Monday, March 14, 2011

உணர்வு மண்டலம்.

நாம் நமது தியான வேளைகளில் அந்த பிரபஞ்சத்தின் மூல நாதமான 'ஓம்' எனும் சப்தத்தை நமது உடல் முழுவதும் எதிரொலிக்க, அதிர, தொடர்ந்து உச்சரித்து நமது நரம்பு மண்டலம் முழுமையும் ஒளியாக அதிர்வாக மாற்றமடைய செய்யுங்கள்.

நிமிர்ந்து அமர்ந்து முதுகு தண்டை நேராக வைத்து கவனம் முழுவதையும் புருவ மத்தியில் வைத்து , உணர்வு மண்டலமான நரம்பு மண்டலத்தில் உள்ள உணர்வுகள் அனைத்தையும் முதுகு தண்டின் வழியாக மேலேற்றி புருவ மத்திக்கு கொண்டுவாருங்கள்.

உங்கள் புருவ மத்தியில் இப்போது ஒரு துளி ஒளி திகழும். அந்த துளியில் உங்கள் அறிவையும், உங்கள் உணர்வு முழுவதையும், உங்கள் சுவாசத்தையும் இணைய விடுங்கள்.

உங்கள் ஒட்டு மொத்த சாராம்சமும் அந்த ஒளித்துளிதான். வெளியிலிருந்து கேட்கும் எந்த சப்தத்தையும் உங்களை கடந்து போக அனுமதியுங்கள். நீங்கள் இப்போது வெட்ட வெளியாக இருக்கிறீர்கள். இதை நித்தம் பழக்கப்படுத்துங்கள்.

No comments:

Post a Comment