Friday, February 18, 2011

பழக்கதோஷமே மனதின் சுயம்.

இந்த தகவலை சற்று நிதானமாகவும், கவனத்துடனும் படிக்கவும். நமது ஆழ்ந்த தியானத்தில் அனைத்து செல்களும் விழித்து,ஒரே அதிர்வாக ஏகத்தன்மையுடன் புருவ மத்தியில் ஒளிரும் ஒளியில் கலந்து , எல்லைகளற்று, எங்கும் ஒரே ஒளிப்பிரகசமாக துலங்க,
அச்சமயம் நாம் நமது அறியமைகளான நான் எனும் எல்லையுடைய மனம், எனது எனும் எல்லையுடைய உணர்வு இரண்டையும் அந்த ஒளிப்பிரகாசத்திலேயே போட்டு ( எல்லைகளை) கரைத்துவிட எத்தனிக்கும்பொழுது,
மனது அவ்வளவு சீக்கிரம் ஒத்துவருவதில்லை. ஆனால், அதன் 'சுயம்' பலவீனமாக, ' எதையாவது தொடர்ந்து எண்ணிக்கொண்டேயிருப்பதை' நம்மால் அறிய முடிகிறது.
மனம் இந்த பழக்கதோஷத்தில் கட்டுப்பட்டு நிற்பது தெளிவாக தெரிகிறது. இந்த பழக்க தோஷத்தையே தனது சுயமாக மனம் எண்ணிக்கொண்டிருக்கிறதும் தெரியவருகிறது.
நடைமுறை வாழ்வில் நாம், மனதின் இந்த பழக்க தோஷத்தை படிப்படியாக குறைத்துக்கொண்டு வருதல் வேண்டும்.
தேவையில்லாது சதா எதையாவது எண்ணிக்கொண்டிருப்பதை குறைத்துக்கொண்டு வந்து, மன ஓட்டத்தைநிறுத்துதலும் வேண்டும்.

1 comment:

  1. //மனம் இந்த பழக்கதோஷத்தில் கட்டுப்பட்டு நிற்பது தெளிவாக தெரிகிறது.//
    உண்மை :)

    ReplyDelete