Wednesday, March 31, 2010

13 : சரியான ஆதாரம்.


நீங்கள் இப்போது
பூமி எனும் வாகனம் மீது
அமர்ந்து இருந்து பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
இந்த வேகத்தை நீங்கள் உணருவதில்லை.
ஏன் தெரியுமா?
பூமி சூரியனை சுற்றி வருகிறது.
சூரியன் பூமியின் போக்குக்கு எதிரான திசையில்
தனது குடும்பத்தோடு பால்வீதி மண்டலத்தை சுற்றுகிறது.
பால்வீதி மண்டலமோ
அதன் தொகுப்பை சுற்றி வருகிறது.
இதுபோல ஒவ்வொரு சுற்றுப்பாதையும்
எதிரெதிரே அமைந்து இருப்பதால்
உங்களுக்கு பாலன்ஸ் கிடைக்கிறது.
இதுவே உங்களை நிறுத்தி ,
இருத்தி வைத்துள்ளது இங்கே.
நீங்கள் இங்கு இருப்பதற்கு காரணமும் இதுவே.
நீங்கள் இருக்கும் பூமியை நிலவு சுற்றி வருவது
உங்களுக்கு ஸ்பெஷல் எபெக்ட்.
இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு அணுவுமே
இந்த பிரபஞ்சத்தின் மையம்.
அவ்வண்ணமே அமைந்துள்ளது இப்பிரபஞ்சம்.
ஆகவே இந்த பிரபஞ்சம் எதோ தன்னிச்சையில் உருவானது இல்லை.
இந்த பிரபஞ்சம் வெறும் பொருட்களால் ஆனது இல்லை,
ஒரு பேரறிவு மனம் என்பதற்கு
மேற்கண்ட விபரங்களே சரியான ஆதாரம்.

12 : மன சிலந்தி.


யோகா முடித்து த்யானத்தில் நுழைந்தால்,

வெட்ட வெளியான

வெண்ணிற மைதானம் நெற்றி சுட்டியில் தோன்றும்.

ஒரு நொடியும் குறையாத விழிப்புணர்வோடு

இருக்கும்வரை இது தொடரும்.

ஒரு அரை நொடி கவனம் தவறினாலும்,

அந்த வெண்ணிற மைதானத்தில் அங்கங்கே

இருள் திட்டுகள் தோன்றி களங்கம் உண்டாகும்.

அந்த இருள் திட்டுகளை தொடர்ந்து

திசைக்கொரு ‘கால்’ முளைத்து

மன சிலந்தி வலை பின்ன தொடங்கிவிடும்.

(வலை-எண்ணம்) அந்த எடையில்லா பூச்சியின்

இந்த வலைப்பசையில் சிக்கிக்கொண்டு

அதிலேயே லயிப்பதும் உண்டு.

தீவிர கவனம் கொண்டு

அந்த வெண்ணிற வெட்ட வெளியில் களங்கம் ஏற்படாது

காத்து கொள்வோருமுண்டு.

Saturday, March 27, 2010

11 : செத்தாரைப்போல திரி.


பதினொன்று
பத்து
ஒன்பது
எட்டு
ஏழு
ஆறு
ஐந்து
நான்கு
மூன்று
இரண்டு
ஒன்று
ஒன்றுமில்லை

Sunday, March 21, 2010

10 : நமது இருப்பு நிலை.

