Wednesday, August 25, 2010

த்யானம் என்பது

ஏற்கனவே கூறியபடி 'ஜடத்துக்குள் அறிவு நுழைந்ததாலேயே உயிர் உருவானது' என பார்த்தோம். நம்மிடம் மூன்று வித தன்மையுய்ள்ளது.1,ஜடம், 2,( ஜடமும் அறிவும் இணைந்ததாலேயான ) உயிர் இயக்கம், 3,தூய அறிவு நிலையான ' சாட்சித்தன்மை'. ஜடமும் அறிவும் இணைவதாலேயே உயிர் நடக்கிறது. உயிர் இயக்கத்திலிருந்தே 'மனம்' எழுகிறது. இந்த மூன்று தன்மையையும் பிரித்து பார்த்து , ( பொருட்களான ) ஜடத்தை, ஜட ( அசைவற்ற ) நிலையிலும், உயிரை ( மனதை ) ஒய்வு நிலையிலும், அறிவை வெறும் சாட்சித்தன்மையிலும், விடுவதே த்யானம் என்பது.

ஒரு கல்லைப்போல ஜடமான உடலை அசைவற்று நிறுத்தினால், உயிர் இயக்கம் ஒரு மேலான நிலையான அறிவு நிலைக்கு உயரும்.காரணம் நமது சாட்சித்தன்மைக்கு ( கவனத்திற்கு ) சிறிது உயிரோட்டம் தேவைப்படுகிறது. அந்த சிறு உயிரோட்டத்தில் மட்டும் நாம் நிற்கும்போது , இந்த பிரபஞ்சத்தின் மூல இருப்பு நிலையும், நமது இருப்பு நிலையும் ஒன்றாக இணைகிறது. இணைந்து லயமடைவதே த்யானம் என்பது.

No comments:

Post a Comment