Wednesday, March 31, 2010

12 : மன சிலந்தி.


யோகா முடித்து த்யானத்தில் நுழைந்தால்,

வெட்ட வெளியான

வெண்ணிற மைதானம் நெற்றி சுட்டியில் தோன்றும்.

ஒரு நொடியும் குறையாத விழிப்புணர்வோடு

இருக்கும்வரை இது தொடரும்.

ஒரு அரை நொடி கவனம் தவறினாலும்,

அந்த வெண்ணிற மைதானத்தில் அங்கங்கே

இருள் திட்டுகள் தோன்றி களங்கம் உண்டாகும்.

அந்த இருள் திட்டுகளை தொடர்ந்து

திசைக்கொரு ‘கால்’ முளைத்து

மன சிலந்தி வலை பின்ன தொடங்கிவிடும்.

(வலை-எண்ணம்) அந்த எடையில்லா பூச்சியின்

இந்த வலைப்பசையில் சிக்கிக்கொண்டு

அதிலேயே லயிப்பதும் உண்டு.

தீவிர கவனம் கொண்டு

அந்த வெண்ணிற வெட்ட வெளியில் களங்கம் ஏற்படாது

காத்து கொள்வோருமுண்டு.

No comments:

Post a Comment