நண்பர்களே, நீங்கள் இருக்கிறீர்களா? இருக்கிறோம் என்றால் அந்த இருப்பை எப்படி அறிகிறீர்கள்? கொஞ்சம் கண்மூடி யோசித்து பாருங்கள். பொதுவாக நம் இருப்பை நாம் நமது உடல் முழுவதும் உணர்வதாக நினைக்கிறோம். கொஞ்சம் ஆழமாக பாருங்கள். நாம் நமது இருப்பை நமது முதுகு தண்டுவடத்திலேதான் உணர்கிறோம். நமது ஐம்புல உணர்வை விடுத்து,{ஐம்புல உணர்வு உடல் முழுவதும் உள்ளதாக உணர்வது ) நம் தண்டுவட உணர்வுக்கு போனோமானால், நமது இருப்பு உணர்வு முழுவதும் இந்த தண்டுவடத்தில் உணரமுடியும். நமது ருசி, வலி, இன்னபிற உணர்வுகளையும் நாம் இங்கேதான் உணர்கிறோம் என்பதையும் கண்டுகொள்வீர்கள். த்யானத்தின்போது இதை தெளிவாக உணர முடியும். இன்னும் மிக ஆழ்ந்த த்யானத்தில் இந்த உணர்வு ஒரு புள்ளியில் ஓடுங்குவதையும் அறிய முடியும். நமக்கு இருக்கும் இருப்பு உணர்வைப்போலவே, இந்த பிரபஞ்சத்துக்கும் ஒரு இருப்பு உணர்வு இருக்கிறது. நமது இருப்பு உணர்வும் அந்த பிரபஞ்ச இருப்பு உணர்வும் ஒரு லயமாவதே ஞானமடைதல் என்பது. நமது இருப்புணர்வை தவிர, நம்மில் நிகழும் மற்றவை அனைத்தும் மாயை நிரந்தரமில்லாதது. அதே போல இப்பிரபஞ்சத்தின் இருப்புணர்வு மட்டுமே நிலையானது. நம் காட்சிக்கு புலனாகும் இந்த தோற்ற பிரபஞ்சமே ஒரு மாயை நிரந்தரமில்லாதது. . இருப்புணர்வு மட்டுமே நிலையானது.நிரந்தரமானது. ஆகவே நமது இருப்பு உணர்வை ஆழ்ந்து கவனிப்போம்.

Saturday, March 20, 2010

9 : ஆனந்த அலை.


இந்த பிரபஞ்ச சாகரத்தில் நீ ஒரு துளி, நான் ஒரு துளி, அவன் ஒரு துளி.
இந்த சாகரத்தில் உள்ள துளிகள் அனைத்தும்
தனித்தன்மை வாய்ந்தது,அதனதன் உள் அமைப்பில்.
துளிகளால் ஆனதுவே சமுத்திரம்.
இந்த துளியின் உள் அமைப்பும் மாறிக்கொண்டேதான் இருக்கிறது,
(இந்த உள் அமைப்பை நிர்ணயிப்பதும் அந்த சாகரமே)
துளிக்கு ஒரு தனி நிலை தொடர்வதில்லை.
இந்த துளிக்கு என ஒரு தனி வாழ்வு உண்டா?
அதன் எதிர் நீச்சல்தான் என்னே? அது எதை சாதிப்பதற்காக இந்த எதிர் நீச்சல்?
அதற்கு பாவம் ஓய்வுகூட கிடையாது.
அந்த துளி எந்த உண்மையை நிலைநிறுத்த இந்த எதிர் நீச்சல் போடுகிறது?
அந்த துளியே இந்த சமுத்திரத்தின் ஒரு பகுதிதான்
.இதை அறிந்துகொள்ளக்கூட அதற்கு நேரம் இல்லை.
அப்படி ஒரு போராட்டம்.
சமுத்திரம் தான் துளியின் கதியை என்றும் நிர்ணயிக்கும்,
துளியால், 'துளிக்கூட' சமுத்திரத்தின் கதியை நிர்ணயிக்க முடியாது.
துளி போராட்டத்தை விடுத்து தன்னை அறிந்து- தன்னை மறந்து
சமுத்திரத்தோடு இயைவதுவே அதற்கு விதிக்கப்பட்டது.
அப்படி இயைந்தால் துளிக்குள்ளும் அலை நிகழும்
அது ஆனந்த அலை.

Friday, March 19, 2010

8 : அறிவு - பேரறிவு.


