Friday, October 8, 2010

தொகுப்புணர்வு.

நமது தியானத்தின் போது ஐம்புல உணர்வு,அறிவு ஓட்டத்தையும் , மனதின் அலைச்சலையும் படிப்படியாக குறைத்து அவைகளை முழுமையாக ஒடுங்க வைக்க ஒரு யோசனை.

அறிவு 'ஒளியால்' உண்டானது. மனம் ஒரு பூரண ஒளியை தரிசித்தால் தன் கிலேசம் மறந்து அது பூரண தெளிவை அடையும். அந்த பூரண ஒளி நமது புருவ மத்தியில் தோன்றுவதாகும். இந்த ஒளியை தோற்றுவிக்க நாம் நமது சுவாசத்தை சரியாக்க வேண்டும்.

நல்ல மூச்சு வாங்குகிற அளவுக்கு ஒரு உடல் பயிற்சிக்குப்பின் உடல் ஓய்வுக்காக ஒரு சீரான சுவாச ஓட்டம் அங்கு நிகழும். அப்போது செய்யப்படும் தியானத்தில் நமது கண்ணின் கரு விழிகளை அசையாமல் மேல் நோக்கி செருகி வைத்துக்கொள்ளல் வேண்டும்.

நம்மைப்பொருத்தவரை இப்போது அந்த கண்களில் எந்த வித ஸ்மரனையும் கிடையாது. ஒரு இறந்து போன மனிதனின் சவத்தில் உள்ள கண்ணைப்போல அது செயலற்று கிடக்க வேண்டும். இந்த கண்கள் இரண்டையும் இப்படி வைக்க காரணம், நமது ஐம்புலன்களின் செயல்களையும் செயல்படாது நிறுத்தி வைக்கும் சக்தி அதனிடம் உண்டு.

கருவிழிகளின் ஒரு சிறு அசைவுக்கூட மனத்தை எழுப்பி ஓட விட்டுவிடும்.

இப்போது மூச்சு சீராகி, சீராகி உங்கள் சுவாசத்தை உங்கள் வலது நாசியும், உங்களது இடது நாசியும் சந்திக்கும் இடத்தில் ( புருவ மத்தியில் ) இடது நாசிக்காற்றும், வலது நாசிக்கற்றும் சந்திக்கும் அதே இடத்தில் சலனமற்று மிகச்சிறு அசைவாக மட்டும் நிறுத்தினால் அங்கு நிலவும் பிராணன் ஒளியாக பிரகாசிக்கும். இதுவே பூரண ஒளி.

அந்த ஒளியை உங்கள் அறிவால் அல்ல, உங்கள் உணர்வால் மட்டும் அதை உணர முற்படுங்கள்.

உங்கள் உணர்வு என்பதே உங்கள் உடலிலுள்ள அனைத்து ஜீன்கள் உணரும் உணர்ச்சியாகும்.
உணர்வை அவைகளே உணருகின்றன. உங்கள் உடலிலுள்ள ஜீன்களின் மொத்த எண்ணிக்கை தெரியுமா? எத்தனை வித செல்கள் இருக்கின்றன தெரியுமா?



(1, How many cells are in the human body?

Sources give figures that vary from 50 to 75 trillion cells.

2, How many different types of cells are there in human body?

There are about 210 types of human cells.)

( மேற்கத்திய எண்முறையில் டிரில்லியன் என்பது ஓராயிரம் பில்லியனைக் (1000 X 1000 X 1000 X 1000)குறிக்கும். ஒரு டிரில்லியன், 1,000,000,000,000 என எழுதப்படுகிறது. ஒன்றின் பின் 12 சுழிகள். அறிவியல் முறையில் எழுதும்போது, ஒரு டிரில்லியன், 1012 என எழுதப்படும்.)


( உங்களை ஒரு தனியனாக அறிவது உங்கள் மனம், ஆனால் நீங்கள் தொகுப்பாக இருப்பதே உண்மை )

உங்கள் உணர்வையே நீங்கள் ஒரு தனியனாக உணர்ந்தால் அங்கு மனமே அதை அறிகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் .

