Friday, February 4, 2011

விழிப்புணர்வு

இந்த வாழ்வின் அடிப்படை சீர்திருத்தத்திற்கு,மற்றும்ஆன்மிகம் பற்றி அறிய 'நான்யார்?' எனும் கேள்வி எப்படி அடிப்படையாக அமைகிறதோ அதுபோல, அநுபூதி நிலைக்குள் நுழைய இக்கணம் எனும் விழிப்புணர்வு அடிப்படையாக அமைகிறது.

நீங்கள் இக்கணத்தில் மட்டும் சஞ்சரிக்க முடிந்தால், உங்களுக்கு எந்த மன,எண்ண ஓட்டங்களும் இராது. மன,எண்ண ஓட்டங்கள் நிகழ,இக்கணம் எனும் கால இடைவெளி போதாது.

நம் வாழ்வின் 'அடிப்படைஅறிவு' நான் யார்? என்கிற கேள்வி. நம் வாழ்வின் 'அடிப்படைஉணர்வு' இக்கணம் எனும் விழிப்புணர்வு.

இந்த விழிப்புணர்வுதான் அனுபூதி நிலையின் சாவித்துவாரம். இதுவே அறிவின் ஒடுக்கம், உணர்வின் ஒடுக்கம். அனைத்தும் ஒடுங்கி, ஓரிடமாயிருத்தல்.

இதையே சித்தர்கள் "வெம்மாயை அற்று;வெளிக்குள் வெளி கடந்து சும்மாயிருக்கும் சுகம்" என்றனர்.
உங்கள் தியான நேரத்தில் இதை கவனப்படுத்தி இக்கணத்திலே மட்டும் இருத்தி லயித்து நின்றால் - உங்கள் அடிப்படை தன்மையான அநுபூதி தன்மை திறக்கும்.

No comments:

Post a Comment