Sunday, March 13, 2011

நமது நரம்பு மண்டலம்.

மொத்தம் 120 வகையான செல்கள் நம் உடம்பில் செயல்படுவதாக பார்த்தோம். இதில் முக்கிய பணிகளை ஆற்றும் செல், நியூரான் செல்லாகும்.
மூளை மற்றும் நரம்புகள் நியூரான் செல்களால் ஆனவை.
செய்திகளை கடத்துவது நியூரான் செல்கள்.

உறுப்புகளில் இருந்து தண்டு வடத்திற்கு வரும் நரம்புகள் உணர்வு நரம்புகள்.
நரம்பு செல்களால் ஆக்கப்பட்ட நரம்பு திசுக்களின் பணி உணர்சிகளை கடத்துவது.
நமது உடம்பில் உள்ள நரம்புகள் அனைத்தும் முதுகு தண்டுவடத்தின் வழியாகவே மூளையை அடைகிறது. தண்டுவட நரம்புகள்(31 இணைகள்)


உடற்செயல்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஒரே தொகுப்பு நரம்புறுப்புத் தொகுப்பு ஆகும்.

தலையில் உள்ள உறுப்புகளான கண், காது, மூக்கு, வாய் போன்ற உறுப்புகளிலிருந்து பன்னிரண்டு நரம்புகள் மூளைக்கு செல்கின்றன . இவை கபால நரம்புகள் எனப்படும்.

மூளையில் நிறைந்திருப்பது நியூரான் செல்களே!

நினைவாற்றல் செயலுக்கு காரணமாக அமைவது பெருமூளை.
பகுத்தறிவின் இருப்பிடம் பெருமூளை.

அனிச்சை செயல் என்பது பெருமூளையின் தொடர்பின்றி உடலில் நடைபெறும் செயல்.
அனிச்சை செயலுக்கு காரணமாக இருக்கும் நரம்பு மண்டலத்தின் உறுப்பு தண்டுவடம்.
தண்டுவடத்தின் மைய குழலில் நிரம்பியுள்ள திரவம் மூளை தண்டுவட திரவம்.

ஆக! நமது அறிவும் உணர்வும் நியூரான் செல்கலாலேயே பராமரிக்கப்படுகிறது.
நமது தண்டுவடம் மூளை மற்றும் நரம்பு மண்டலம் முழுவதும் நியூரான் செல்களால் ஆனவை.

ஆகவே! நாம் நமது தியான வேளைகளில் அந்த பிரபஞ்சத்தின் மூல நாதமான 'ஓம்' எனும் சப்தத்தை நமது உடல் முழுவதும் எதிரொலிக்க, அதிர, தொடர்ந்து உச்சரித்து நமது நரம்பு மண்டலம் முழுமையும் ஒளியாக அதிர்வாக மாற்றமடைய செய்யுங்கள். இப்போது உடம்பிலுள்ள அனைத்து செல்களும் பூரண விழிப்புக்கு வந்து விடும்.

No comments:

Post a Comment