உங்கள் உணர்வை நீங்கள் தொகுப்பாக உணர்வதே உண்மையுணர்வு.

அனைத்து ஜீன்களையும் தட்டி எழுப்பி புருவ மத்தியை நோக்கி ( மேல்நோக்கி ) அந்த புருவ மத்தியில் சுடரும் ஜோதியை உணருங்கள்.

உங்கள் உணர்வு தொகுப்பால் ( ஒரு உணர்வு அல்ல ) 'ஏக உணர்வாக' அந்த பூரண ஒளியை உணர உங்கள் ஜீன்கள் அனைத்தும் சூரியனைக்கண்ட சூரிய காந்தி மலர்களைப்போல மலர்ந்து அந்த சூரியனோடு இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும்.

நீங்கள் ஒரு தனி மலரல்ல! மலர் தோட்டம். அங்கு உங்கள் மலர்களுக்கும் அந்த சூரியனுக்கும் இடையில் வேறு எதுவுமேயில்லை.

ஒரு தனியனை பொதுவாக பிரிப்பதே ஆன்மீக சாதனை என்பதையும் அறியுங்கள்.

தனியனாக அறிவது மனம். ஏகமாக,முற்றுணர்வாக உணர்வது தொகுப்புணர்வு.

Wednesday, October 6, 2010

உணர்வுலகம்.

ஆளரவமற்ற ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அமர்ந்து கொள்ளுங்கள். எந்தவித இரைச்சலும் இல்லாத இடமாக இருக்கட்டும். ஒரு மணி நேரம் கண்களை மூடி உங்களுக்குள் நடக்கும் உணர்வோட்டத்தை மட்டும் கவனியுங்கள். நடுக்கடலில் அலைகள் எழுந்து, எழுந்து விழுவது போல உங்கள் உணர்வில் சிறு ஏற்ற, இறக்கம் மட்டுமே காண முடியும். பின்பு அதில் ஒரு லயம் ஏற்படும். உணர்வின் அடிப்படைத்தன்மையே இதுதான். தொடர்ந்து கவனித்து வாருங்கள். முக்கியமான ஒரு விஷயம், இதை அறிவால் அறியக்கூடாது. உங்கள் உணர்வாலேயே உணருங்கள். உங்களுணர்வு நகர்தலை உங்கள் உணர்வாலேயே உணருங்கள். இப்போது காண்பீர்கள் உங்கள் மனம் அமைதியடைதிருப்பதை. ஆச்சரியமாகத்தான் இருக்கும் இது.
இந்த உணர்வுலகு ஒரு இசைக்கருவி மாதிரி. இயல்பாக இதில் கேட்பது அதன் சுருதி லயம் மட்டுமே! உங்கள் மனம் அதை மீட்டுவதாலேயே அதில் பல் வேறு ராகங்களை ஏற்படுத்துகிறது. எந்த வித குற்றம் குறையும் இல்லாதது உங்கள்உணர்வுலகு. எவர் ஒருவரால் இதில் தொடர்ந்து சுருதி லயத்தை மட்டுமே கேட்க முடிகிறதோ ( மீட்ட முடிகிறதோ ) அவர் எளிதில் மனதை கடக்கும் உபாயத்தை அறிகிறார்.

அறிவு, உணர்வு, சாட்சித்தன்மை.

