Friday, March 19, 2010

8 : அறிவு - பேரறிவு.


அறிவு

நமது 'உடல்' எல்லையோடு இயங்குவது
நமது அறிவு
அதாவது -மனம்.
அவரவர் அறிவு,

நமது சிந்தனைக்கு எல்லை இருப்பதால்,
அதற்கு வடிவம் உண்டு.

பேரறிவு,

இந்த பிரபஞ்சம் உட்பட அகண்டு,விரிந்து ,
எல்லையே அற்று இயங்கிக்கொண்டு இருப்பது பேரறிவு.
முற்றறிவு.

அந்த பேரறிவு தான்
இந்த சின்ன உடலிலும் இயங்குகிறது.

அந்த பேரறிவுக்குள் தான் நாமும் இருக்கிறோம்.

நமக்கு 'எல்லையோடு' மட்டுமே எண்ணம் கொள்ள தெரியும்.
நமக்கு எல்லைகளற்ற தன்மையை உணர தெரியாது.

எல்லைகளற்ற தன்மையை அறிவதே ஆன்மிகம்.

நாம் எப்போது இந்த உடல் எல்லையைத்தாண்டி,
எல்லையேயில்லாத
அந்த அடிப்படையான அறிவை அறிவது?

அது எல்லைகளற்று இயங்குவதால்

அதற்கு ஒரு வடிவம் இல்லை.

அதற்க்கு ஒரு 'வடிவம்' இல்லை என்பதால் நம்மால் அறிய முடிவதில்லை.

நாம் பழக்கத்தின் வசப்பட்டவர்கள்.

அந்த பேரறிவை தெரிந்து கொள்ள 'புதிதாக' பழகுவோம்.

No comments:

Post a Comment