Thursday, July 22, 2010

44:நமது பாதுகாப்புணர்வு.

நாம் காரண , காரிய பிரபஞ்சத்தில் வாழ்கிறோம். ஒரு சிறு துரும்பு கூட காரணமின்றி அசைவதில்லை. அனைத்து நடப்புக்குமே அடிப்படையில் காரணம் இருக்கிறது. இங்கு பூமியில் நீங்கள் விரலை சொடுக்கினால் கூட அதன் பாதிப்பு சூரியனில் நிகழ்கிறது என்கிறது அறிவியல். ஒவ்வொரு 'இம்மி'யளவு அசைவுமே காரணத்துடனே நடக்கிறது. ஏதோ தன்னிச்சையான பிரபஞ்சமாக இருக்க முடியுமா இது? இந்த பிரபஞ்சத்துக்குள் உங்கள் வருகையும் இப்படியே. உங்களுக்குள் உங்கள் மனதின் வருகையும் இப்படியே. இந்த மனதுக்கு காரணம் என பின்னோக்கிப்பார்த்தால் ஒருசெல்( முதல் ) உயிரிலிருந்து , ஏன்? இந்த பூமியில் முதன்முதலில் உயிர் துவங்கிய பொழுதே உங்கள் துவக்கமும், உங்கள் மனதின் துவக்கமும் சூல் கொண்டுவிட்டது. இன்று இருக்கும் உங்கள் மனதின் தகவமைப்பு , பல பிறவிகளாக பரிணாமமடைந்து,பரிணாமமடைந்து வந்திருக்கிறது. அது ஒரு செல் உயிரிலிருந்து இன்று எழுபது லட்சம் கோடி உயிரிகளாக ( உயிரிகளின் தொகுப்பாக) பரிணாமமடைந்து வளர்ந்திருக்கிறது.
இவ்வளவு பிறவிகளில் அது ( மனம்) கண்ட அனுபவம் தனித்து நின்று உயிர் வாழ முடியாது என்பதே. ஒரு குழுவாக இருந்தே தொடர்ந்து உயிர் காத்தல் அவசியம் என்பது அதன் அனுபவ சாரம். இதன் காரணமாகவே , ஒரு செல்லில் துவங்கிய 'உன்' துவக்கம் பல செல் உயிராக பல்கி பெருகி குழு, குழுவாக தொகுப்பு, தொகுப்பாக பரிணாமமடைந்து தொடந்து வந்திருக்கிறது.
அதனால்தான் மனிதன் தன்னை காத்துக்கொள்ள , குடும்பம், ஜாதி, இனம், மொழி, கட்சி, தேசியம் என குழுவாக சேர்த்துக்கொள்கிறான். அந்த குழுவில் தலைவனாகி விட்டால் தனக்கு உச்ச பட்ச பாதுகாப்பு கிடைக்குமென நினைக்கிறான். இந்த பாதுகாப்பு மனோபாவத்தால்தான் இவன் அடுத்தவனை அடக்கி ஆள துடிக்கறான். இந்த அடக்கி ஆளும் மனோபாவமே சமூகத்தில் இன்று மலிந்து கிடக்கிறது.
மனிதன் குழு மனப்பான்மையிலேயே வளர்கிறான்,
இதன் விளைவே உலகை பலமுறை( அனைத்துயிரையும் ) அழிக்கவல்ல அணு ஆயுதங்கள். பல நாடுகளில் அங்கங்கே தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

No comments:

Post a Comment