மனிதன் எத்தகையவன் என நாம் ஆராய்ந்து பார்த்ததால், மனிதன் மூன்று வகை தன்மையுடையவனாக இருப்பது தெரிய வருகிறது. ஓன்று : மனம், இரண்டு : உணர்வு , மூன்று : சாட்சித்தன்மை. இப்போது மனம் செயல்படும் விதம் பற்றி பார்ப்போம். மனிதன் மனதைக்கொண்டு அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்கிறான். அறிவாலே தனக்கு வெளியில், தன்னை சுற்றியும் நடக்கும் விஷயங்களையும் அறிந்து கொள்கிறான். தனக்குள் நடக்கும் விஷயங்களையும் அறிந்து கொள்கிறான். அறிவாலே புதிதாக யோசிக்கவும் செய்கிறான். அறிவாலே கற்பனை செய்யவும் செய்கிறான். மனதாலே நல்லது எது, கேட்டது எது எனவும் கண்டு கொள்கிறான்.முடிவும் எடுக்கிறான். கூர்ந்த மனதைக்கொண்டு மற்றவர்கள் அறியாத ஒன்றைக்கூட இவன் அறிந்த சொல்கிறான். தனது நுட்பமான மனதாலேஎல்லாவித கலைகளிலும் பரிணமிக்கிறான். நுண்ணறிவால் தொடர்ந்து ஒன்றையே ஆராய்ந்து விஞ்ஞானியாகிறான். மனம் தான் இவனுக்கு வாழ்க்கையை அமைத்து தருகிறது. இவன் எந்த வழியில் செல்லவேண்டுமென சொல்கிறது.இதனுடைய சிறப்புத்தன்மை என்னவெனில் இதன் நினைவகத்தன்மை. தன்னை பாதித்த விஷயங்களை தனது நினைவில் வைத்துக்கொள்கிறது. தனக்கு எது நல்லது அல்லது எது கேட்டது என அது ஆராயும்பொழுது அது தனது நினைவாக தொகுப்பிலிருந்தே விஷயங்களை எடுத்து அலசி ஆராய்கிறது. இது எப்போதும் எதையும் எதிர்கொள்ளும் தயார் நிலையிலேயே இருக்கிறது. இந்த உயிரைப்பாதுகாப்பதில் எப்போதுமே ஜாக்கிரதையாக இருக்கிறது. எதையுமே தன்னை சார்ந்தே நல்லதுகெட்டது என முடிவு எடுக்கிறது. ( தன்னலத்தையே குறிக்கோளாக கொண்டு செயல் புரிகிறது.) இது அனைத்தையும் அறிந்து கொள்ளும் அறிவாகவே இருக்கிறது.

அடுத்து உணர்வைப்பற்றி கவனிப்போம் . உணர்வு எப்போதும் நம் உடலை சார்ந்தே இருப்பது அறியவருகிறது. தனது உடலுக்கு வெளியில் நடக்கும் விஷயங்களை அது உணர்வதாக தெரியவில்லை. தவிர அறிவைப்போல நினைவகத்தன்மையோ, வெவ்வேறான உணர்வுகளை சேமித்து வைத்தாலோ இதனிடம் இல்லை. இது இப்போது இக்கணத்தில் மட்டுமே உணரப்படுவது.

உணர்வுக்கு இறந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் என முக்காலம் கிடையாது .

உணர்வுக்கு இக்கணம், இக்கணம், இக்கணம் மட்டுமே. எந்த உணர்வாக இருந்தாலும் இதனால் ஒரு கண நேரம் மட்டுமே உணர முடியும். தவிர உணர்வுக்கு பேதம் தெரியாது. உணர்வில் பேதத்தை அறிவதெல்லாம் அறிவுதான். உனது உடலில் இப்போது நடக்கும் உணர்வை உனது மனதால் நீ அறியாமல் இருந்தால் - உன் உணர்வுக்கு அது 'எப்போதும் உணர்கிற மாதிரி இப்போதும் இது ஒரு உணர்வு' என்கிறதாகவே இருக்கும்.

உணர்வான 'தனக்கு' உணர்வு பேதமில்லை, என்பதையும் உணர்வு உணர்வதில்லை. இந்த உணர்வு தளத்தை தனது மேடையாக்கி எல்லாவித பிரசங்கமும் செய்து கொள்வது உங்கள் மனமேதான். உங்கள் உணர்வு ஒரு அப்பிராணி. எல்லா கில்லாடிதனமும் உங்கள் மனதிடமே இருக்கிறது. சகோதர சகோதரிகளே இந்த நிலைமை உங்களுக்கு மட்டும்தான் என்றில்லை. அனைத்து உயிர்களின் நிலைமையும் இதுதான்.

