களை புவிஈர்ப்பு விசையானது கீழ்நோக்கி இழுத்துவருகிறது. இதனால் நமது உணர்வு நமது உடலைமட்டும் சார்ந்ததாக, எல்லைகள் உடையதாக இருக்கிறது. இது ஒரு குறையான உணர்வே!

நாம் நமது தியானத்தின்போது அந்த பிரபஞ்ச ஈர்ப்புவிசையை நமது உச்சந்தலை தொடக்கி முதுகு தண்டு வழியாக கீழிறக்கி மூலாதாரத்தில் நிறுத்தி, நமது முழு கவன நிலையையும் மூலாதாரத்தில், குவித்து நிறுத்தி அனைத்து செல்களையும் அதிர்வில் எழுப்பி மேல்நோக்கி, புருவ மத்தி, அல்லது உச்சந்தலையை நோக்கி முழு பிரபஞ்ச ஈர்ப்பு விசையையும் நாம் ஏற்றுக்கொண்டோமானால், அந்த ஈர்ப்புவிசை மூளைப்பகுதியில் வலுவாகவும், படிப்படியாக குறைந்து கொண்டே கீழ்நோக்கி மூலாதாரத்தை அடைகிறது.

இப்போது நமது உணர்வு தகவமைப்பே தலை கீழாக மாறுவதை காணமுடியும்.

இப்போது, நீங்கள் உங்களின் உணர்வு எல்லையை கவனித்தீர்களானால், நமது உணர்வு ஒரு எல்லையற்ற தளத்தில் விரிவடைந்து கொண்டேயிருப்பதை காண முடியும்.

அங்கு எந்த எல்லைகளும் இல்லை. நீங்களே இப்போது ஒரு எல்லையற்ற தன்மையில் இருப்பதையும் காண்பீர்கள்.

இந்த எல்லையற்ற தன்மையில் நீங்கள் நிலைத்திருக்கும்பொழுது இயல்பாக ஒரு எண்ணம் உங்களில் தோன்றினால் கூட, அடுத்து அது தொடர் எண்ணமாக மாறுவதில்லை, தொடர்வதுமில்லை.

இதற்கு காரணம்,

உங்கள் உணர்வுக்கு எல்லையிருந்தால், ஒரு எண்ணம் தோன்றினால், அந்த எண்ணம், உணர்வில் விழுந்து அந்த எல்லைகளில் மோதி, எதிரெண்ணமாக தொடர்கிறது. உங்கள் உணர்வுக்கு எல்லையில்லாத போது அந்த உணர்வில் விழும் எண்ணம் அங்கேயே மரித்து விடுகிறது.

எல்லையற்ற உணர்வே முழுமையானது, நிறைவானது, பூரணமானது. அங்கு எந்த கேள்வியும் இல்லை. கேள்விகேட்க, எந்த ஹேதுக்களும் இல்லை.

இயற்கையினால் நமக்கு விதிக்கப்பட்ட உணர்வே இந்த முற்றுணர்வுதான். நாம் அறியாமையில் சிக்கி இருக்கிறோம்.

இந்த முற்றுணர்வை நோக்கியே அனைத்துயிரும் பயணித்துக்கொண்டிருக்கிறது.

புவியில் தற்போது வசிக்கும் தாவர விலங்குகளின் எண்ணிக்கை 1200000 ( பன்னிரண்டு லட்சம் ) வகைகள்.

1 comment:

  1. //இந்த எல்லையற்ற தன்மையில் நீங்கள் நிலைத்திருக்கும்பொழுது இயல்பாக ஒரு எண்ணம் உங்களில் தோன்றினால் கூட, அடுத்து அது தொடர் எண்ணமாக மாறுவதில்லை, தொடர்வதுமில்லை.//

    Good to hear :)

    ReplyDelete