அறிவு

நமது 'உடல்' எல்லையோடு இயங்குவது
நமது அறிவு
அதாவது -மனம்.
அவரவர் அறிவு,

நமது சிந்தனைக்கு எல்லை இருப்பதால்,
அதற்கு வடிவம் உண்டு.

பேரறிவு,

இந்த பிரபஞ்சம் உட்பட அகண்டு,விரிந்து ,
எல்லையே அற்று இயங்கிக்கொண்டு இருப்பது பேரறிவு.
முற்றறிவு.

அந்த பேரறிவு தான்
இந்த சின்ன உடலிலும் இயங்குகிறது.

அந்த பேரறிவுக்குள் தான் நாமும் இருக்கிறோம்.

நமக்கு 'எல்லையோடு' மட்டுமே எண்ணம் கொள்ள தெரியும்.
நமக்கு எல்லைகளற்ற தன்மையை உணர தெரியாது.

எல்லைகளற்ற தன்மையை அறிவதே ஆன்மிகம்.

நாம் எப்போது இந்த உடல் எல்லையைத்தாண்டி,
எல்லையேயில்லாத
அந்த அடிப்படையான அறிவை அறிவது?

அது எல்லைகளற்று இயங்குவதால்

அதற்கு ஒரு வடிவம் இல்லை.

அதற்க்கு ஒரு 'வடிவம்' இல்லை என்பதால் நம்மால் அறிய முடிவதில்லை.

நாம் பழக்கத்தின் வசப்பட்டவர்கள்.

அந்த பேரறிவை தெரிந்து கொள்ள 'புதிதாக' பழகுவோம்.

7 : வலியும் - சுகமும்.



நான் என்பது வலி உணர்ச்சி.'நான்' என்பதை நாம் உணரும் விதம் இதுதான்.( அது குறை உணர்ச்சி )
அது உடல் எனும் எல்லைக்கு உட்பட்டு உணரப்படுவது.
அந்த முழுநிலை என்பது சுக உணர்ச்சி. இது எல்லையற்ற தன்மையில் உணரப்படுவது.
அந்த சுக உணர்வை உணர்வது 'நான்' அல்ல! எம்முள் இருக்கும் அந்த முழுநிலையே அச்சுகத்தை அறிவது.
(அதாவது அந்த எல்லையற்ற முழுநிலைசக்தி நான் எனும் உடல் எல்லையையும் உள் அடக்கிய முழுமை .)
(அந்த எல்லையற்ற முழுநிலை விகசிப்பை உடல் எனும் 'எல்லைக்குள்' அடக்கி வைத்திருப்பது தான் தவிப்பு,
- அதில் உணரும் உணர்வுகளே வலி - )
எந்த உணர்வானாலும் உடல் எல்லைக்குள் உணரப்படும்போது அது வலியை சார்ந்தே உணரப்படும்.அது குறை உணர்வே!
எந்த உணர்வானாலும் அந்த எல்லையற்ற விகசிப்பில் உணரப்படும்போது அது சுக உணர்வாகவே உணரப்படும்.
ஆக! வலி 'நான்'.
சுகம் 'முழுநிலை'.
வலிக்கு உடலே எல்லை. சுகத்துக்கு எல்லையே இல்லை.
-(அந்த எல்லையற்ற முழுநிலை விகசிப்பை உடல் எனும் எல்லைக்குள் அடக்கி வைத்திருப்பது தான் தவிப்பு,பதற்றம். -
அதில் உணரும் உணர்வுகளே வலி )
-உடல் எல்லைக்குள் அடக்கி வைத்திருக்கும் அந்த விகசிப்பை
கட்டவிழ்த்து விட்டாலே போதும்-
அது எல்லையற்ற நிலையில் தன் சுய சுபாவத்துக்கு வந்து விடும்.
நமக்கு தவிப்பும் இல்லை, வலியும் இல்லை,திருப்தி, திருப்தி, திருப்தி,
ஒரே பரம சுகம் மட்டுமே!

6 : மனமும்-அலையும்.



