Tuesday, February 22, 2011

ஒளியுடல்.

நமக்கு ஸ்தூலமான இந்த உடல் உள்ளது போல மற்றும் இரு உடல்கள் இருக்கின்றது. ஒன்று உணர்வு உடல், மற்றொன்று ஒளியுடல்.இதே போல இந்த பிரபஞ்சத்துக்கும் மூன்றுவித உடல் இருக்கிறது. நாம் நேரிடையாக காணும் இந்த பூமி, மற்றும் சூரியனை கிரகங்களை, உள்ளடக்கிய சூரியக்குடும்பம், இதனையும் உள்ளடக்கிய பால் வீதி மண்டலம் , அதனையும் உள்ளடக்கிய இப்பிரபஞ்சம். இது ஸ்தூல பிரபஞ்ச உடல்.

அடுத்தது ஈர்ப்பு விசைகளாலான உணர்வு பிரபஞ்ச உடல்.

அடுத்து, இவை அனைத்தையும் தோற்றுவித்தும், மறையவைத்தும்,தோற்றுவித்தும் தன்னகத்தே வைத்துள்ள ஒளியுடல். இதை வேதத்தில் பிரம்மம் என்கின்றனர்.

நாமும் நமது தியான வேளையில் இந்த மூன்றுவித தன்மையுள்ள உடல்களையும் தரிசிக்க முடியும். நாம் நமது ஸ்தூல உடல் இயக்கங்களையும், ( மனதின் இயக்கமும் ) உணர்வு உடல் இயக்கங்களையும் கடந்து ( இந்த 'நான்' எனும் இரண்டு அறியாமைகளையும் விட்டு - ஒரு இம்மியளவு இயக்கமும் இல்லாது. ) தரிசிக்க முடிந்தால் இந்த ஒளியுடலை அடைவோம். அது ஏற்கனவே நம்மில் உள்ளது தான்.

இந்த, நமது ஒளியுடலில் நாம் தொடர்ந்து நிலைக்க முடிந்தால் அது எல்லைகளற்று இந்த பிரபஞ்ச பேருடலோடு இணைந்த ஒரே ஒளியுடலாக கலந்து பொருந்தி இருப்பதை அறிவோம்.

"எட்டுத் திசையும் பதினாறு கோணமும் எங்கும் ஒன்றாய் முட்டித்ததும்பி முளைத்தோங்கு சோதியை “ என்று பட்டினத்தார் பாடுகிறார்.

1 comment:

  1. ஒளியுடல் ஆக்கும் இரகசியம் பாகம் -1
    http://saramadikal.blogspot.in/2013/06/1.html

    அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி
    இவண்

    சாரம் அடிகள்
    94430 87944

    ReplyDelete