Tuesday, July 13, 2010

41 :தன்னுணர்வு தகவமைப்பு ( அக உறுதி )

காலையில் தியானம் செய்கையில் புருவ மத்தியில் ஒளி துலங்குகிறது. அக்கணம் உடலும் உணர்வும் ஒரே ஏக உணர்வாக இருக்கிறது. எங்கும் ஒளி, ஒளி மட்டுமே! அவ்வொளி உணர்வை தன்னுணர்வு தகவமைப்பாக உறுதி செய்தல் வேண்டும். இவ்வளவு காலம் இந்த உணர்வு நமக்கு பரிச்சயமில்லாது இருந்தது. இப்போது பரிச்சயப்பட்டிருக்கிறது.இத்தன்னுணர்வு தகவமைப்பை நாம் பழக்கப்படுத்திக்கொள்ளும் வண்ணம் மதியம் , மாலை நேரங்களில் அத்தன்னுனர்வு தகவமைப்பை ஞாபகப்படுத்தி பழகி வரல் வேண்டும். இத்தன்னுணர்வு தகவமைப்பு நமக்கு பழக்கப்பட வேண்டும்.இவ்வாறு அக உறுதி செய்து கொள்ளல் வேண்டும்.

No comments:

Post a Comment