ஒரு அளவுள்ள சிறு பாத்திரத்தில் உள்ள தண்ணீர் பரப்பில், நடுவில் தோன்றும் அலையானது அதன் எல்லையாகிய பத்திரத்தின் விளிம்பை அடைந்ததும், அது திரும்பி புறப்பட்ட இடத்தை நோக்கியே வருகிறது. ஒரு குளத்தின் நடுவில் தோன்றும் அலையானது அதன் விளிம்பான கரையை அடைந்ததும் அது திரும்பி புறப்பட்ட இடத்தை நோக்கியே வருகிறது.நீர் பரப்பின் நடுவிலிருந்து அலைகள் எழும்பி வெளி நோக்கி போவதும், ஏற்கனவே கரையிலிருந்து திரும்பி வரும் அலைகள் இந்த அலைகளை வெட்டி தடுப்பதுமான இந்த மாதிரி நிகழ்வே மனத்தில் நிகழும்போது எண்ணமாக அறியப்படுவது. இதுவே ஒரு எல்லைகளற்ற நீர் பரப்பில் நிகழுமானால், நீர்பரப்பின் மையத்திலிருந்து புறப்படும் அலைகளானது எந்த தடுப்பும் இல்லாது தொடர்ந்து எல்லைகளற்ற திசைகளில் ஓடுகிறது. அங்கு எந்த எண்ணமும் தோன்றுவதில்லை. உங்கள் மனதுக்கு நீங்கக் எந்த எல்லைகளையும் நிர்ணயம் செய்யாமல், மனதை எல்லையற்ற தன்மையில் வைத்திருந்தால், உங்கள் மனதும் எண்ணங்கள் அற்று நிர்மலமாக இருக்கும்.மனம் எல்லையுள்ளதாக இருக்குபோது எண்ணங்கள் தொடந்து தோன்றுகின்றன. மனம் எல்லைகளற்று இயங்கும்போது எண்ணங்கள் எதுவும் தோன்றுவதில்லை. அலையும் எதிரலையும் மோதிக்கொள்வது எண்ணம். எதிரலைகள் இல்லாது ஒரே அலைகளில் தோன்றுவது லயம். மனதை எல்லைகளற்று வைத்திருந்து கவனியுங்கள்.

Friday, March 12, 2010

5 : இறையும்-மாயாவும்.

இங்கு இருப்பது இரண்டு மட்டுமே! ஒன்று மாயா. மற்றது இறைநிலையறிவு.

மாயா எல்லா மாற்றங்களையும் உடையது.

இறைநிலையறிவோ நிலையானது. எந்தவித மாற்றமும் அடையாதது.

இறைநிலையோ இருப்பு உணர்வாகவும், சாட்சி தன்மையாகவும் நமக்கு விளங்க கூடியது.

வளமை, வறுமை- சுகம், வலி-இதுபோன்ற விஷயங்களை மாயா

தனது கட்டுப்பாட்டில், அதிகாரத்தில், ஆட்சியில் வைத்து இருக்கிறது.

(உங்களுக்கு பணம் வேண்டும், அதிகாரம் வேண்டும் இன்னும் இதுபோன்ற
தேவைகளுக்கு நீங்கள் மாயாவிடம் தான் போய் கேட்க வேண்டும்.
அதை உங்களுக்கு தருவதும், அல்லது அதை உங்களிடமிருந்து பறித்து கொள்வதும்
மாயாவின் ஆட்சிக்கு உட்பட்டு இருக்கிறது. சர்வ நிச்சயமாக இந்த அதிகாரம்
இறையறிவிடம் இல்லை.இதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும்.)

அந்த இறைநிலை அறிவிடம் நிம்மதி, பூர்ணதன்மை, உயிர்ப்பு மட்டுமே உள்ளது.

இறையிடம் போனால் இதுமட்டுமே கிடைக்கும்.

ஆனால், அந்த மாயா இறையறிவுக்கு கட்டுப்பட்டே இயங்குகிறது.