Wednesday, July 14, 2010

42 : அனுபவத்தாலறிவது.

நாம் அடிப்படையில் மூன்று வித தன்மையில் இருக்கிறோம்.1, ஜடம், 2, அறிவு, 3, இரண்டும் கலந்த ( உடல், உயிர்).அறிவும் ஜடமும் இணைந்து உணர்வாகிறது. நாம் பெரும்பாலும் இந்த இரண்டும் கலந்த உயிர் தன்மையிலேயே 'உணர்ந்து' வாழ்ந்து வருகிறோம்.நம்மிடம்அறிவானது இந்த உயிர் தன்மையின் உணர்வு சார்ந்தே இது நாளும் செயல்பட்டு வருகிறது. இவ்வுணர்வையொட்டியே 'மனம்' எழுகிறது. அந்த மனமே வழிகாட்டியாகிறது. மனதின் கட்டமைப்பை உருவாக்கியதும், பராமரிப்பதும் உணர்வுதான். அறிவு இதனூடாக செயல்படுகிறது. அறிவு தனி நிலையது.
ஜடம் இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் மாதிரி தன்மூல சமநிலை நோக்கி 'கலைகிறது'.அறிவோ இந்த உயிரை செயல்படுத்தி தனது மூல சுத்த சுயத்தை அறிய தவிக்கிறது. இதனாலேயே பருவம் மற்றும் மூப்பு வருகிறது. இந்த தனி நிலையறிவை கவனித்தால் உரையிலிருந்து உருவிய வாளைப்போல ( உடலை, உயிரையும் விட்டு தனித்தும் காணப்படுகிறது ).
அப்போது உயிர் தனித்து வெறும் அறிவற்ற உணர்வு செயலாக மட்டும் இருக்கிறது. இந்த உணர்வு செயலில் எந்த எண்ணமும் கலப்பில்லை. காலில் தைத்த முள்ளை வெளியில் எடுத்தது போல தினவு நீங்கி சுகதன்மையை உணர்கிறது உயிர்.

No comments:

Post a Comment