Saturday, July 24, 2010

46: யோக வாசிஷ்டம் தமிழ் நூலின் முகவுரை.

மனது எனும் சொரூபத்தையுடையவனே மனிதன். இம்மனதானது அறிவின் வேறுபாடு.ஆகையால், தன் சுய நிலையாகிய அறிவை அறிந்துகொள்வதே மனித உருவமாக இயங்கினதன் நோக்கம், இதுதான் மனித ஜென்மத்தின் குறியும் பலனும்.
ஜன்ம சாபல்யம் இப்படி இருக்க, அறிவுதான் அனைவராலும் அறியப்படாமல் இருக்கிறது. லட்சக்கணக்கான வருடங்கள் மானிட உருவத்தில் கழிந்தும் , இந்த 'அறிவு' எனும் சொரூபத்தை அறிந்து அதை அடையும் முறைகளைப்பற்றி உரைத்தவரோ, எழுதினவரோ இதுவரையில் எத்தேசத்திலும் தென்படவில்லை. அதாவது வசிஷ்டர் ஒருவரைத்தவிர. இதர உலக வியவகாரங்களைப்பற்றியும் , மானிட வாழ்க்கையைப்பற்றியும் , அதை சீர்திருத்திக்கொள்ளும் முறைகள், இன்னும் அநேகவித சித்தாந்தங்கள் பற்றியும் எல்லாம் , அநேக மகான்களிடமிருந்து கேட்டோ, படித்தோ இருக்கிறோம். ஆனால் பிரபஞ்சத்திற்கு சாரமாயுள்ள அறிவைப்பற்றி நாம் அறியோம். வசிஷ்டர் ஒருவரே இதைப்பற்றிப்பூர்ணமாக எடுத்துரைத்தவர்.
அதாவது வால்மீகி மகரிஷியால் கேட்டு எழுதப்பட்ட காவியமாகிய " யோக வாசிஷ்டம் " அல்லது "மகாராமாயணம்" என்பதே இங்கு குறிப்பிடப்படுவது. இந்நூலை தரவிறக்கிக்கொள்ள இங்கே அணுகவும்.......... http://www.scribd.com/doc/11815811/YOGA-VASISTAM-TAMIL-BOOK?secret_password=&autodown=pdf

No comments:

Post a Comment