Friday, March 19, 2010

7 : வலியும் - சுகமும்.



நான் என்பது வலி உணர்ச்சி.'நான்' என்பதை நாம் உணரும் விதம் இதுதான்.( அது குறை உணர்ச்சி )
அது உடல் எனும் எல்லைக்கு உட்பட்டு உணரப்படுவது.
அந்த முழுநிலை என்பது சுக உணர்ச்சி. இது எல்லையற்ற தன்மையில் உணரப்படுவது.
அந்த சுக உணர்வை உணர்வது 'நான்' அல்ல! எம்முள் இருக்கும் அந்த முழுநிலையே அச்சுகத்தை அறிவது.
(அதாவது அந்த எல்லையற்ற முழுநிலைசக்தி நான் எனும் உடல் எல்லையையும் உள் அடக்கிய முழுமை .)
(அந்த எல்லையற்ற முழுநிலை விகசிப்பை உடல் எனும் 'எல்லைக்குள்' அடக்கி வைத்திருப்பது தான் தவிப்பு,
- அதில் உணரும் உணர்வுகளே வலி - )
எந்த உணர்வானாலும் உடல் எல்லைக்குள் உணரப்படும்போது அது வலியை சார்ந்தே உணரப்படும்.அது குறை உணர்வே!
எந்த உணர்வானாலும் அந்த எல்லையற்ற விகசிப்பில் உணரப்படும்போது அது சுக உணர்வாகவே உணரப்படும்.
ஆக! வலி 'நான்'.
சுகம் 'முழுநிலை'.
வலிக்கு உடலே எல்லை. சுகத்துக்கு எல்லையே இல்லை.
-(அந்த எல்லையற்ற முழுநிலை விகசிப்பை உடல் எனும் எல்லைக்குள் அடக்கி வைத்திருப்பது தான் தவிப்பு,பதற்றம். -
அதில் உணரும் உணர்வுகளே வலி )
-உடல் எல்லைக்குள் அடக்கி வைத்திருக்கும் அந்த விகசிப்பை
கட்டவிழ்த்து விட்டாலே போதும்-
அது எல்லையற்ற நிலையில் தன் சுய சுபாவத்துக்கு வந்து விடும்.
நமக்கு தவிப்பும் இல்லை, வலியும் இல்லை,திருப்தி, திருப்தி, திருப்தி,
ஒரே பரம சுகம் மட்டுமே!

No comments:

Post a Comment