Wednesday, February 9, 2011

அறியாமையை விட்டு நழுவதல்.

தியான நேரத்தில் நாம் நமது இரண்டு அறியாமைகளான 'நான்' எனும் மனம் மற்றும் 'எனது' எனும் உணர்வு இவை இரண்டிடமுமிருந்து நழுவுவது எப்படி என பார்ப்போம்.

இவை இரண்டுமே மாய சொரூபமானது.

இதிலிருந்து விடுபடும் வரை நமக்கு விமோசனம் கிடையாது.

அதற்கு சொந்த இருப்பு இல்லை. அது நிலையற்றது. அது உண்மை இல்லை. இக்கண விழிப்புணர்வின் ஒளிப்பிரதேசத்தில் நாம் இருக்கும்பொழுது 'நான்' எனும் வீட்டைவிட்டு, 'எனது' எனும் வாசல் கதவையும் தாண்டி அவைகளை விட்டு விலகி,- இப்போது மனத்தால் எதையாவது எண்ணுவதோ, உணர்வால் எதையாவது உணர்வதோ கூடாது. இரண்டையும் உதறிவிட்டு - வெளியில்வர

வெட்ட வெளியில் 'இருப்பு' இருப்பதை அந்த இருப்பே அறிந்துணரும்.

அந்த இருப்பில் தான் நாம் இருக்கிறோம். அங்கு எல்லைக்கு உட்பட்டது ஒன்றும் இல்லை. எல்லையற்ற இருப்பேயுள்ளது. இதுவே நாம் நமது இரண்டு அறியாமைகளை விட்டு நழுவும் உத்தி.

No comments:

Post a Comment