Friday, March 11, 2011

கண்ணாடியின் முகம்.

நமது தியானத்தின் பொழுது நாம் ( மனதையும், உணர்வையும் கடந்த ) ஒளிநிலையில் திளைக்கும்பொழுது நமது இருப்பு தன்மையும், கவனத்தன்மையும் ஒரு நிலைக்கண்ணாடி போல விளங்குவதை காணலாம்.

நிலைக்கண்ணாடி போலஅசைவற்ற( நிலையான ) இருப்பும், நடக்கும் அனைத்தையும் பிரதிபலிக்கும் தன்மையும், பிரதிபலிக்கும் அனைத்தையும் கவனிக்கும்(அசைவற்ற ) சாட்சித்தன்மையும் கொண்ட ஒரு நிலைக்கண்ணாடி போலநாம் இருப்பதை காணமுடியும்.

அந்த சாட்சித்தன்மை அளவேயில்லாது எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.

அச்சமயம் நம்மை ஒரு நிலைக்கண்ணாடியாக பாவித்துக்கொள்ளல் வேண்டும். ( நமது மூல உண்மையும் அதுதான். ) கவனிக்கும் சாட்சித்தன்மைக்கு எந்த வித உணர்வு பேதமோ, எந்த வித அறிவு பேதமோ கிடையாது. அது எந்த நிகழ்வை கண்டாலும் சற்றும் சலனப்படுவதில்லை.

அது, நான் எனது என்ற சுயமற்றது. அதுவே அனைத்துமாக இருப்பது.

அதிலிருந்து எதுவும் விலகியிருப்பது இல்லை. அனைத்துமாயிருப்பது அது.

நமது மனதுக்கு காட்சிப்படுவது வெறும் தோற்ற நிகழ்வுகளே!

ஆனால்,அந்த சாட்சித்தன்மைக்கு அதுவே யது. அது , அதுவே அதாக இருப்பதால் அதற்கு பேதமில்லை. நடக்கும் நிகழ்வும் அதுவே! காணும் சாட்சித்தன்மையும் அதுவே!. சுற்று சூழ இருக்கும் பௌதிக உலகும் அதுவே!அனைத்து நிகழ்வுகளும் அதுவே!

வெறும் சாட்சித்தன்மையுடன் மட்டும் விளங்கும் ஒரு மகானின் முகம் கண்ணாடியின் முகத்தைப்போன்று இம்மியும் சலனமற்று தோன்றும்.

No comments:

Post a Comment