மூன்றாவதான பேதமற்ற அந்த சாட்சித்தன்மையை பார்ப்போம். இந்த சாட்சித்தன்மைதான் இந்து மதம் சொன்ன பிரம்மம் , புத்தபிரான் சொன்ன சூன்யம், முகமது சொன்ன அல்லா,ஆதிசங்கரர் சொன்ன அத்வைதம்.

இனி,இவர்களைப்போல உங்கள் கண்டுபிடிப்பை நீங்கள் உலகுக்கு சொல்லுங்கள். இந்த சாட்சித்தன்மையே உங்களிலும் இருக்கிறது, அனைத்துயிரிலும் இருக்கிறது, எல்லாமுமாக இருப்பதுவும் இந்த சாட்சித்தன்மையே!

உங்களுடைய அறிவுக்கு அது சாட்சித்தன்மை. மற்றபடி அது 'பூரணம்'.

சரி இந்த மூவித தன்மை நமக்கு வாய்த்த காரணமென்ன? நுண்ணுணர்வால் ஆராய்ந்தோமானால் தெரியவரும். அணுவின் முக்குணம் நிலைமின் ஆற்றல், நேர்மின் ஆற்றல், எதிர் மின் ஆற்றல் என. நமது உயிரிலும், உடலிலும் இவைகள் செயல்படும் விதமே இந்த மூவித ஆற்றல்கல்தான்.

நிலை மின் ஆற்றல் நமது சாட்சித்தன்மை.

நேர்மின் ஆற்றல் நமது உணர்வு நிலை.

எதிர்மின் ஆற்றல் நமது அறிவு நிலை.


அணுக்கள் துகள்களால் ஆனது.

எலெக்ட்ரான் துகள் : எதிர் மின்னூட்டம் கொண்டவை.
புரோட்டான் துகள் : நேர் மின்னூட்டம் கொண்டவை.
நியூட்ரான் துகள் : மின் சுமை அற்றவை. ( நிலை மின் )

மின் புலத்தாலும், காந்தப்புலத்தாலும் பாதிப்படையும் துகள்கள்,
எலெக்ட்ரான் துகள்கள்.(பீட்டா துகள்கள்-கதிர் )
புரோட்டான் துகள்கள்.( ஆல்பா துகள்-கதிர் )

மின் புலத்தாலும், காந்தப்புலத்தாலும் பாதிப்படையாத துகள்கள்( காமா துகள்கள்-கதிர்) நியூட்ரான் துகள்.


ஒரு அணுவின் 'தன்னுணர்வும்' இத்தகையதாகவே இருக்கும். நிலை மின்னை சார்ந்தே நேர்மின் இருக்கிறது. நேர் மின்னை தொடர்பு கொண்டே எதிர்மின் இயங்குகிறது. ஒரு அணுவின் அடிப்படை தன்மை எதுவோ அதுவே மனித உயிரின் தன்மையுமாகும்.

நமது அறிவு வெளியுலகையும் காண்கிறது தொடர்பு கொள்கிறது. ஆனால் அதேசமயம் நமது உணர்வை விட்டு விலகுவது கிடையாது. அறிவும் உணர்வும் இணைந்தே செயல் புரிகிறது. உணர்வு சமநிலைக்காக அறிவு கனவு காண்கிறது. உணர்வு சாட்சித்தன்மையை சார்ந்தும் அதே சமயம் அறிவோடு தொடர்பு கொண்டும் இருக்கிறது. அறிவு காட்சித்தன்மையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது. ஒளி, நிழல், இருள் எனும் தெளிவு, குழப்பம், மடமை இந்த மூன்றுக்குள் எல்லாவித காட்சிகளும் அடங்கிவிடுகிறது. உணர்வு சப்த தன்மையுடம் நெருங்கிய தொடர்புடன் இருக்கிறது. சாந்தம், பதற்றம், தவிப்பு என இது இருக்கிறது.