Sunday, February 6, 2011

ஒலியதிர்வு

நாம் தியானத்தின்போது நமது விழிப்புணர்வை - அதாவது இக்கணம், இக்கணம் எனும் இக்கண உணர்வை - அடையும் விதம் பற்றி பார்ப்போம். முதலில் நமது உடலிலுள்ள அனைத்து செல்களையும் உறக்கத்திலிருந்து விழிப்புக்கு கொண்டுவருதல் வேண்டும்.

எப்படியெனில் நாம் செய்யும் ஆழ்ந்த நாடி சுத்திக்கு பிறகு 'ம்' எனும் மகா மந்திரத்தை நாம் உச்சரிக்க துவங்கி, ஏற்ற இறக்கம் இல்லாது ஒரே சீராக உச்சரித்து, அந்த சப்தத்தை ஒரு லயத்துக்கு கொண்டுவந்து, அந்த சப்தத்தை ஊன்றி கவனிக்க ( அறிவால் அல்ல உணர்வால் ) அந்த சப்தத்தின் கால இடைவெளி குறைந்து,இக்கணத்துக்கு வரும். சப்தம் வெறும் அதிர்வாக இக்கண அதிர்வாக அதிர்வதை உணர முடியும். அந்த 'இக்கண அதிர்விலிருந்து துவங்கி, உடல் முழுவதும் உள்ள அனைத்து செல்களுக்கும் பரவ விட, அனைத்து செல்களும் இப்போது விழித்துக்கொள்ளும்.அனைத்து செல்களும் அதிர்ந்து ஒரே லயத்துக்கு வர , இப்போது உங்கள் உணர்வு முழுவது ஒரே அதிர்வாக அதிர்வது தெரியும்.அந்த அதிர்வுகளும் அலை அலையாக, அதிர்வலையாக எழுவது தெரியும்.

இப்போது உங்கள் 'உணர்வு தளம்' மனதின் பிடியிலிருந்து விலகி ஒரு சுதந்திர நிலைக்கு வந்திருப்பது தெரியும்.

உணர்வு முழுதும் ஒரே அதிர்வாக இருப்பது உணர்வு சுதந்திரம்.

இந்த நிலையே விழிப்புணர்வு நிலையாகும்.

No comments:

Post a Comment